குருநாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருநாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தோபா சுவாமிகள் சரிதம்



திருச்சிராப்பள்ளியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் சிவகுரு நாதப்பிள்ளை சிவகாமி அம்மையாரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர், சிவகுருநாதப் பிள்ளை இல்லறத்தை நல்லறமாகச் செய்தார். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இரண்டு ஆண் மக்களையும், பெண் மகவு ஒன்றையும் பெற்றனர்.

தோபாசுவாமிகளின் தோற்றம்:


அதன் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு இவர் தன் மனைவியாருடன் மூர்த்தி தல தீர்த்தங்களை முறையாகச் செய்து கொண்டு முடிவில் இராமேஸ்வரம் சென்று அங்கு இராமபிரான் பூசித்த இராமலிங்கப் பெருமானை வணங்கிப் போற்றி தம்மிடஞ் சேர்ந்து இருந்தனர்.
இவர்கள் இராமேஸ்வம் சென்று வந்த பிறகு முற்பிறவி தவப்பயனாலும் இராமலிங்கப் பெருமானின் திருவருளாலும் சிவகாமி அம்மையார் கர்ப்பம் தரித்து உரிய காலத்தில் ஒர் ஆண் மகனை பெற்றார். இராம நாத சுவாமியின் திருவருளால் பிறந்த நம் சுவாமிகளுக்கு இராமலிங்கம் எனத் திருநாமமிட்டனர்.

தோபா சுவாமிகளின் இளமைப் பருவம்:

பாலப் பருவம் நீங்கி குமாரப் பருவம் எய்திய இராமலிங்கத்தை முறைப்படி கல்வி கற்க பள்ளியில் சேர்த்தனர். முற்பிறப்புக்களிலேயே அனைத்துங் கற்ற இவர் வருத்தமின்றி பழைய பாடங்களைத் திருப்புவதைப் போல ஆசிரியர்களும், மாணாக்கர்களும் வியக்கும் வண்ணம் கற்றுத் தேர்ந்தார்.\
இந்த இராமலிங்கச் சிறுவரின் நிலையைக்கண்ட ஆங்கில அரசு தம் காலாட் படையில் சேர்த்து கொண்டது. இவர் பணியாற்றிய படைப்பிரிவு சென்னையை அடுத்துள்ள ஆவடியில் இருந்தது. ஆங்கிலேயர் படைப்பயிற்சியில் தினமும் காலை 6.00 மணி முதல் ஒரு மணிநேரம் வரை படைப்பயிற்சி நடைபெறும். அதன் பிறகு தேனீர், வகுப்புகள், சிற்றுண்டி என்று பல பிரிவுகள் முறைப்படி தொடர்ந்து நடைபெறும். எல்லாப் பணிகளையும் இவர் திருப்திகரமாகவே செய்து வந்தார்.
பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் படைவீர்ர்கள் வெளியில் சென்று வருவார்கள் ஆனால் தோபா சாமியோ சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தபோதும் அவர் வெளியில் செல்வதே இல்லை பணிமுடிந்தவுடன் படைவீரர்கள் தங்கும் இடத்திலேயே இறை சிந்தையோடு நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார். காலம் செல்லச் செல்ல அவருடைய தவக்காலமும் அதிகரித்தது.
படைவீர்ர்கள் தங்கும் இடத்தை மேற்பார்வையிட தினமும் இரவு வேளைகளில் கண்காணிப்புக் காவலர்கள் சோதனைக்கு வந்து செல்வார்கள் சிறிது நாட்களுக்கு பிறகு சாமி இரவு வேளைகளில் தியானம் செய்தபடி இருப்பதையும் காலை 6.00 மணிக்கெல்லாம் படைப்பயிற்சித் திடலுக்கு முறைப்படி வந்து விடுவதால் அவர் இரவு தியானம் செய்வதை ஒரு குறையாகவே எடுத்துகொள்ளவில்லை. அதுபற்றி காவலர்கள் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இல்லை.
இப்படியிருக்கும் பொழுது ஒரு நாள் படைப்பிரிவின் மேலதிகாரி படைவீரர்கள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நுழைந்தார், எல்லோரும் பயிற்சித் திடலுக்கு சென்றிருந்த போது சாமி மட்டும் அவர் தம் இருப்பிடத்திலே அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இருப்பினும் அவர் சுவாமியின் தவத்தைக் கலைக்காமல் படைப்பயிற்சித் திடலுக்கு வந்தார் அங்கு வந்த மேலதிகாரி அதிசயத்தக்க வகையில் சாமி அவர்கள் முறையான சீருடையுடன் படைப்பயிற்சி பெறத் தயராக அவருக்கு உரிய வரிசையில் நின்று கொண்டிருந்ததையும் கண்டார்.
உடனே மேலதிகாரி இந்தப் படைவீரர் ஒரு மகா சித்தர் என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டு சென்று விட்டார். இதன் பின்னர் சுவாமி அவர்கள் தன் படைவீரர் பணியை விட்டு விலகி சுதந்திர துறவியாக (ஆடை இல்லாமல்) வெளியில் வந்து, சென்னையிலும், சென்னையச் சுற்றியிள்ள பகுதிகளிலும் தம் சித்தாடல்களைச் செய்துகொண்டிருந்தார்.

