எங்கள் தலைவன், கருமை நிற கண்ணன் பேச்சிலே மன்னன், சிந்தை சிற்பி, சயனைடு குப்பி, செயல் சிங்கம், பிரச்சர பிரங்கி, ஒருவாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்க கூடிய போர் குணம் கொண்ட போர் வாள்,என்று போற்ற படும் எங்கள் தலைவர்.... பாபு(EMD SYSTEMS, Colleague) அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிடித்த கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிடித்த கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழுந்தவனுக்கு ஒரு கடிதம்
.......................
எழுந்திரு தோழா,
தோல்வியொன்றும் சமுத்திரமன்று
துவண்டு போக,
நீ எழுந்து நின்றால்
அது சிறிய சாலவம்
கரங்களில் அள்ளிய வாழ்க்கை
விரல்களின் இடுக்கு வழி
ஒழுகியதென்றா கவலையுற்றாய்
நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்பா
எழுந்திரு...
மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு
நான்
இமயமாய் உயர வேண்டுமென
இறைவனிடம்
வரம் கேட்கிறாய்,
புத்தியை பூட்டி
சாவியை தொலைத்தவனே !!
இறைவன் வீணைதான் தருவான்
இசையை நீதான் மீட்டிக்கொள்ள வேண்டும்
நடக்கும் வரைதான் நதி
தன் நடையை நிறுத்திக்கொண்டால்
அது குட்டை
இங்கு விழுவதல்ல அவமானம்
விழுந்தவன் அசைவற்று போனால்
அதுதான் அவமானம்
விழுந்த உன் விரல் அசைந்தாலும் போதும்
நீ புதிதாய் பிறந்து விடுகிறாய்
எழுந்திரு
வாழ்கையை வென்றவனெல்லாம்
அதிகாலை எழுந்தவனாம்
குறித்துக் கொள் உன் படுக்கையில்
கனவுகளோடு கண்களை மூடு
குறிக்கோளோடு கண்களை திற
உன் முன் இருப்பது விளக்கா
நீ தீபம் !
முட்களின் புதரா ?
நீ தீ !!
தாகமாய் இருந்த முயற்சிகளை
சுவாசமாய் மாற்று
இதுவரை நீ கடந்து வந்தது
கள்ளிக்காடு
இனி தாண்டப் போவதோ
நெருப்பு பள்ளங்கள்
ஆனால்
சினங்கள் களைந்து
புன்னகை எனும்
சிறகுகள் தரித்துக் கொள்
தோல்விகள் உன்னை சூழ்வினும்
காற்றில் கரையும் கற்பூரம் போல
திரவமின்றி வாயுவாக
பதங்கமாகிப் பழகு
இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,
காலங்களின் வயது நரைக்கும் போது
அது வைரமாகிப் போகும்.
Posted By,
கமலேஷ்
பிள்ளைகளே எங்களை கைவிட்ட துக்கத்தில்....

நாங்கள் தாழ்ந்து நிற்பதால்
உங்களிடம் தாழ்ந்தே கேட்கிறோம்
எங்களுக்கு உணவிடுங்கள் என்று..
உங்களால் முடியுமானால்
உதவிடுங்கள்.......
இல்லை என்றால்
எங்களை இழிவுபடுத்தாதிர்கள்...
நாங்கள் உறவுகளை
இழந்த ரணத்தில்
பிள்ளைகளே
எங்களை கைவிட்ட
துக்கத்தில்
மனதில் அழுது
நடை பிணமாய்
கையில் பாத்திரம் ஏந்தி
நாங்கள் எதற்காய் வாழ்கிறோம் என்ற
கேள்விகுறி எங்கள் உடம்பிலும் தாங்கி
உங்கள் முன்னால் நிற்கிறோம்...
கண்ணுமக்கா...
நீங்கள் எங்கள போல்
அல்லாது
குடும்பமாய் வாழ
அந்த கடவுளிடம்
வேண்டுகிறேன்..
படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!
கார்த்திகை தீப திருநாள்

