படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!

தற்போது தலைமுடி உதிர்வது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தினமும் பலருக்கு வருத்தத்தைத் தரும் ஒன்றும் இதுவே. இதன் காரணமாகவே பலருக்கு மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படுகிறது.
தலைமுடிக்காக செலவழிப்போர் ஏராளம். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. சிலர் தலைமுடி அதிகம் கொட்டுகிறது என்று டிவிக்களில் விளம்பரப்படுத்தும் கண்ட ஹேர் ஆயில்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.
இப்படி கண்டதை தலைமுடிக்கு பயன்படுத்தினால், முடியின் ஆரோக்கியம் போய், முடி அதிகம் கொட்டி வழுக்கை கூட ஏற்படும். எனவே உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், முதலில் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.
இங்கு முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தேங்காய் பால்
தேங்காய் பாலில் மயிர்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறை தேங்காயை அரைத்து பால் எடுத்து, அந்த பாலைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து ஊற வைத்து அலசுங்கள். இப்படி செய்து வர, முடி உதிர்வதை தடுக்கலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணத்தால், ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்கள் மற்றும் வறட்சியால் முடி உதிர்வது தடுக்கப்படும். அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்காலப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணநேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் முடி உதிர்வது நிற்பதோடு, வழுக்கைத் தலையிலும் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
ஆயில் மசாஜ்
வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஓர் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி தூண்டப்படும்.
வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், ஆன்டி-டயாபடிக், ஆன்டி-செப்டிக் போன்றவை உள்ளது. இத்தகைய வேப்பிலை நோய்களை குணப்படுத்த மட்டுமின்றி, முடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு வேப்பிலையை 1 கப் நீரில் போட்டு நீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை அலச, ஸ்கால்ப் பிரச்சனைகள் அனைத்தும் வெளியேறி, தலை நன்கு சுத்தமாக இருக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை நன்கு உலர வைத்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கருமையாகும் வரை ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். அதுமட்டுமின்றி வாரம் ஒருமுறை நெல்லிக்காயை, சீகைக்காயுடன் சேர்த்து அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். வறட்சியான முடி உள்ளவர்கள், சீகைக்காயைப் பயன்படுத்த வேண்டாம், அந்த எண்ணெயை மட்டும் தினமும் தலைக்கு தடவி வந்தால் போதும்.

வெங்காயம்
வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தாலோ அல்லது வழுக்கைத் தலை இருந்தாலோ வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
பூண்டு
பூண்டிலும் சல்பர் ஏராளமாக உள்ளது. அதற்கு தேங்காய் எண்ணெயில் பூண்டை சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடி வளர்ச்சி அடைவதைக் காண்பீர்கள்.
செம்பருத்தி
செம்பருத்தி பூவிலும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதில் இருந்து, முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது, நரைமுடியைத் தடுப்பது, பொடுகைப் போக்குவது என்ற பல நன்மைகளை வழங்கும். அதற்கு செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை ஒன்றாக சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து ஷாம்பு பயன்படுத்தாமல் தேய்த்து கழுவ வேண்டும்.
முட்டை
முட்டையில் சல்பர், இரும்புச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், அயோடின் மற்றும் ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
மைசூர் பருப்பு
மைசூர் பருப்பை அரைத்து பொடி செய்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச முடி உதிர்வது தடுக்கப்படும்.
எலுமிச்சை மற்றும் மிளகு
எலுமிச்சையின் விதை மற்றும் மிளகை தண்ணீர் சேர்த்து அரைத்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, தலைமுடி உதிர்வது குறையும் மற்றும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வெந்தயம்
வெந்தயமும் முடி உதிர்வதைத் தடுக்கும். முக்கியமாக வெந்தயம் தலைமுடியை மென்மையாக்கி, பட்டுப்போன்று வைத்துக் கொள்ளும். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
தயிர் மற்றும் கற்பூரம்
தயிர் மற்றும் கற்பூரத்தை சரிசமமாக எடுத்து, அதனை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச, தலைமுடி உதிர்வது குறைந்து, வழுக்கைத் தலையிலும் முடி வளர ஆரம்பிக்கும்.
கொத்தமல்லி
கொத்தமல்லியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களும் தடுக்கப்படும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை முடிக்கு நல்ல கருமை நிறத்தைத் தருவதோடு, தலைமுடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு கறிவேப்பிலையை நீரில் போட்டு தண்ணீர் பச்சையாக மாறும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நெப்போலியனின் வாழ்க்கை

எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள். வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர் இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.

வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.
பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர்.

ஒரு முறை போர்க்களத்தில் வென்ற பிறகு வீரர்களை கொண்டாட அனுப்பிவிட்டு நெப்போலியன் தனியாக வேகமாக குதிரையை செலுத்திக்கொண்டு பயணப்பட ஆரம்பித்தான். உற்சாக மிகுதியில் இன்னமும் குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தும் பொருட்டு கடிவாளத்தை பிடித்து இழுத்தான்.

குதிரையின் வாயில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. சிட்டென பறக்க ஆரம்பித்தது. கிடுகிடு பள்ளம் ஒன்று திடீர் என குறுக்கிட்டது. அப்படியே குதித்து விடலாம்; குதிரையால் தாவக்கூடிய தூரத்தைவிட ஒரு ஐந்தடி அதிகமாகவே அகலமாக இருந்தது பள்ளம். பார்த்தான்; வீரனுக்கு அழகு இப்படி சாவதுதான் என எண்ணிக்கொண்டு முடுக்கினான். பள்ளத்தில் குதிரை தாவி வீழ்ந்தபொழுது, அந்த ஐந்தடியை மிதந்து கொண்டு இருக்கும்பொழுதே தாவி அடிகளோடு தப்பித்தான். தன்னை ‘விதியின் மனிதன்’ என அழைத்துக்கொண்டான்.

நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டான். என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினான். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டான். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவன். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவன் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவன் அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவன் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க அரசவைக்கு வருவார்.

அவருக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான ஜோசபின் மீது முதல் பார்வையிலேயே காதல் பூத்தது. அவளை மணம் செய்து கொண்டார். அவருக்காக உலகம் முழுக்க இருந்து ரோஜா மலர் செடிகளை பரிசாக அனுப்பி வைப்பார். அதன் மூலம் உருவான தோட்டம் மிக பிரமாண்டமானது. ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் தனிக் காவியம். அவள் பிள்ளை பெற்றுத்தர முடியவில்லை என்று விவாகரத்து செய்த பின்னும் பெரிய மாளிகை கொடுத்து அவளுக்காக கண்ணீர் வடித்தான் நெப்போலியன்.

போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர். இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவனின் சின்னம் தேனீ.

பல நாடுகளை வென்ற அவன் செய்த தவறு ரஷ்யாவின் மீதான படையெடுப்பு. தான் கொண்டு வந்த இங்கிலாந்துடன் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற கண்ட முறையை ஏற்க மறுத்த ரஷ்யா மீது போர் தொடுத்தான். நாட்டையே துப்புரவாக துடைத்து வைத்திருந்தார்கள் மக்கள். ரஷ்ய குளிர் வாட்டி எடுத்தது. உயிரை அப்படியே உருவி எடுத்தது. பல வீரர்கள் சுருண்டு இறந்தார்கள். ஒன்றுமே இல்லாத மாஸ்கோவை கைப்பற்றினார்கள். பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய நிலைமை. வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் காத்துக்கொண்டு இருந்தன.

இருந்ததில் பாதி படையை காவு கொடுத்துவிட்டு நெப்போலியன் இன்றுதான் பின்வாங்கினார். அதற்கு பின் நடைபெற்ற போரில் தோற்று எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டார் அவர். “ரஷ்யக் குளிர் நெப்போலியனை தோற்கடித்தது!”என வரலாறு எள்ளி நகையாடுகிறது.

அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு தப்ப முயன்று ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். “என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!”என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். ரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் ஜஸ் லைக் தட் என கத்திகளை சொருகி பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்ஸ் தப்பிவிட்டார். அதற்கு பின் பிரெஞ்சு படைகள் வந்தன. வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன்.