தோபா சித்தர் பெயர்காரணம்:

நம்முடை தோபாசித்தர் அவர்கள் திருஞானசம்பந்தப் பெருமானை மானசீக குருவாக கொண்டவர். அவர்தம் முதல் பதிகமான தோடுடைய செவியன் பதிகம் மீது மிகவும் காதல் கொண்டவர் இந்த பாடலை அவர் கேட்டவுடன் தன் நிலை மறந்து வீற்றிருப்பார்.
சென்னையில் அவர் தங்கியிருந்த பகுதியில் வாழும் சிறுவர்கள், சுவாமி அவர்களை சுற்றி சுற்றி வருவார்கள். அச் சிறுவர்களை சுவாமி அவர்கள் தோடுடைய செவியன் என்ற பாடலை பாடுங்கள் என்று கேட்பார் உடணே பாடுவார்கள்.
இவ்வாறு பல நாள் தொடர்ந்து நடந்தது கொஞ்ச நாட்களுக்கு பிறகு அச் சிறுவர்களை பார்த்து தோ பா என்றார் ‘தோ’ என்பது தோடுடைய செவியன் என்ற பாடலையும் ‘பா’ என்ற எழுத்து பாடுங்கள் என்பதையும் குறிக்கும். தோ பா என்ற உடனேயே சிறுவர்கள் பாடத் தொடங்கி விடுவார்கள், இதனால் சிறுவர்கள் இவரை அன்புடன் ‘தோபாசாமி’ என்று அழைத்தனர்.

 

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன் 
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!

 

தோபாசுவாமிகளும் வடலூர் வள்ளல் பெருமானும்:

சென்னையில் பல சித்துகள் புரிந்த சுவாமி அவர்கள் சென்னையில் உள்ள திருவொற்றியூரில், நம் தோபா சுவாமிகள் ஒரு நாள் தெருவோரம் அமர்ந்து இருந்தார். அந்த தெருவில் போவோர் வருவோரைப்பார்த்து அவரவர் குணங்களுக்கேற்ப நாய் போகிறது, நரி போகிறது, கழுதை போகிறது, பேய் திரிகிறது எனப் பகர்ந்தவண்னமிருந்தார்.
அந்நேரத்தில் வடலூர் வள்ளல் அவர்கள் அத்தெருவழியாக வரவே; மனிதர் வருகிறார் என்றார். இதனைக் கேட்டு அருகில் நின்றுகொண்டிருந்த சிலர் இவர் ஒரு பைத்தியம் எனக் கூறினார். ஆனால் வள்ளல் பெருமான் இவரின் நிலை உணர்ந்தார் இவரும் யாமும் ஒத்த நிலையுடையோம் இவர் திக்கு ஆடையினார்; யாம் வெண்ணிற ஆடையினோம், இதுவே வேறுபாடு எனக்கூறி நமது தோபா சாமிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பிரிவாற்றாது நீங்கிப் போனார்.

தோபாசுவாமிகள் வேலூர் வருகை:

சென்னையில் இருந்த சுவாமி அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னையை விட்டு வெளியேற முற்பட்டார் அப்போது அவருடைய முக்கிய சீடர்கள் சிலர் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர், குதிரைவண்டி வேலூர் சென்றதும் அங்கே சாமி இறங்கிவிட்டார் அதன் பிறகு சாமி வேறு எங்கும் செல்லவில்லை வேலூரிலேயே சுமார் 12 ஆண்டுகள் சித்தாடல்கள் பல புரிந்துகொண்டு வந்தார்.

