சாப்டுவேர் என்ஜினியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாப்டுவேர் என்ஜினியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"அவுட்சோர்சிங்" முதலிடத்தில் இந்தியா

"அவுட்சோர்சிங்" எனப்படும் அயல்நாட்டு நிறுவனங்களின் பணிகளை குறைந்த கடடணத்திற்கு எடுத்து செய்வதில் பல நாடுகள் களமிறங்கி உள்ளபோதிலும், இந்தியா இன்னமும் அசைக்க முடியாத முதலிடத்திலேயே உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அண்மையில் அமெரிக்க அரசாங்கம் கூட தங்கள் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், தங்களது பணிகளை இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் முறையில் செய்ய கொடுத்தால், அந்நிறுவனங்களுக்கு வரிசலுகை நிறுத்தப்படும் என்று அறிவித்தது.

இதனால் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்தது.

இது தவிர இந்திய ஐ.டி. நிறுவனங்களைவிட குறைவான செலவில் பணிகளை செய்து தருவதாக கூறி பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களை கூவி கூவி அழைத்தன.

இது ஒருபுறம் இருக்க, சீன ஐ.டி. துறையும் கிடு கிடு வளர்ச்சியை எட்டி பிடித்து, இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தின.

இந்நிலையில் மள மளவென நாலாபுறமும் உருவான போட்டிகளால் இந்திய ஐ.டி. முதலை நிறுவனங்களே சற்று மிரண்டுதான் போயின.

ஆனாலும் இவ்வளவு போட்டிக்கு பின்னரும், "அவுட்சோர்சிங்" பணியை பெறுவதில் இந்தியாவே இன்னமும் அசைக்க முடியாத அளவுக்கு முதலிடத்தில் உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில், அவுட்சோர்சிங் பணியை அளிக்கும் முன்னணியில் உள்ள முதல் 30 நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்களிடம், அவுட்சோர்சிங் பணிகளை அளிப்பதில் சிறந்த நாடு எது என்பதை 10 அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில் உலக அளவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள், இந்திய ஐ.டி. நிறுவனங்களையே "அவுட்சோர்சிங்" பணிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

குறைந்த செலவில், அதே சமயம் திறமையான மற்றும் கச்சிதமான வேலை என்ற அடிப்படையில் அவர்கள் இந்திய ஐ.டி. நிறுவனங்களே சிறந்தவை என்று தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தோனேஷியா,பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளிலுள்ள ஐ.டி. நிறுவனங்கள், இந்திய ஐ.டி. நிறுவனங்களைக் காட்டிலும் குறைச்சலான விலையில் "அவுட்சோர்சிங்" பணிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளபோதிலும், பணி திறமையில் அந்நிறுவனங்கள் பின்தங்கி விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தனைக்கும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள், பணியாளர்களின் ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட வேறு சில பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளன.ஆனாலும் "அவுட்சோர்சிங்" பணிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவையே நாடுகின்றன.

ஆனால் இந்திய நிறுவனங்களின் இந்த "தக்கவைப்பு" திறமை இன்னமும் எத்தனை ஆண்டுகளுக்கு தாக்கு பிடிக்கும் என்பது தெரியவில்லை.

ஏனெனில் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழல் மாற்றங்கள் சிறப்பானதிலிருந்து மிக சிறப்பான நிலைக்கும், கலாச்சார மற்றும் போட்டி திறன் நல்லதிலிருந்து சிறப்பான நிலைக்கும் உயர்ந்துள்ளதால், எந்த நேரமும் சீன ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவை முந்த வாய்ப்புள்ளது.

எனவே தங்களது முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள் வேறு வகையான யுக்திகளை நாட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே கூறலாம்

SW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்


1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க. ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு வெள்ளிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சபடாம சொல்லிட்டு போக முடியுது?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகஷேன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க. அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது?

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க?

Posted by வெட்டிப்பயல்

சாப்டுவேர் என்ஜினியர்களும் சமூக சீரழிவும்

இப்பொழுது தலை தூக்கி வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சாப்டுவேர் கம்பெனியில் வேலை செய்பவர்களால் உண்டாகும் செயற்கை விலை உயர்வு. இதை பத்தி கொஞ்சம் பார்ப்போம்

1. தி.நகரில் ஒரு சாப்பாடு(Meals) 30+ ரூபாய், அதுவே OMR சாலையில் ஏதாவது ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் சாப்பாடு குறைந்த பட்சம் 60. என்னுடைய அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஆந்திர உணவகத்தில் அது 99 + VAT (ஏறக்குறைய 120 ரூபாய் வரும் டிப்ஸை சேர்த்தால். 10 ரூபாக்கு குறைந்து டிப்ஸ் இருந்தால் அடுத்த தடவை நீங்க போகும் பொழுது விக்கி செத்தாலும் தண்ணி கிடைக்காது.)