“முதலில் கடையின் ஓட்டை சரி செய்ய வேண்டும்”. “முடிந்தது” என்றார் நெப்ஸ். “அடுத்து” என கம்பீரமாக கேட்க, “எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள் – ஒரே தொழில் போட்டி” எனவும் சிரித்துக்கொண்டே, “சரி! அடுத்து?”எனக் கேட்க நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினப்ப எப்படி ஃபீல் பண்ணிங்கனு தெரிஞ்சாகணும்!” “ஹ்ம்ம்” என்ற நெப்போலியன்…

“கிளம்புங்கள்!” என படைகளிடம் சொல்லிவிட்டு – வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் படக்கென்று துப்பாக்கியை வைக்கச்சொல்லி ஒன்று இரண்டு மூன்று என்றதும் சுட்டுவிடு என்றதும், துப்பாக்கி ஓட்டை தையல்காரன் தலையில் பொய் ஒட்டிகொண்டது. “ஒன்…டூ…த்ரீ!” என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து “இப்படிதான் இருந்தது எனக்கு!” என்றுவிட்டு கிளம்பினான் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவனிடம் இருந்தது.

எல்பாவில் இருந்து தப்பி வந்தபொழுது மக்கள் மீண்டும் அவன் பின் அணிவகுத்தார்கள். வாட்டர்லூவில் இறுதிப் போர். ஒய் வடிவத்தில் படைகளை நிலை நிறுத்தினான். போரில் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதற்கு முந்தைய நாள் நல்ல மழை பெய்தது. இவனுக்கு காய்ச்சல் வேறு; சொன்ன உத்தரவுகள் தப்பு தப்பாக வீரர்களின் காதுகளில் விழ தோல்வியை தழுவினான் நெப்போலியன். இந்த முறை தப்பிக்க முடியாத ஹெலினா தீவில் கொண்டு போய் தனிமைச் சிறை வைத்தார்கள்.

நாற்பது போர்கள் கண்ட நெப்போலியன் கொண்டு வந்த கோட் ஆப் நெப்போலியன் இன்றைக்கும் பின்பற்றப்படும் அருமையான சட்டம். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அற்புதம் அது. எளிமையான மொழியில் அவை எழுதப்பட்டு இருந்தன. நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தான். மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார். நெப்போலியன் காலத்தில் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வோல்டாவை பார்த்து நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அரசவைக்கு வந்தால்கூட போதும் என்கிற அளவுக்கு நெப்போலியன் தீராத வாசிப்பு ஆர்வம் கொண்டவன்.

எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான். அவன் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவனை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.

ஒரு சம்பவத்தோடு முடித்தால் நன்றாக இருக்கும். நெப்போலியனின் படைத் தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். “அரசே! எதிரி நாட்டுப் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்கள். அவ்வளவு தான்!” என்றபொழுது நெப்போலியன், “அதனால் என்ன? எல்லா பக்கமும் சுடலாம் என சந்தோசப்படுங்கள்” என்றார்.

“முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை”

மாவீரன் நெப்போலியன் சதாரணப் படைவீரனாக இருந்த சமயம், அவனும் மற்ற படைவீரர்களும் ஒர் இடத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.

அங்கிருந்த வீரர்கள் அனைவரும் கூடாரத்தை விட்டு வெளியே வந்து உல்லாசமாகப் பொழுதை கழித்தனர்.

நெப்போலியன் மட்டும் பொழுதை வீணாக்காமல் கூடாரத்தில் அமர்ந்து நூல்களைப் படித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கிராமப் பெண் ஒருத்தி, எல்லோரும் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கின்றனர், நீ என்னவோ பொட்டபுள்ள போல் உள்ளேயே இருக்கிறாயே என்று ஏளனம் செய்தாள்.

நெப்போலியனோ புத்தகத்தில் இருந்த கண்களை எடுக்கவேயில்லை, சற்று நேரம் அங்கு நின்றுவிட்டு நெப்போலியனிடமிருந்து எவ்வித பதிலும் வராததால் உதட்டைப் பிதுக்கிவிட்டு சென்றுவிட்டார்.

வருடங்கள் உருண்டோடின, நெப்போலியன் பிரான்சின் சக்கரவர்த்தி ஆனார், அந்த ஊருக்கு ஒரு முறை வந்த போது அந்த பெண்ணை பற்றி நினைவு வந்தது, அந்த பெண் இருக்குமிடம் சென்று அம்மா என்னைத் தெரிகிறதா என்றார்.

