ஞானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தோபா சுவாமிகள் சரிதம்



திருச்சிராப்பள்ளியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் சிவகுரு நாதப்பிள்ளை சிவகாமி அம்மையாரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர், சிவகுருநாதப் பிள்ளை இல்லறத்தை நல்லறமாகச் செய்தார். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இரண்டு ஆண் மக்களையும், பெண் மகவு ஒன்றையும் பெற்றனர்.

தோபாசுவாமிகளின் தோற்றம்:


அதன் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு இவர் தன் மனைவியாருடன் மூர்த்தி தல தீர்த்தங்களை முறையாகச் செய்து கொண்டு முடிவில் இராமேஸ்வரம் சென்று அங்கு இராமபிரான் பூசித்த இராமலிங்கப் பெருமானை வணங்கிப் போற்றி தம்மிடஞ் சேர்ந்து இருந்தனர்.
இவர்கள் இராமேஸ்வம் சென்று வந்த பிறகு முற்பிறவி தவப்பயனாலும் இராமலிங்கப் பெருமானின் திருவருளாலும் சிவகாமி அம்மையார் கர்ப்பம் தரித்து உரிய காலத்தில் ஒர் ஆண் மகனை பெற்றார். இராம நாத சுவாமியின் திருவருளால் பிறந்த நம் சுவாமிகளுக்கு இராமலிங்கம் எனத் திருநாமமிட்டனர்.

தோபா சுவாமிகளின் இளமைப் பருவம்:

பாலப் பருவம் நீங்கி குமாரப் பருவம் எய்திய இராமலிங்கத்தை முறைப்படி கல்வி கற்க பள்ளியில் சேர்த்தனர். முற்பிறப்புக்களிலேயே அனைத்துங் கற்ற இவர் வருத்தமின்றி பழைய பாடங்களைத் திருப்புவதைப் போல ஆசிரியர்களும், மாணாக்கர்களும் வியக்கும் வண்ணம் கற்றுத் தேர்ந்தார்.\
இந்த இராமலிங்கச் சிறுவரின் நிலையைக்கண்ட ஆங்கில அரசு தம் காலாட் படையில் சேர்த்து கொண்டது. இவர் பணியாற்றிய படைப்பிரிவு சென்னையை அடுத்துள்ள ஆவடியில் இருந்தது. ஆங்கிலேயர் படைப்பயிற்சியில் தினமும் காலை 6.00 மணி முதல் ஒரு மணிநேரம் வரை படைப்பயிற்சி நடைபெறும். அதன் பிறகு தேனீர், வகுப்புகள், சிற்றுண்டி என்று பல பிரிவுகள் முறைப்படி தொடர்ந்து நடைபெறும். எல்லாப் பணிகளையும் இவர் திருப்திகரமாகவே செய்து வந்தார்.
பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் படைவீர்ர்கள் வெளியில் சென்று வருவார்கள் ஆனால் தோபா சாமியோ சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தபோதும் அவர் வெளியில் செல்வதே இல்லை பணிமுடிந்தவுடன் படைவீரர்கள் தங்கும் இடத்திலேயே இறை சிந்தையோடு நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார். காலம் செல்லச் செல்ல அவருடைய தவக்காலமும் அதிகரித்தது.
படைவீர்ர்கள் தங்கும் இடத்தை மேற்பார்வையிட தினமும் இரவு வேளைகளில் கண்காணிப்புக் காவலர்கள் சோதனைக்கு வந்து செல்வார்கள் சிறிது நாட்களுக்கு பிறகு சாமி இரவு வேளைகளில் தியானம் செய்தபடி இருப்பதையும் காலை 6.00 மணிக்கெல்லாம் படைப்பயிற்சித் திடலுக்கு முறைப்படி வந்து விடுவதால் அவர் இரவு தியானம் செய்வதை ஒரு குறையாகவே எடுத்துகொள்ளவில்லை. அதுபற்றி காவலர்கள் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இல்லை.
இப்படியிருக்கும் பொழுது ஒரு நாள் படைப்பிரிவின் மேலதிகாரி படைவீரர்கள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நுழைந்தார், எல்லோரும் பயிற்சித் திடலுக்கு சென்றிருந்த போது சாமி மட்டும் அவர் தம் இருப்பிடத்திலே அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இருப்பினும் அவர் சுவாமியின் தவத்தைக் கலைக்காமல் படைப்பயிற்சித் திடலுக்கு வந்தார் அங்கு வந்த மேலதிகாரி அதிசயத்தக்க வகையில் சாமி அவர்கள் முறையான சீருடையுடன் படைப்பயிற்சி பெறத் தயராக அவருக்கு உரிய வரிசையில் நின்று கொண்டிருந்ததையும் கண்டார்.
உடனே மேலதிகாரி இந்தப் படைவீரர் ஒரு மகா சித்தர் என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டு சென்று விட்டார். இதன் பின்னர் சுவாமி அவர்கள் தன் படைவீரர் பணியை விட்டு விலகி சுதந்திர துறவியாக (ஆடை இல்லாமல்) வெளியில் வந்து, சென்னையிலும், சென்னையச் சுற்றியிள்ள பகுதிகளிலும் தம் சித்தாடல்களைச் செய்துகொண்டிருந்தார்.