இந்த கார்த்திகை தீப திருநாள் தான்!
அன்றும் இன்றும் என்றும்
நான் அடைய வேண்டிய இலட்சியத்தையும்
செய்ய வேண்டிய செயல்களையும்
ஞாபக படுத்தும்.
ஜோதி சுடர் இருளை நீக்கும்
சோம்பல் ஒழியட்டும்.
புன்னகை தவளட்டும்
மனம் ஒளி போல் பிரதிபலிக்க வேண்டும்
இன்று மகிழ்ச்சி கரமான நாள் தான்..
எல்லாருக்கும் பொதுவான இறைவன் அருளட்டும்..
ரத்ததானம் செய்திடுவீர் -- கவிதை
( மறைந்து போன எனது நண்பனுக்காக எழுதிய இக்கவிதை அவனுக்கே சமர்ப்பணம் )
வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நீயும் பிறந்தாய்
நண்பா
வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நானும் பிறந்தேன்
ஓர் நிலையில் ஓர் புள்ளியில்
நானும்,நீயும் சந்தித்தோம்
சந்தித்த நொடியில் உனை பற்றி
சிந்திக்க மனம் செல்ல வில்லை
நாட்கள் நகர நகர
நம் நட்பும் ஆழமானது
எத்தனையோ விவாதங்கள்
நமக்குள் பிறந்தது
ஒன்றிலே நம் எண்ணங்கள்
ஒன்றாகும்
ஒன்றிலே நம் எண்ணங்கள்
வேறாகும்
விவாதங்கள் ஆயிரம் பிறந்தாலும்
எண்ணங்கள் மாறுபட்டு இருந்தாலும்
நம் நட்பென்றும் பிரியாமல்
நம்பிக்கையோடு நடை போட்டது
புத்தகம் படித்தால் தான்
ஞானம் பிறப்பதில்லை
மனித வாழ்வை படித்தாலே
ஞானம் பிறந்திடுமே
ஆம்!உன்னோடு நட்பு கொண்டதினால்
ஓர் உண்மை கண்டேனே
மனித ஓட்டம் ஓட
குருதிஇன்றி ஓர் அணுவும்
அசையாதே
எத்தனையோ பகல்கள்
குருதிக்காக நீ ஓடிய ஓட்டம்
எத்தனையோ இரவுகள்
குருதிக்காக நீ மறந்த தூக்கம்
மொத்தமாய் சுயநலமின்றி
செய்து நின்றாயே
என் எண்ணம் மொத்தமும்
உன்னோடு கலந்து நின்றது
அவ்விடம் தானே
எத்தனை நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தியது
எத்தனை உள்ளங்கள் உன்னால் வாழ்ந்தது
வாழ்த்திய உள்ளங்களும்
வாழ்ந்த நெஞ்சங்களும்
ஒன்றாகி திரண்டு வந்தால்
நாம்
வசித்த பகுதி தான் திகையுமோ?.
பூமியில் பிறந்தவர் எல்லோரும்
பிறப்பிற்கு அர்த்தம் கொடுத்திடலாகாது
இருந்தும் நண்பா
இப்பூவுலகில் உன் பிறப்பிற்கு
நீ தான் அர்த்தம் கொடுத்து
நின்றாயே
படைத்தவனும் உனை கண்டு
பயந்து இருப்பானோ?
எங்கே நீயும் ஓர் நாள்
படைத்தவன் ஆகி விடுவாயோ
என நினைத்தோ
உன்னையும் தன்னோடு விண்ணில்
சேர்த்துக் கொண்டானோ
நண்பா நீ
விண்ணோடு கலந்தாலும்
மண்ணோடு "ரத்ததானம்" எனும்
விதையை விதைத்து
பலர் நெஞ்சில் இன்றும்
என்றும் எங்களோடு வாழ்கிறாயே
--- உன் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
Posted By,
Anantha.
.
சிரித்து கொண்டே மிதிவண்டியில்
.
காலையிலே ஒரு பெரியவர்
மிதிவண்டியில் ஏறி கொண்டார்.
என்னிடம் சொன்னார்.
"இந்த உலகத்துலே
மனிதர்க்கு [மனுஷாளுக்கு]
கொடுக்குறது தான்
உயர்ந்தது.
அதை விட உயர்ந்தது
இந்த உலகத்தில்
ஒண்ணுமில்ல.."
சிரித்து கொண்டே,
மிதிவண்டியில் பயணத்தை
தொடர்ந்தேன்.
.
.
.
இது மழைக்கு மட்டும் அல்ல..