நான் ஒரு காலத்தில் இந்த ஊரில் சாதாரண படைவீரனாக கூடாரத்தில் உட்கார்ந்திருந்தேன், நீ கூட என்னை பொட்ட புள்ள என்று கேலி பண்ணினாய், அன்று நான் மற்றவர்களை போல் விளையாடிக்கொண்டிருந்தான் இன்றும், அவர்களை போல் இருந்திருப்பேன் என்றார்.

வெட்கித் தலைகுனிந்தாள் அந்தப் பெண்!  



##தமிழறிவு!!

நீ எல்லாம் நல்லா வருவ டா.. நல்லா வருவ...




தமிழகத்தில் 14 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது பகலில் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பயனபாட்டிற்கு வழங்கப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடையே 1 மணி நேரம் மின்தடை தொடர்ந்து ஏற்படுகிறது.
இதனை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டை பொதுமக்கள் இந்து முண்ணனி அமைப்பினருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்யும்  நூதன போராட்டத்தை நடத்தினர்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி...



வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்.

அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.

அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.




வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...

அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.

அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.

பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.

சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.

சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.

உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.

எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.

பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பசங்க வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் இதுபோல் மேற்கூரை பயணம் செய்வதை தவிர்க்கலாமே.

இளங்கன்று பயம் அறியாது: :பசங்க  வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் இதுபோல் மேற்கூரை பயணம் செய்வதை தவிர்க்கலாமே.. 

 இடம்: ராமநாதபுரம் சர்ச் ஸ்டாப். 

 



 Src: Dinamalar

இந்து, கிறிஸ்தவ மதம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் .....


படித்ததில் பிடித்தது: பெற்றோரும் குழந்தைகளே!





யதான தாய் தன் மகனுடன் தோட்டத்தில் அமர்ந்து இருக்கிறாள். ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் சிறு பறவையைக் காட்டி, 'மகனே, அது என்ன பறவை?' என்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அந்தப் பறவை வேறு மரத்தில் போய் அமர்கிறது. மறுபடியும் தாய் அது என்ன பறவை எனக் கேட்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அடுத்து வேறு மரத்துக்கு அந்தப் பறவை தாவுகிறது. மூன்றாவது முறையாக அம்மா அதே கேள்வியைக் கேட்கிறாள். ''உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அதான் சொல்றேன்ல... அது மைனான்னு...'' என எரிந்து விழுகிறான் மகன். அந்தத் தாய் வீட்டுக்குள் போய் தன் டைரியை எடுத்து வருகிறாள். மகனிடம் கொடுக்கிறாள்.
''என் மகனுக்கு அப்போது இரண்டு வயது. நானும் என் மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது மைனா ஒன்று பறந்து வர 'அது என்ன?' எனக் கேட்டான் என் மகன். 'மைனா' என்றேன். மைனா அடுத்த மரத்துக்குத் தாவியபோது மறுபடியும் அது என்ன எனக் கேட்டான். 'மைனா' என்றேன். இப்படியாக ஒவ்வொரு மரமாக மைனா தாவியபோதும் என் மகன் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் மைனா... மைனா எனச் சொன்னபோது அந்த மைனாவைப் போலவே ஆனந்தத்தில் நான் பறந்துகொண்டு இருந்தேன்!''
சென்ற வருடத்தின் சிறந்த குறும்படமாக சர்வதேச விருது பெற்ற  படத்தின் காட்சி இது. அலுவலகம், நட்பு வட்டாரம், ஃபேஸ்புக் என எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நாம் நம் பெற்றோருக்காக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம்? அவர்களுக்கான தேவைகளை நம்மில் எத்தனை பேர் மனம்விட்டுக் கேட்கிறோம்? தள்ளாத வயதில் பேரன் - பேத்திகளைக் கொஞ்சி மகிழும் காலத்தில் பல பெற்றோர்கள் வறுமையிலும் தனிமையிலும் தவிக்கும் அவலத்தை எப்படித் தவிர்ப்பது?
''சம்பாத்தியத்தை நோக்கியே சுழலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு வயதான பெற்றோரைக் கவனிக்க நேரம் இல்லை. நாலு வார்த்தை பரிவாய்ப் பேசக்கூட பொறுமை இல்லை.
வறுமையில் வாடும் ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்களோ உழைப்பதற்குத் தயாராக இருந்தும், உடலில் வலு இல்லாமல், ஒடுங்கிக்கிடக்கின்றனர். இதுதான் இன்றைய வயோதிகப் பெற்றோர்களின் யதார்த்த நிலை. இதற்கு உதாரணமாக நான் பார்த்த முதியவரைப் பற்றிச் சொல்கிறேன்.
80 வயது வயோதிகரின் மருமகள், 'என் மாமனார் நடக்கவே முடியாமல் சோர்ந்து விழுகிறார். கொஞ்சம் வீட்டுக்கு வந்து பார்க்க முடியுமா?' என்று விடிகாலை எனக்கு போன் செய்தார். ஓரளவு வசதியான வீடுதான். கிருமித் தொற்றால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளைக் கொடுத்தேன். கிளம்பும்போது அந்தப் பெரியவர், 'வாயில நாலு பல்லுதான் இருக்கு... சாப்பிடவே முடியலை. அதை எடுத்துவிட்டுடுங்க' என்றார். அருகே இருந்த அவருடைய மனைவி, 'எனக்கு கண் சரியாத் தெரியலை... அதையும் பார்த்திடுங்களேன்' என்றார். 'கண் டாக்டர்கிட்ட போய்க் கண் பரிசோதனை செய்து, கண்ணாடி போடணும். நீங்க பல் டாக்டரைப் பார்க்கணும்' என்று அட்வைஸ் தந்துவிட்டு, அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன். அங்கே நீல நிறக் கண்களோடு அந்த முதியவரின் பேத்தியைப் பார்த்தேன். 'நிஜமாவே கண் நீலமா?' என்று நான் வியந்து கேட்க, 'இல்லை டாக்டர், லென்ஸ் போட்டிருக்கா. காலேஜ் படிக்கிறதால அவ டிரெஸுக்கு மேட்சா கலர் கலரா லென்ஸ் வாங்கித் தந்திருக்கேன்' என்று பெருமிதத்துடன் சொன்னார் அந்த மருமகள்.
படிக்கும் மகள், மகனுக்காக லட்சங்களைச் செலவழிக்கும் அதே பெற்றோர், தங்களைப் பெற்றவர்களின் சின்னச் சின்ன அவசியத் தேவைகளைக்கூடப் பூர்த்திசெய்ய மறந்துவிடுகின்றனர். அவர்களின் தேவைகளை அறிந்து, பிரச்னைகளைப் புரிந்து, பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும். அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாய் இருக்கும்''