தோபா சித்தர் பெயர்காரணம்:

நம்முடை தோபாசித்தர் அவர்கள் திருஞானசம்பந்தப் பெருமானை மானசீக குருவாக கொண்டவர். அவர்தம் முதல் பதிகமான தோடுடைய செவியன் பதிகம் மீது மிகவும் காதல் கொண்டவர் இந்த பாடலை அவர் கேட்டவுடன் தன் நிலை மறந்து வீற்றிருப்பார்.
சென்னையில் அவர் தங்கியிருந்த பகுதியில் வாழும் சிறுவர்கள், சுவாமி அவர்களை சுற்றி சுற்றி வருவார்கள். அச் சிறுவர்களை சுவாமி அவர்கள் தோடுடைய செவியன் என்ற பாடலை பாடுங்கள் என்று கேட்பார் உடணே பாடுவார்கள்.
இவ்வாறு பல நாள் தொடர்ந்து நடந்தது கொஞ்ச நாட்களுக்கு பிறகு அச் சிறுவர்களை பார்த்து தோ பா என்றார் ‘தோ’ என்பது தோடுடைய செவியன் என்ற பாடலையும் ‘பா’ என்ற எழுத்து பாடுங்கள் என்பதையும் குறிக்கும். தோ பா என்ற உடனேயே சிறுவர்கள் பாடத் தொடங்கி விடுவார்கள், இதனால் சிறுவர்கள் இவரை அன்புடன் ‘தோபாசாமி’ என்று அழைத்தனர்.

 

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன் 
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!

 

தோபாசுவாமிகளும் வடலூர் வள்ளல் பெருமானும்:

சென்னையில் பல சித்துகள் புரிந்த சுவாமி அவர்கள் சென்னையில் உள்ள திருவொற்றியூரில், நம் தோபா சுவாமிகள் ஒரு நாள் தெருவோரம் அமர்ந்து இருந்தார். அந்த தெருவில் போவோர் வருவோரைப்பார்த்து அவரவர் குணங்களுக்கேற்ப நாய் போகிறது, நரி போகிறது, கழுதை போகிறது, பேய் திரிகிறது எனப் பகர்ந்தவண்னமிருந்தார்.
அந்நேரத்தில் வடலூர் வள்ளல் அவர்கள் அத்தெருவழியாக வரவே; மனிதர் வருகிறார் என்றார். இதனைக் கேட்டு அருகில் நின்றுகொண்டிருந்த சிலர் இவர் ஒரு பைத்தியம் எனக் கூறினார். ஆனால் வள்ளல் பெருமான் இவரின் நிலை உணர்ந்தார் இவரும் யாமும் ஒத்த நிலையுடையோம் இவர் திக்கு ஆடையினார்; யாம் வெண்ணிற ஆடையினோம், இதுவே வேறுபாடு எனக்கூறி நமது தோபா சாமிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பிரிவாற்றாது நீங்கிப் போனார்.

