தலை முடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலை முடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!

தற்போது தலைமுடி உதிர்வது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தினமும் பலருக்கு வருத்தத்தைத் தரும் ஒன்றும் இதுவே. இதன் காரணமாகவே பலருக்கு மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படுகிறது.
தலைமுடிக்காக செலவழிப்போர் ஏராளம். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. சிலர் தலைமுடி அதிகம் கொட்டுகிறது என்று டிவிக்களில் விளம்பரப்படுத்தும் கண்ட ஹேர் ஆயில்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.
இப்படி கண்டதை தலைமுடிக்கு பயன்படுத்தினால், முடியின் ஆரோக்கியம் போய், முடி அதிகம் கொட்டி வழுக்கை கூட ஏற்படும். எனவே உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், முதலில் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.
இங்கு முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தேங்காய் பால்
தேங்காய் பாலில் மயிர்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறை தேங்காயை அரைத்து பால் எடுத்து, அந்த பாலைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து ஊற வைத்து அலசுங்கள். இப்படி செய்து வர, முடி உதிர்வதை தடுக்கலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணத்தால், ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்கள் மற்றும் வறட்சியால் முடி உதிர்வது தடுக்கப்படும். அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்காலப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணநேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் முடி உதிர்வது நிற்பதோடு, வழுக்கைத் தலையிலும் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
ஆயில் மசாஜ்
வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஓர் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி தூண்டப்படும்.
வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், ஆன்டி-டயாபடிக், ஆன்டி-செப்டிக் போன்றவை உள்ளது. இத்தகைய வேப்பிலை நோய்களை குணப்படுத்த மட்டுமின்றி, முடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு வேப்பிலையை 1 கப் நீரில் போட்டு நீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை அலச, ஸ்கால்ப் பிரச்சனைகள் அனைத்தும் வெளியேறி, தலை நன்கு சுத்தமாக இருக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை நன்கு உலர வைத்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கருமையாகும் வரை ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். அதுமட்டுமின்றி வாரம் ஒருமுறை நெல்லிக்காயை, சீகைக்காயுடன் சேர்த்து அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். வறட்சியான முடி உள்ளவர்கள், சீகைக்காயைப் பயன்படுத்த வேண்டாம், அந்த எண்ணெயை மட்டும் தினமும் தலைக்கு தடவி வந்தால் போதும்.

வெங்காயம்
வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தாலோ அல்லது வழுக்கைத் தலை இருந்தாலோ வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
பூண்டு
பூண்டிலும் சல்பர் ஏராளமாக உள்ளது. அதற்கு தேங்காய் எண்ணெயில் பூண்டை சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடி வளர்ச்சி அடைவதைக் காண்பீர்கள்.
செம்பருத்தி
செம்பருத்தி பூவிலும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதில் இருந்து, முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது, நரைமுடியைத் தடுப்பது, பொடுகைப் போக்குவது என்ற பல நன்மைகளை வழங்கும். அதற்கு செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை ஒன்றாக சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து ஷாம்பு பயன்படுத்தாமல் தேய்த்து கழுவ வேண்டும்.
முட்டை
முட்டையில் சல்பர், இரும்புச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், அயோடின் மற்றும் ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
மைசூர் பருப்பு
மைசூர் பருப்பை அரைத்து பொடி செய்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச முடி உதிர்வது தடுக்கப்படும்.
எலுமிச்சை மற்றும் மிளகு
எலுமிச்சையின் விதை மற்றும் மிளகை தண்ணீர் சேர்த்து அரைத்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, தலைமுடி உதிர்வது குறையும் மற்றும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வெந்தயம்
வெந்தயமும் முடி உதிர்வதைத் தடுக்கும். முக்கியமாக வெந்தயம் தலைமுடியை மென்மையாக்கி, பட்டுப்போன்று வைத்துக் கொள்ளும். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
தயிர் மற்றும் கற்பூரம்
தயிர் மற்றும் கற்பூரத்தை சரிசமமாக எடுத்து, அதனை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச, தலைமுடி உதிர்வது குறைந்து, வழுக்கைத் தலையிலும் முடி வளர ஆரம்பிக்கும்.
கொத்தமல்லி
கொத்தமல்லியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களும் தடுக்கப்படும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை முடிக்கு நல்ல கருமை நிறத்தைத் தருவதோடு, தலைமுடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு கறிவேப்பிலையை நீரில் போட்டு தண்ணீர் பச்சையாக மாறும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

முடி உதிர்வது குறைய..

தேவையான பொருள்கள்:
  1. ஆலிவ் எண்ணெய்.
  2. இலவங்கப்பட்டை பொடி.
  3. தேன்.
செய்முறை:
ஆலிவ் எண்ணெயில் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி மற்றும்  தேன் சேர்த்து நன்றாக கலந்து அதிகமாக முடி உதிர்ந்து வழுக்கை போன்று இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வு குறைந்து முடி வளரும்.

இளநரையா? கவலையை விடுங்க: தீர்வு இதோ!

இளநரையா? கவலையை விடுங்க: தீர்வு இதோ!






பகுதி : 1

“போனல் என்ன மயி..(Sensor).. தானே என்று விட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது. அழகுக்கு கருகரு முடி தான் பிரதானம். (ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி)

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும்.

ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும்.

தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும்.

இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.

இது எல்லாம் செய்ய பஞ்சியா?? கவலைய விடுங்கள்: இயற்கை முறையில் சாயம் பூசலாம்…

தலைக்குச் சாயம் (Hair Dye)

சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம்.

கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம்.

மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம்.

மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

Thanks.
Tamilcloud




பகுதி : 2

இள நரையைப் போக்க வேண்டுமா....?


இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்­ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.


தேங்க்ஸ், koodal

தலை முடி செழித்து வளர

தலை முடி செழித்து வளர

 
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்