தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...பாடல் வரிகள்.

எப்போது கேட்டாலும் நெஞ்சை கசக்கி பிழியும் இசை மற்றும் பாடல் வரிகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இசைஅரசன் சீர்காழியின் வெண்கல குரல் .


கண்களை மூடி அமைதியாக கேளுங்கள்கண்களில் நீர் வரவில்லைஎன்றால் .......................உங்கள் கண்ணீர் சுரப்பியில் கோளாறு என்ற பொருள்.

இந்த பாடலின் தரமான இசை ...





படம் : கர்ணன்
பாடல் : கவியரசர்
குரல்: சிர்காழி கோவிந்தராஜன்




  • உள்ளத்தில் நல்ல உள்ளம்
    உறங்காதென்பது

    வல்லவன் வகுத்ததடா , கர்ணா

    வருவதை எதிர்கொள்ளடா .


  • தாய்க்கு
    நீ மகன் இல்லை
    தம்பிக்கு அண்ணன் இல்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும்
    உன் பழி கொண்டேனடா


  • மன்னவர் பணி ஏற்கும்
    கண்ணனின்
    பணி செய்ய
    உன்னடி பணிவானடா ,கர்ணா
    மன்னித்து அருள்வாயடா ,


  • செஞ்சோற்று
    கடன்தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ,
    கர்ணா
    வஞ்சகன் , கண்ணனடா

Original source: http://www.eegarai.net/t27338-topic#ixzz24fp0OsYi

இப்படியும் சில பழமொழிகள்

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

* கார் ஓட டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செறுப்பு காலை கடிக்காது

* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும் , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு . அப்போது என்ன செய்யவேண்டும் ...

moblie போன் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .


தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?

முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும் அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம் .

வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வைப்பு உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது .. எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது ...


நன்றி கதிர்வேல்

மன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகள்

1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். !!!


நன்றி கதிர்வேல்

ஆண்களுக்குப் பெண் சமமா?

*
ஆண்களுக்குப் பெண் சமமா? ஆணை விடப் பெண் தாழ்ந்தவளா? ஆண்களைப் போலப் பெண்களும் எல்லாத் துறைகளிலும் வித்தியாசமின்றி நுழையலாமா? பெண்களுக்கு அடுப்பறைதான் உலகமா? வேலைக்குப் போகும் பெண்களை விட இல்லத்தரசிகள் தாழ்ந்தவர்களா?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு விடையளிக்க முற்பட்டுள்ளேன். நிதானமாக முழுவது படித்து விட்டு பின்பு கருத்தொலி(Feed Back) செய்யவும்.

ஆண்களுக்குப் பெண் என்றும் சமமாக முடியாது. இரு பொருள்கள் சமமில்லை என்றால் அவற்றுள் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று அர்த்தமாகாது. சதுரங்கம் ஒரு விளையாட்டு. கால்பந்து ஒரு விளையாட்டு. கிரிக்கெட் ஒரு விளையாட்டு. இவற்றுள் எது எதற்குச் சமம்? அல்லது எது எதற்குத் தாழ்ந்தது அல்லது உயர்ந்தது? கூற முடியுமா உங்களால்?

எல்லாம் விளையாட்டுக்கள் தானே?

சரி அடுத்த உதாரணத்திற்குப் போவோம்.

நம்மைப் பொறுத்தவரை சாலையில் போகும் எல்லா மாடுகளும் ஒன்றுதான், அது காளையா அல்லது என்று பசுவா என்று நாம் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. நம் கவலை எல்லாம் அது நம் மேல் முட்டக்கூடாது அல்லது நம் வண்டி அதன் மேல் மோதக் கூடாது.

ஆனால் பசுவும் காளையும் ஒன்றாகுமா? அல்லது ஏதாவது ஒன்று உயர்ந்ததா? பசுவின் வேலை கன்றுகளை ஈனுவடு மற்றும் பால் தருவது; காளையின் வேலை வண்டி இழுப்பது, ஏரில் வயலை உழுவது. வேலை எதுவும் செய்யவில்லை என்பதற்காகப் பசுவைத் தாழ்ந்தது என்றும் கஷ்டப்பட்டு வயலில் வேலை செய்வதால் காளையை உயர்ந்தது என்றும் சொல்லலாமா?
சமத்துவம் என்று சொல்லி, காளையில் பால் கறந்து பசுவை ஏரில் பூட்ட முடியுமா?

ஒரு விவசாயி எனக்கு பசு மட்டுமே போதும் என்றோ அல்லது காளைகள் மட்டுமே போதும் என்றோ சொன்னால் அவனைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கும்.

நம் மூளையில் இடது மூளை, வலது மூளை என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. வலது பக்க மூளை உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை ஆள்வது. இடது பக்க மூளை அறிவுப்பூர்வமான விஷயங்களை ஆள்வது. எனக்கு உணர்ச்சிகளே தேவையில்லை, ஆகவே எனக்கு இடது மூளையே போதும் என்று சொல்ல முடியுமா?