தோபாசுவாமிகள் வேலூர் வருகை:

சென்னையில் இருந்த சுவாமி அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னையை விட்டு வெளியேற முற்பட்டார் அப்போது அவருடைய முக்கிய சீடர்கள் சிலர் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர், குதிரைவண்டி வேலூர் சென்றதும் அங்கே சாமி இறங்கிவிட்டார் அதன் பிறகு சாமி வேறு எங்கும் செல்லவில்லை வேலூரிலேயே சுமார் 12 ஆண்டுகள் சித்தாடல்கள் பல புரிந்துகொண்டு வந்தார்.

சுவாமிகளின் ஒடுக்க நிலை:

இவ்வாறாக நமது தோபா சுவாமிகள் தன்னுடைய குருநாதரான திருஞானசம்பந்த பெருமான் அருளால் அநேக திருவிளையாடல்களைப் புரிந்தும். தம்மைச் சரணடைந்த சீடர்களுக்கு ஞானம் வழங்கும் ஒர் அற்புத துறவுச் சக்கரவர்த்தியாய் விளங்கினார்.
அருட்தந்தையாக வாழ்ந்த நமது தோபா சுவாமி அவர்கள் கி.பி.1850 ஆம் ஆண்டு சாதாரண வருடம் பங்குனி திங்கள் இருபத்தி ஏழாம் நாள் புதன்கிழமை பூர்பவட்சம் பிரதமை திதி இரேவதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் ஒடுக்க நிலை நின்றார்.
வேலூர் மக்கள் இன்றும் அவரைத் தெய்வமாகக் கருதி அவர் சமாதியில் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அவர் சமாதி அடைந்த நாளில் குரு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் இந்த மடாலயத்தில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது.


தோபாசாமி மடலாயம் இருக்கும் இடம் வேலூர் சைதாப்பேட்டை

கருத்துரை

மகரிஷி மகேஷ்யோகி இந்திய சீனப்போரை நிறுத்திய யோகி.....‘இப்படியும் நடக்குமா?’ .

 

 

1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது.சீனப்படையினர் இந்திய வீரர்களையும்,ஆயுதங்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் இங்கிலாந்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.அங்குள்ள மக்களிடம்,

“போரின் காரணமாக என் நாடு சண்டையில் ஈடுபட்டுள்ளது.உடனடியாக நான் இந்தியா போக வேண்டும்” என்று சொல்ல,அங்குள்ள மக்கள் மகரிஷியிடம்,


“உங்கள் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும்” என்று கேட்டனர்.உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டேப் ரெக்கார்டரை எடுத்து வருமாறு பணித்தார்.


Science of being and art of Living என்ற தலைப்பின் கீழ் ஆன்மீக சொற்பொழிவாற்றி அவர்களுக்கு அளித்தார்.பின்னர் அச்சொற்பொழிவைப் புத்தக வடிவில் Penguin என்ற நிறுவனத்தினர் வெளியிட்டனர்.அது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது.




இந்தியா வந்த மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,இந்திய ஜனாதிபதியைச் சந்தித்து,


“இப்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.ஆனால்,நான் சொல்கிறபடி சில செயல்களை போர் நடக்கும் இடத்தில் செய்ய உங்களால் முடியுமா?” எனக் கேட்டார்.


அதற்கு இந்திய ஜனாதிபதி, “முடியாது.எங்கள் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு கூறுவார்கள்.ஆகவே,அரசு சம்பந்தப்படாமல் தாங்களே தனியாக எதுவும் செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என தனது இயலாமையை வெளியிட்டார்.




உடனே,மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,தனது செயலாளர் தேவேந்திராவுடன் போர் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்றார்.சென்று,


“இந்தப் போர் நடப்பதற்கு சீனாவில் உள்ள ஒரு மனித மூளையே காரணம்.அவர் மனதை மாற்றிவிட்டால் போதும். அதை தியானம் செய்து மாற்றப் போகிறேன்.நான் வெளியில் வரும்வரை காவலாக இரு.யாரையும் உள்ளே விடாதே” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.




