பிடித்த பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிடித்த பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரஜினிகாந்த் படத்தில் வரும் அழகான தமிழ் பாடலுக்கு இங்கிலீஷ்காரங்க எப்படி பாடுறராங்க

ஆஹா என்ன இப்படியும்  நடக்குமா!....




ரஜினிகாந்த் படத்தில் வரும் ஒரு அழகான தமிழ் பாடலுக்கு
இங்கிலீஷ்காரங்க எப்படி பாடுறராங்க

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

இன்னைக்கு எத்தனை விதமான பாடல்களை வேண்டுமானாலும் நான் கேட்கலாம்.. ரசிக்கலாம்.


எனக்கு பிடித்த பாடல்:

 

Song: malargalai poal - பாடல்: மலர்களைப் போல் தங்கை
Movie: paasa malar- திரைப்படம்: பாசமலர்
Singers: T.M. Soundararajan
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: க்விஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1961 

 

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்


மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்


கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்


ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்


கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்


பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

 

 

உடுமலை நாராயண கவி.................பாடல் வரிகள்

பாடல் வரிகள் உங்களுக்காக  ...



கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
கா கா கா



சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா



எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க




பாடல்: கா கா கா கா கா கா
வரிகள்: உடுமலை நாராயண கவி
படம்: பராசக்தி
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
இசை: ஆர்.சுதர்சனம்
ஆண்டு: 1952 
Original source:   தமிழ்மணி



உடுமலை நாராயண கவி பற்றி..................

                        புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயணகவியார், தம் 82ஆம் அகவையில் - தி.பி. 2012 (23.05.1981)ல் உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார். அந்த ஆவணத்தில், ‘செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை. மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள். இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது. இனி ஒரு பயனும் இல்லை. கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!’ என்று எழுதிவைத்துள்ளார். காலத்தை வென்ற - வரலாற்றுப் புகழ்மிக்க எண்ணற்ற பாடல்களை எழுதி, தமிழ்க்குமுகத்திற்கு விழிப்புணர்வை ஊட்டிய உடுமலை நாராயணகவியாரின் மறைவு நமக்கெல்லாம் மிகப்பெரிய இழப்பாகும்.







உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...பாடல் வரிகள்.

எப்போது கேட்டாலும் நெஞ்சை கசக்கி பிழியும் இசை மற்றும் பாடல் வரிகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இசைஅரசன் சீர்காழியின் வெண்கல குரல் .


கண்களை மூடி அமைதியாக கேளுங்கள்கண்களில் நீர் வரவில்லைஎன்றால் .......................உங்கள் கண்ணீர் சுரப்பியில் கோளாறு என்ற பொருள்.

இந்த பாடலின் தரமான இசை ...





படம் : கர்ணன்
பாடல் : கவியரசர்
குரல்: சிர்காழி கோவிந்தராஜன்




  • உள்ளத்தில் நல்ல உள்ளம்
    உறங்காதென்பது

    வல்லவன் வகுத்ததடா , கர்ணா

    வருவதை எதிர்கொள்ளடா .


  • தாய்க்கு
    நீ மகன் இல்லை
    தம்பிக்கு அண்ணன் இல்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும்
    உன் பழி கொண்டேனடா


  • மன்னவர் பணி ஏற்கும்
    கண்ணனின்
    பணி செய்ய
    உன்னடி பணிவானடா ,கர்ணா
    மன்னித்து அருள்வாயடா ,


  • செஞ்சோற்று
    கடன்தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ,
    கர்ணா
    வஞ்சகன் , கண்ணனடா

Original source: http://www.eegarai.net/t27338-topic#ixzz24fp0OsYi

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா .....

சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் புரியும் சூரபத்மன் எனும் கொடிய அரக்கன் சிவனது சக்தியைத் தவிர வேறு யாதொரு சக்தியாலும் தனக்கு மரணம் இல்லையெனும் வரத்தை சிவபெருமானிடம் பெற்ற பின்னர் ஆணவத்தால் மதி மயங்கி, தேவேந்திரன் உள்ளிட்ட வானவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளுகிறன். தேவேந்திரனின் மனைவியான இந்திராணி சூரபன்மனிடமிருந்து எப்படியோ தப்பிச் சென்று சிவபெருமானின் கருணையை வேண்டிப் பாடுகிறாள். 





Song: Vellimalai mannava - பாடல்: வெள்ளி மலை மன்னவா
Movie: Kandhan karunai - திரைப்படம்: கந்தன் கருணை
Singers: S. Varalakshmi - பாடியவர்: எஸ். வரலக்ஷ்மி
Lyrics: Poovai Senguttuvan - இயற்றியவர்: பூவை செங்குட்டுவன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1967 



 
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ 

அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா?
ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா?
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா?
அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ 


வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன
வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன? 


தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு ஆ... வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)





என்னைக் கவர்ந்த பாடல் இது.
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாடல் : முத்துக்கு முத்தாக...
படம் : அன்புச் சகோதரர்கள்
பாடகர் : திரு.கண்டசாலா
பாடலின் mp3 : http://odeo.com/show/7899703/1181981/download/MuththukkuMuththaaka.mp3

பாடலின் வரி வடிவம் இதோ:

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)
=============================================
முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக
(முத்துக்கு...)

தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி
(முத்துக்கு...)

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்
அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்
சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒன்றுபட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை
(முத்துக்கு...)

ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா
(முத்துக்கு...)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீ

பிடித்த பாடல் வரிகள்..உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

பிடித்த பாடல் வரிகள்
-------------------------------------

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்


உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்



(உன்னை)

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா

தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா



(உன்னை)

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு நிகர் இல்லையா

பிறர் தேவை அறிந்து கொண்டு

வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா



(உன்னை)

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு

மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்



உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்