-
சென்னை தாம்பரம்
ரயில் நிலைய பக்கத்திலும்
ஹிந்து மிஷன் மருத்துவமனை
எதிரிலும் காண்கிறேன்
இருக்க நல்ல ஒரு வீடும்
உடுக்க நல்ல உடைகளும்
இல்லாமல்
இவர்கள் மழைக்கு ஒதுங்கி
இதோ இந்த தாம்பரம் பாலம் கீழ்
மழையிலும்
சின்னஞ்சிறு குழந்தைகளும்
முதியவர்களும்
தனது வீடு இழந்து
இங்கே சமைத்து சாப்பிடுகின்றார்
மனநலம் குன்றியோரும்
பத்திற்கும் மேற்பட்டோர்
அங்கே திரிகின்றார்..
இன்னும் ஓன்று ..
வருவது என்னில்
கண்ணீர் மட்டும் அன்று..
அதோ பிள்ளைகளால் கைவிடப்பட்ட
மூதாட்டிகள் சிலபேர்
அவர்கள் கையில்
உணவை கொடுக்கும் போது
நான் கண்ட
"கடவுள் நீதான்பா !" என்பார்கள்
இவர்கள்
தெருவிலும்
மழையிலும்
பிச்சை எடுத்தும்
கைவிடபட்டும்
அலைகின்றனர்.........
ஆனால்
கல் மனதும்
கரைய மறுக்குது..
நனைந்த உடம்பு குளிர்கிறது
ஆனால் எங்கள் உள்ளம் குளிரவில்லை ...
மழையே
உனக்கு
நாங்கள் விலை கொடுப்பதில்லை
சில வேளை
எங்களையும்
எங்கள் மனதும்
மழையில்
குளிர்விக்கிறாய்
இது மழைக்கு மட்டும் அல்ல..
சில பேர் மனதில்
ஈரம் கொஞ்சம் இருந்தால்
இவர்கள் இங்கு இருக்க மாட்டார்..
எத்தனை நாள் தான் ஆகுமோ?
இந்த மழை தீரவென்று
அவர்கள்
ஏங்குகின்றார்
நான் ஏங்குகிரேன்
எப்போது மனிதர்கள்
நாங்கள் அனைவர்களும்
ஏசுவும், வள்ளலாரும் சொன்ன
அன்பு இதயம் பெறுவோம் என்று...
அன்று
முதியோர்
கைவிட படமாட்டார்
ஆதரவற்றோர்
இருக்க மாட்டார்
ஏழைகள்
இருக்கமாட்டார்
சமத்துவமும்,
அன்பும்
தான் அங்கு இருக்கும்....
எங்கள் குழந்தை தான்..

............................................
முதியோர்களும்
மனநிலை பாதிக்க பட்டவர்களும்
எளியோர்களும்
உணவுக்காய்
பரிதவிக்கும் போது
காணாமல் போவது
என் இயல்பு இல்லையே..
சேவை செய்ய
அனுமதி கொடு இறைவா..
அவர்கள் அழும்போது
நானும் அழுகிறேன் இறைவா?
இறைவா,
"அவனும் நானும் ஓன்று "
என்ற உணர்வை கொடு..
நாங்கள் எல்லோரும்
இந்த உணர்வை பெறணும் இறைவா !..
கைவிடபட்டவர்களும்
எங்கள் குழந்தை தான்..
நாங்கள்
கரம் பிடித்து
வழி நடத்தி செல்ல
கருணை வேண்டும் இறைவா!..
ஆறுதல்

வரதட்சணை கொடுமையின்னு
பொறந்த வீடு வந்து சேர்ந்தா
நான் பெத்த மூத்த மக...
காலேஜில் படிக்கும் கடைசி மகனுக்கு
பீஸ் கட்டப் பணமில்ல...
பாதில விட்டுப்போட்டு
காரேஜில் சேர்ந்துகிட்டான்...
வச்சிருந்த கால் பவுனும்
மளிகைக் கடை பாக்கின்னு
அடகுக் கடை போயிருச்சு...
கார்ப்பரேஷன் குழாயில்
குடிநீரே வர்ரதில்ல..
குடத்துக்கு ஒரு ரூபாய்
குடுத்து மாளவில்ல...
ஓலைக் குடிசைன்னாலும்
இருக்கிறது சொந்த வீடு
வாடகைப் பிரச்சனைன்னா
ரோட்டுக்கு வந்துருப்போம்...
இவ்வளவு பிடுங்கலிலும்
இருக்கவே இருக்குது...
இலவச தொலைக்காட்சி..!
காற்றாலை புண்ணியத்தில்
கரண்ட்டும் வந்துச்சுன்னா,
மறந்திருப்போம் கவலையெல்லாம்...
கரன்ட்டே இல்லன்னாலும்
சமாளிக்க வழி இருக்கு...
தெருமுக்கில் டாஸ்மாக்கு
பொண்டாட்டி மறைச்சு வச்ச
பணமிருக்கு குவாட்டர் வாங்க...
அழுத்தும் கஷ்டமெல்லாம்
ஆறுதல் சொல்லி சொல்லி
ஓடுது எங்க வாழ்க்கை...
எப்பத்தான் விடிவுகாலம்
அதுமட்டும் தெரியலங்க...
- சுந்தர்,ருவாண்டா, மத்தியக் கிழக்கு ஆப்பிரிக்கா
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)