பின்,24 மணி நேரம் கழித்து வெளியே வந்த மகரிஷி மகேஷ்யோகி பக்கத்திருந்த ஊருக்குச் சென்று தினசரிப் பத்திரிகை வாங்கி வா என்று அனுப்பி வைத்தார்.பத்திரிகை வங்கிப்படித்த மகரிஷியின் செயலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆம்,சீனா சண்டையை நிறுத்தி விட்டது.தன் படைகளை இந்தியாவின் எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது.




இதைப் படித்ததும் அவரால் நம்ப முடியவில்லை; ‘இப்படியும் நடக்குமா?’ என்று ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார்.

இது எப்பூடி இருக்குது ?..


|


நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும்
சரியான பதில் என்ன தெரியுமா? மௌனம் .


|

இராமகிருஷ்ண பரமஹம்ஸர்

பாம்பு மிகவும் கொடிய விஷமுள்ளது. எவரேனும் அதைப்பிடிக்கப் போனால் அது அவரைக் கடித்துவிடுகிறது.

ஆனால் பாம்பு பிடிக்கும் தொழிலைக் கற்றுள்ளவன் பாம்பைப் பிடிப்பது மட்டுமன்றி தனது கழுத்தைச் சுற்றியும் கைகளைச் சுற்றியும் ஆபரணங்களை அணிவது போல பாம்புகளைத் தொங்க வைத்திருப்பான்.

அதுபோல ஆத்ம ஞானமடைந்தவன் காம, குரோத, ஆசைகளால் ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டான். வீட்டிலுள்ளவர்கள் வழிப்புடனி ருந்தால் திருடர்கள் வரமுடியாது.

அதுபோன்று நீயும் ஆத்மஞான விழிப்புடனிருந்தால் தீய எண்ணங்கள் உன் மனத்தினுள் நுழைந்து நல்ல எண்ணங்களை கொள்ளையிட முடியாது.
===============================
>இராமகிருஷ்ண பரமஹம்ஸர்

நீங்கள் முக்தி பெற வேண்டுமா?

மனிதர்களாகப் பிறந்தவர்களின் ஆசை, முக்தி பெற வேண்டும் என்பதுதான்; ஆனால், இந்த முக்தி ஒரு சிலருக்கு தான் கிடைக்கிறது. சில ஷேத்திரங்கள், முக்தி ஸ்தலம் என்று சொல்லப்பட்டுள்ளது. கமலையில் (திருவாரூரில்) பிறந்தால், முக்தி; சிதம்பரத்தை (நடராஜரை) தரிசித்தால், முக்தி; திருவண்ணாமலையை (அண்ணா மலையை) நினைத்தாலே முக்தி; காசியில் இறந்தால், முக்தி என்றெல்லாம் கூறுகின்றனர்.

இதில், கமலையில் பிறப்பது இவன் கையில் இல்லை; அது, அவன் தாயாரின் விருப்பத்தைப் பொறுத்தது. அடுத்து, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. எத்தனையோ தடவை சிதம்பரம் வழியாகப் போவர்; ஆனால், இறங்கி, நடராஜ தரிசனம் செய்ய நேரமிராது. அடுத்தது, ரொம்ப சுலபம். அண்ணாமலையை நினைத்தாலே போதும், முக்தி கிடைக்குமாம். எவ்வளவோ வேலைகள், தொல்லைகள். அருணாசலத்தை, அது தான், திருவண்ணாமலை யாரை நினைக்க நேரமிராது. அடுத்தது, காசியில் மரிப்பவருக்கு முக்தி; ஆனால், அது எல்லாருக்கும் கிடைத்து விடாது. காசியில் மரிக்க வேண்டிய புண்ணியம் உள்ளவர்களை அழைத்து வரவும், புண்ணியமில்லாதவர்களை வரவிடாமல் தடுத்தும், அப்படி, யாராவது தங்கியிருந்தாலும், அவர்களை வெளியூருக்குக் கிளப்பி விடவும் தனித்தனியாக பூத கணங்களை அங்கே பகவான் வைத்திருப்பாராம்.


