என் தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என் தாயின் தாயன்பை உணர்ந்த மற்றொரு தருணமது ....



அன்றொரு  நாளில்
எனக்கு காயம் ஏற்பட
யாரோ ஒருவர்
உனக்கு சொல்ல
மனம் கலங்கி
கண்ணீர் விட்டு அழுதாயே ....

சில நாட்கள் வரை
மனம் வெதும்பி
உணர்வற்றவளாக,
சாப்பிடாமலும் தூங்காமலும்
இருந்த அந்த
தருணங்களை
நினைக்கில்  
எனக்கு வலித்த வலியை விட
நீ அழுத போதும்,
உன் முகம் கண்ட துக்கத்தை நினைக்கில்
அம்மா என் கண்கள் கலங்கி  குளமாகி
கண்ணீரும் வருகிறது..

என் தாயின்
தாயன்பை உணர்ந்த
மற்றொரு  தருணமது ....




என் தாய் தெய்வமென்று..............................



தாய் தந்த சுகம்
தனக்கு யாரும் தருவதற்கில்லை ..

எந்த வகை அன்பும்
இதற்கு நிகரில்லை ..

முன்னம் நாளில் தந்திட்டாய்
இனி பெறுவதற்கில்லை ..

எத்தனை கோடி உறவும்
இந்த உறவிற்கு இணையில்லை ...


என்று அடைவோம்
இந்த இன்பத்தை..
தன்னிகரில்லா தாயன்பை........

அம்மா ....நீ
மட்டும் போதும் அம்மா.....


நீ கற்று கொடுத்த
வார்த்தைகளும்
அன்பும்
குணமும்
தான் ...நீ என்று உணர்கிறேன் ...

உன் அன்பை 
வெளிபடுத்த வார்த்தைகளில்
முடியாவிட்டாலும் ......




என் இதயத்தின் ஏக்கம்
உன்னை உணர்கிறது...
................
...............


என் தாய்
தெய்வமென்று.....












வேலு . மகேஷ்