2. அடையாரில் உள்ள ஒரு Forex நிறுவனத்தில், சாப்டுவேர் இன்ஜினியர் அதுவும் குறிப்பாக விப்ரோ, டிசிஎஸ், இன்பொசிஸ் கம்பெனிகளில் இருந்து சென்றால் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் எக்ஸ்சேஞ் ரேட்டை விட ஒரு ரூபாய் குறைவு. கேட்டால் அது அப்படி தான் சார் வேண்டுமானல் குடுங்கள் இல்லாவிட்டால் போங்க.

3. வேளச்சேரியில் 800-1000 சதுர அடி வீட்டின் வாடகை 6000+ அதே, கோடம்பாக்கம், வடபழனி போன்ற இடங்களில் அதிகபட்சம் 4000.

4. 1200 சதுர அடி வீட்டின் விலை வேளச்சேரியில் சுமார் 50 – 60 லட்சம் வரை.

5. Ascendasஇல் (இது Tidel Parkஜ போன்றது) ஒரு Milk Shakeஇன் விலை 170.

6. ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் குறைந்த பட்சம் 20 – 30 ரூபாயாவது அதிகமாக இருக்கும்.

7. இரண்டு வருடத்துக்கு முன்னர் 50ரூபாயாக இருந்த சினிமா டிக்கெட் இன்று குறைந்த பட்சம் 120, 10 ரூபாயாக இருந்த பாப்கான் இன்று 50.

8. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் இருந்து சேலத்துக்கு செல்ல தனியார் பேருந்துகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 1100. சாதாரணமாக அது ரூபாய் 300.

இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எல்லாரும் சொல்லும் பொதுவான விஷயம் சாப்டுவேர் கம்பெனியில் இருக்குறவன் எவன் சார் விலையை கேக்குறான் இல்ல சாப்டுவேர் கம்பெனிகளில் இருக்குறவனுக்கு என்ன சார், ஆயிர ஆயிரமா சம்பாதிக்கிறான் குடுத்துட்டு போறான். நம்மைப்போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையே இல்லை ஆனா யோசித்து பாருங்க, இப்படி துவங்கும் விலை உயர்வு, படிப்படியாக அப்படியே கொஞ்ச நாள் கழித்து சாதாரண பொது மக்களை போயி அடையும். அவங்க என்ன செய்வாங்க யோசிங்க?

யோசித்து பாருங்க. என்னிக்காவது ஒரு நாள் நாம கேட்டு இருக்கோமா? ஏன் அதிக விலை என்று? இல்ல அவன் இவ்வுளவு விலை விற்கிறானே அவனிடம் வாங்க வேண்டாம் என்று யோசித்து இருக்கோமா? அப்ப என்ன அர்த்தம் காசு கொழுப்பு தானே? வாங்குறவன் இருக்குற வரையில் விற்பவன் விற்கத்தானே செய்வான்? இதற்கு சிறந்த உதாரணம் கடந்த சில மாதங்களாக சென்னை, பெங்களூரில் கட்டிடங்களின் விலையில் 10 – 20% குறைந்துள்ளதே? என்ன காரணம் நகரங்கள் வளர்ந்து விட்டனவா? இல்லையே வாங்க ஆள் இல்லை அதனால் தான் இந்த விலை குறைப்பு.

ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருக்கும் இந்த காலத்தில், நம்முடைய சம்பளங்களும் வருங்காலங்களில் இது போன்று இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்று வருடத்துக்கு முன்னர் இருந்த விலையை வைத்து பார்க்கும் பொழ்து இந்த விலை எல்லாம் இரண்டு அல்லது முன்று மடங்கு உயர்ந்து உள்ளது ஆனால் நம்முடைய சம்பள உயர்வு அவ்வுளவு இருக்கிறதா என்ன? பொருட்களை வாங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதற்கு உண்டான சரியான விலையை குடுத்து வாங்குங்கள்.

சமீபகாலமாக வெயிட் காலர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. கைதாகும் பெரும்பாலோனோர் சொல்லும் காரணம், கடன் அட்டைகள், கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துவிட்டேன், இப்பொழுது கடன்காரர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க இது போன்று செய்தேன் என்று.நமக்கும் இது போன்ற நிலை வர வேண்டுமா? இது எல்லாம் மாற நாம பெருசா ஒண்ணுமே பண்ண வேண்டியது இல்ல, இது மாதிரி ஏமாத்துறவங்களை புறக்கணிச்சாலே போதும், தன்னால அவங்க மாறுவாங்க.
.
Posted By,
santhose