பேச்சு சுதந்திரம் பேரானந்தம்!
பெரியவர்களின் வடிகாலே... பேச்சுதான். தேக்கிவைத்த ஆசைகள், கனவுகள், இன்ன பிற நினைவுகளைப் பற்றிப் பேசும்போது, அதைக் காது கொடுத்துக் கேளுங்கள். 'நீங்க படிச்ச காலத்தில் பரிசுகள் வாங்கியிருக்கீங் களா?' என்று நீங்களோ அல்லது பேரப் பிள்ளைகளோ கேட்கும்போது, பாட்டியின் முகத்தில் தெரியும் பரவசத்தை வார்த்தைக ளால் விவரிக்க முடியாது. விசேஷ நாட்களில் பாடச் சொல்லி, பாட்டியின் கச்சேரியை ரசிக்கலாம். கை வேலைப்பாட்டில் திறமை இருந்தால், அவர் செய்த பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம். தனக்கு இந்த வீட்டில் மதிப்பு இருக்கிறது என்பதை உணர ஒரு வாய்ப்பும் மன பாரத்தை இறக்கிவைத்த சந்தோஷமும் அவர்களுக்குக் கிடைத்துவிடும்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!
அம்மாக்களைப் பொருத்தவரை என்னதான் வயதாகிவிட்டாலும் அவர்களுக்கு அடுக்களையில் வேலை செய்வது மிகவும் பிடிக்கும். தனது மகனுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் தினம் தினம் என்று இல்லாவிட்டாலும் நாள்  கிழமைகளின் போதாவது தன் கையால் எதையாவது சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும். அப்படிப்பட்டவர் என்றாவது ஒரு நாள் கேசரியில் சர்க்கரை போட மறந்திருக்கலாம். அதனால், 'அம்மா. உனக்குதான் வயசாடுச்சு இல்ல... பேசாம ஒரு மூலையிலே உட்கார். இனி மேல் நீ கிச்சன் பக்கம் போக வேண்டாம்' என்று முகத்தில் அடித்தாற்போல் பேசுவதோ... 'நல்ல வேளை உப்பைக் கொட்டாம இருந்தீங்களே...' என்று கிண்டலடிப்பதோ, அவர்களது மனதை ரணப்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