அல்லது வலது மற்றும் இடது இரண்டுமே எனது மூளைதான் ஆகவே நாளை முதல் நான் உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை எனது இடது பக்க மூளையிலேதான் முடிவு செய்வேன் என்று யாராவது சொல்ல முடியுமா?

வலது கைக்கென்று சில வேலைகள் உண்டு; இடது கைக்கென்று சில வேலைகள் உண்டு. இரண்டுமே எனது கைதானே, ஆகவே இரண்டு கைகளிலும் எந்த வேலையையும் நான் செய்வேன் என்று கூற முடியுமா?

ஆண், பெண் இரண்டு பேருமே இரு பக்க மூளைகள் போன்றவர்கள். அவரவர்களுக்குள்ள வேலைகளை அவர்கள் ஒழுங்காகச் செய்தாலே போறும்; யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற எண்ணமே வராது.

இரண்டு பக்க மூளையும் செயல்பட்டால்தான் ஒரு மனிதன் இயங்க முடியும். ஒரு பக்க மூளை பழுது பட்டாலும் அவன் இயங்க முடியாது.

அது போல ஆணின்றிப் பெண்ணும், பெண்ணின்றி ஆணும் இந்த உலகில் இயங்க முடியாது. இதுதான் உண்மை. இரண்டும் ஒன்று சேர்ந்தாலே அது முழுமையான இயக்கம். ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை எனும்போது உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது?

ஒரு ஆணுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கும்போதுதான் அவன் தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள தன்னை விட பலத்தில் குறைந்த பெண்ணைத் தன்னை விட தாழ்ந்தவள் என்று கூறுகிறான்.

சாணக்யன் சொல்வது என்னவென்றால், பெண்ணை நீங்கள் தெய்வமாகத் தொழவும் வேண்டாம்; அவளைக் கீழே போட்டு மிதிக்கவும் வேண்டாம். எப்படி அவளுக்கு நீ தேவையோ அதுபோல உங்களுக்கும் அவள் தேவை. வண்டி ஓடுவதற்குச் சக்கரம் தேவையா அல்லது அச்சாணி தேவையா? சக்கரம் பெரியதாக இருந்தாலும் சிறிய அச்சாணி இல்லாமல் ஓடாது. அச்சாணி கூர்மையாக இருந்தாலும், சக்கரத்துடன் சேர்ந்தால்தான் அது பயன் தரும்; ஓடும். இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் பிரயோஜனம். தனித்தனியே இருந்தால் அது யாருக்கும் பயன்படாது.


அடுத்தது பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஈடுபடலாமா? பெண்களின் முக்கிய வேலை குழந்தைகளை நன்முறையில் வளர்ப்பது. உடனே நான் பெண்களைக் கட்டிப் போடுகிறேன் என்று கிளம்பி விடாதீர்கள். குழந்தை வளர்ப்பது என்பது சாமானியமான காரியமில்லை. அது மட்டுமல்ல, அது மற்றவர்கள் பொறுப்பில் விட அது சாதாரண விஷயமுமில்லை. இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியா. அத்தோடல்லாமல், அவர்கள்தான் பெற்றோர்களை நாளை காக்கக் கூடியவர்கள். பாசத்துடன் வளர்ப்பதுதான் முக்கியமே தவிர, பணத்துடன் வளர்ப்பது அல்ல. குடும்ப உறவுகள் குறைபட்டுப் போன மேல் நாடுகளைப் பார்த்தாவது நாம் திருந்த வேண்டாமா?

வேலைக்குப் போகும் பெண் வீட்டில் இருக்கும் இல்லத்தரசியை விட மேலானாவரா?

இது போல ஒரு கருத்து பெண்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகிறது. வீட்டில் இருப்பது கேவலம்; வேலைக்குப் போவதுதான் சிறப்பு என்று பல புதுமைப் பெண்கள் நினைக்கிறார்கள். அம்மணிகளே, அப்படி நீங்கள் நினைத்தால், இது நாள் வரை வேலைக்குச் சென்று கொண்டிருந்தது ஆண்கள் மட்டுமே; அப்படியானால் அவர்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்தது தவறல்லவே. ஆகவே வேலைக்குப் போகும் பெண்கள்தான் மேலானவர்கள்; இல்லத்தரசிகள் கீழானவர்கள் என்ற தவறான எண்ணம் யாருக்கும் வேண்டாம். வேலைக்குப் போவது என்பது அவரவர்கள் பொருளாதாரத்தைப் பொறுத்தது மட்டுமே; புத்திசாலித்தனத்தைப் பொறுத்து அல்ல.



மீண்டும் சந்திப்போம்.
சாணக்யன்:

தத்துவம்

1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.