புண்ணியமில்லாதவன், காசிக்குப் போகிறேன் என்று, எத்தனை தடவை புறப்பட்டாலும் போக முடியாது; அதே போல், புண்ணியமில்லாதவன் அங்கிருந்தாலும் கடைசி காலத்தில் அங்கே மரிக்க முடியாது. புண்ணியமுள்ளவன் அங்கே இருந்தால் அது பாக்கியம் அல்லது வேறு எங்கேயாவது இருந்தாலும் மரண காலத்தில் அவன் அங்கே வந்து சேர்ந்து விடுவான். இது ஈ, எறும்பு முதல் எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும். காசியிலுள்ள அனைத்து ஜீவன்களுக்கும் முக்தி!
காசி செல்ல ஏற்பாடு செய்கிறாள் ஒரு பாட்டியம்மா. எத்தனையோ சாமான்களை சேகரம் செய்து வைத்துக் கொள்கிறாள். கூடவே, ஒரு டின் நிறைய முறுக்கு எடுத்துக் கொள்கிறாள். காசியில் போய் டின்னைத் திறந்து பார்க்கிறாள். அதற்குள்ளே கட்டெறும்பு ஒன்று முழிச்சு, முழிச்சு பார்க்கிறது. "அட, சீ... கட்டெறும்பு, வந்துடுத்தே!' என்று சொல்லி, எறும்பை எடுத்து கீழே தரையில் போட்டு காலால் மர்த்தனம் செய்கிறாள்.
கட்டெறும்பு புண்ணியம் செய்திருந்தது. டிக்கட் கூட வாங்காமல், சாப்பாட்டு செலவும் இல்லாமல் காசியில் மரணம்; முக்தி! இது எல்லாருக்கும் கிடைத்துவிடாது.
அங்கே யாராவது மரணமடைந்தால், அழமாட்டார்கள்; காசி விசுவநாதன் அழைத்துக் கொண்டு விட்டான் என்பர்.


இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும். நாம் பாரதத்தில் எத்தனையோ ஷேத்திரங்கள், புண்ணிய நதிகள். என மனிதன் நற்கதி பெற பல மார்க்கங்கள் உள்ளன. இவைகளிலும் நம் கவனம் செல்ல வேண்டும்.

by Rupa

இறையடியார்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல!-

பணத்தைத் துச்சமாக மதித்த ஞானி ஒருவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவரது பெயர் ஜூனைதுல் பக்தாதி (ரலி). இவரது சீடர் ஒருவர் ஞானிக்கு ஒருமுறை 500 பொற்காசுகளைக் காணிக்கையாக அளிக்க முன்வந்தார்.
ஞானி கேட்டார்.
"அன்புச்சீடரே! தங்களிடம் இவ்வளவு தான் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா?" என்று.
"நிறைய இருக்கிறது, ஏன் கேட்கிறீர்கள்? ரலி அவர்களே!" என்ற சீடரிடம், "அதிருக்கட்டும். உங்களுக்கு அந்தச்செல்வம் போதுமா? இன்னும் தேவையிருக்கிறதா?" என்றார் ஞானி.
"ஆம், நான் இன்னும் பொருள் சேர்க்க ஆசைப்படுகிறேன்," என்றார் சீடர்.
"அப்படியானால், என்னை விட உங்களுக்கு பணத்தேவை அதிகமாக இருக்கிறது. இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் இப்போதும் பணமில்லை. இனி வேண்டும் என்ற எண்ணமுமில்லை," என்றார் ஞானி.


இறைத்தொண்டு செய்பவர்கள் தங்களை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அவர்களது தேவை மிகவும் குறைவாகவே இருக்கும்.

by Rupa

புலால் உண்ணலாமா என்ற எண்ணம் உண்டானால் அவரை ஞானி என கூறாதே




அளவிறந்த யோகத்திலிருக்கின்ற யோகிகளும்,ஞானிகளும்,புலால் உண்ணலாமா என்ற எண்ணம் உண்டானால் அவரை ஞானி என கூறாதே.
சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்று அறியப்படும்.

Picture from dinamalar.com

ஆழந்த கண்ணீருடன்
பாலமுருகன்