உணவே மருந்து

வயதான பெற்றோர்களுக்குக் குறைவான கலோரி உள்ள சத்தான உணவே போதுமானது. எலும்புகளை வலுவாக்கக் கொள்ளு, புரதச் சத்துக்கு காளான், கோதுமை, கொண்டைக் கடலை, பட்டாணி இவற்றைத் தினமும் சேர்த்துக் கொடுக்கலாம். ஓட்ஸில் அதிக புரதம், கலோரி, நார்ச் சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பதால் அது அவர்களுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலையும் தவிர்க்கும். அரிசியைக் குறைத்து கேழ்வரகை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சுண்ணாம்புச் சத்து சேரும். எடை அதிகரிக்கும் மாவுச் சத்துள்ள கிழங்கு வகைகள், கொழுப்பு நிறைந்த எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகத் தந்தால் போதும். இரும்புச் சத்து நிறைந்த கீரை, பேரீச்சம்பழம், வெல்லம், தேன் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அவர்கள் சாப்பிட்டால், ரத்த சோகை வராமல் இருக்கும். எந்தச் சாப்பாடாக இருந்தாலும் உப்பு குறைவாக இருந்தால், அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும். அதே சமயம், உடலில் உப்பின் அளவும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், மலச்சிக்கல், சோர்வு, பலவீனம், நீரிழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை அவர்கள் தடுக்கலாம்.

உற்சாகம் தரும் உடற்பயிற்சி
60 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும்கூட வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 35 முதல் 45 சதவிகிதம் குறைவு. ஐந்து மணி நேரம் நடந்தால், 50 சதவிகிதம் மாரடைப்பு வாய்ப்பு குறையும். ரத்த ஓட்டமும் சீராகும். உங்கள் அப்பா - அம்மாவை அருகில் இருக்கும் பூங்கா, மைதானத்துக்குச் சென்று உடற்பயிற்சியோடு, நடைப்பயிற்சி செய்யச் சொல்லலாம். விடியற்காலையில் நடப்பது அவர்களது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மற்றவர்களுடன் கலந்து உரையாடும்போது மனதில் உற்சாகம் பாயும். நல்ல உறக்கம் கிடைக்கும். பார்வைக் கோளாறு, மூட்டு வலி மற்றும் பக்கவாதப் பிரச்னை உள்ளவர்களாக இருந்தால், உட்கார்ந்த நிலையிலேயே உடலின் மேற்பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். பெற்றோர்கள் தனியாக நடந்து செல்வதாக இருந்தால், அடையாள அட்டையை அவர்களது பேன்ட் அல்லது சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்புங்கள்.  

தடுக்கி விழுவதைத் தவிர்க்கலாம்
வயதானவர்கள் சில சமயங்களில் தடுக்கி விழ நேரிடும். இதனால், எலும்பு முறிய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்க அவர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு அவர்கள் புழங்கும் அறை, கழிப்பறை மற்றும் நடக்கும் இடங்களில் சொரசொரப்பான டைல்ஸைப் பதிப்பது நல்லது. அவர்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் ஆங்காங்கே, பிடிமானத்துக்கு கைப்பிடிகளைப் பொருத்துவது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். மிருதுவான செருப்பாக இல்லாமல், முள் போல் பதிக்கப்பட்ட ரப்பர் செருப்புகளை வாங்கித் தரலாம். வெஸ்டர்ன் டாய்லெட் மூட்டு வலிப் பிரச்னை வராமல் தடுக்கும். குளிக்கும் அறை, நடக்கும் இடங்கள், தூங்கும் அறை இவற்றில் போதிய வெளிச்சம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நடக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். தள்ளாடியபடி நடப்பவர்களுக்குக்  கைப்பிடி (Walking stick) அல்லது வாக்கர் (Walker) கொடுக்கலாம்.

நோய்க்கு நிரந்தரத் தீர்வு
முதுமையில் மனச்சோர்வு, மறதி நோய் மற்றும் மனப்பதற்றம் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனால், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறையும். நாளடைவில், தன்னையே மறக்கும் நிலை உருவாகும். வீட்டிலே சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யலாம். இதனால் மறதி நோய்கள் வருவதைத் தவிர்க்க முடியும்.
பொதுவாக வயதானவர்களுக்கு எந்த வேளை எந்த மாத்திரை சாப்பிட வேண்டும் என்று பார்த்து எடுத்து சாப்பிடத் தெரியாது. பெற்றெடுத்த பிள்ளைகள் வேளாவேளைக்குத் தங்கள் கையால் மருந்து கொடுத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதற்குச் சாத்தியம் இல்லை என்றால், குறைந்தபட்சம் எந்த வேளைக்கு எந்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நாமே தனித்தனி சின்ன பொட்டலங்களாக மடித்துவைத்துவிட்டு வந்தால், அது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
நோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள், 'ஒரு வேளை மறந்துவிட்டோமே...' என்று அடுத்த வேளை மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடக் கூடாது. கை - கால்களில் எரிச்சல் ஏற்பட்டால், அது சர்க்கரை நோய் அறிகுறியாக இருக்கலாம். முகம், கால்களில் ஏற்படும் வீக்கம், உயர் ரத்த அழுத்தத்துக்கு அறிகுறியாக இருக்கலாம். நோய் வருமுன் காப்பதற்கு வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கண், பல், காது ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பரிசோதித்துக்கொள்ள வைப்பது அவசியம்.

தனிமையைத் தவிர்க்கவும்

முதுமையின் விரோதி தனிமை. முதுமையில் தனிமையோடு முடங்கிக் கிடப்பவர்களுக்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு அதிகரிக்கும். தள்ளாத வயதில் கணவன் - மனைவி இருவரில் ஒருவரின் இழப்பு மற்றொருவருக்குத் தாங்க முடியாத தளர்வை ஏற்படுத்திவிடும். இழப்பை ஈடுசெய்ய முடியாது என்றாலும், கூடப்பிறந்த உறவுகள், அவர்களுடன் வசித்த, படித்த, பணிபுரிந்த நட்பு வட்டாரங்களைத் தேடிப் பிடித்து வீட்டுக்கே வரவழைத்து வேதனையை மறக்கச் செய்யலாம். பெற்றோர்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, நீங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே குடி வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை குடும்பத்தினருடன் சென்று பார்ப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வெளியூர்களுக்குச் செல்வதை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் வெளியூர்வாசிகளாக இருந்தால் உறவு - நட்பு வட்டாரங்களுக்கு அருகில் பெற்றோரைக் குடி அமர்த்தலாம். அவ்வப்போது போன் மூலமாக நலம் விசாரிக்கலாம். இதனால், நீங்கள் அருகிலேயே இருப்பதுபோன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். கேரம், பல்லாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தாருங்கள். குழந்தைகளைப் போல அவர்கள் விளையாடி மகிழ்வதைப் பாருங்கள். உங்களுக்கும் ஆனந்தம் பொங்கும்.

தொல்லை இல்லாத் தூக்கம்

வயது ஏற ஏறத் தூக்கம் குறையத் தொடங்கும். ஒரு நாளில், அவர்களுக்குக் குறைந்தது ஐந்து முதல் ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். முடிந்த வரை பகலில் தூங்காமல் ஈசி சேரில் சாய்ந்தபடி அவர்களை ஓய்வெடுக்க ஆலோசனை சொல்லுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உணவைக் கொடுத்துவிடுங்கள். அதுவும் கெட்டியான உணவாக இல்லாமல், நீராகாரமான உணவாக இருப்பது நல்லது. சூடான, குளிர்ச்சியான பானங்களைக் குடிக்கக் கொடுக்காதீர்கள். தூங்கப் போகும் சமயத்தில் அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கக் கூடாது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டி இருக்கும். பெற்றோரின் அறையில் அதிக சத்தம் இல்லாத, அவர்களுக்குப் பிடித்த இனிமையான இசையைத் தவழவிடுங்கள். நிம்மதியாகத் தூங்குவார்கள்!