சுவாமிகளின் ஒடுக்க நிலை:

இவ்வாறாக நமது தோபா சுவாமிகள் தன்னுடைய குருநாதரான திருஞானசம்பந்த பெருமான் அருளால் அநேக திருவிளையாடல்களைப் புரிந்தும். தம்மைச் சரணடைந்த சீடர்களுக்கு ஞானம் வழங்கும் ஒர் அற்புத துறவுச் சக்கரவர்த்தியாய் விளங்கினார்.
அருட்தந்தையாக வாழ்ந்த நமது தோபா சுவாமி அவர்கள் கி.பி.1850 ஆம் ஆண்டு சாதாரண வருடம் பங்குனி திங்கள் இருபத்தி ஏழாம் நாள் புதன்கிழமை பூர்பவட்சம் பிரதமை திதி இரேவதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் ஒடுக்க நிலை நின்றார்.
வேலூர் மக்கள் இன்றும் அவரைத் தெய்வமாகக் கருதி அவர் சமாதியில் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அவர் சமாதி அடைந்த நாளில் குரு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் இந்த மடாலயத்தில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது.


தோபாசாமி மடலாயம் இருக்கும் இடம் வேலூர் சைதாப்பேட்டை

கருத்துரை

அய்யா வைகுண்டர் வகுத்த 32 அறங்கள்..

அய்யா வைகுண்டர் வகுத்த 32 அறங்கள்

1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.
2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.
3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.
5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.
6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.
7.திண்பண்டம் நல்கல்.
8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.
9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.
11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.
12.வாசனைப் பொருட்களை கொடுப்பது.
13.நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.
14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.
15.நாவிதர்களுக்கு உதவி செய்வது.
16.ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.
17.ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.
18.தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.
20.பிறர் துன்பம் தீர்ப்பது.
21.தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.
22.மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.
23.சாலைகள் அமைத்து கொடுப்பது.
24.சோலைகளை உண்டாக்கி வைப்பது.
25.பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.
26.மிருகங்களுக்கு உணவளிப்பது.
27.சுமைதாங்கி நிறுவுதல்.
28.விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.
29.கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.
30.குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.
31.பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.
32.வஸ்த்திர தானம் செய்தல்.
இவைகளே அய்யாவைகுண்டர் வகுத்த 32 அறங்கள் ஆகும்.இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்து மகிழ்வோம்.
அய்யா உண்டு!

இராமலிங்க அடிகளார் - வள்ளலார்


இராமலிங்க அடிகள் துறவியைப் போல வாழ்ந்தாலும், தன் மீது அன்பு கொண்ட அன்பர்களுக்காகவும், அடியார்களுக்காகவும் மிகவும் மனம் இரங்குவார். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கண்டு மனம் வருந்துவார்.


ஒரு முறை பெரும் பணக்காரரான அன்பர் ஒருவர் தனது இல்லத் திருமணத்திற்கு அடிகளாரை அழைத்திருந்தார். அன்பரின் மனம் கோணக் கூடாது என்பதற்காக வள்ளலாரும் திருமணத்திற்கு வர இசைந்தார்.

குறிப்பிட்ட நாளில் அந்த அன்பரின் இல்லம் நோக்கிச் சென்றார். ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி அவரது உள்ளத்தை தைத்தது. இல்ல வாயிலில் நின்று கொண்டிருந்த உறவினர்களில் சிலர், செல்வந்தர்களையும், ஆடம்பர உடையணிந்தவர்களையும் மட்டுமே உள்ளே அனுப்பினர். மற்றவர்களை அனுமதிக்காமல் இருந்தனர். எனவே மிகவும் எளிமையான தம்மையும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என நினைத்த வள்ளலார், எதிரே உள்ள வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து விட்டார். பின் கீழ்கண்டவாறு ஒரு குறிப்பையும் எழுதி, அதை அந்தச் செல்வந்தரிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு சிறுவனிடம் கூறி உள்ளே செல்லாமல் வெளியிலேயே இருந்து விட்டார்.

” சோடில்லை மேல் வெள்ளைச் சொக்காய் இல்லை

நல்ல சோமன் இல்லை

பாடில்லை; கையிற் பணமில்லை

தேகப் பருமன் இல்லை

வீடில்லை. யாதொரு வீறாப்பும் இல்லை.

விவாகமது நாடில்லை நீ

நெஞ்சமே! எந்த ஆற்றினில் நண்ணினையே!”

அடிகளாரின் இந்தப் பாடலைப் படித்தார் அந்தச் செல்வந்தர். உள்ளம் பதைத்தார். வெளியே ஓடோடிச் சென்று அடிகளாரின் கால்களில் வீழ்ந்தார். தம்மை மன்னிக்குமாறு வேண்டினார். அவரை உள்ளே அழைத்துச் சென்றதுடன், அன்று முதல் ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி அனைவருடனும் சமமாகப் பழகலானார்.

இவ்வாறு தனது நடத்தையின் மூலமும், சிறு பாடல்களின் மூலமும் எத்தனையோ அன்பர்களை நல்வழிப்படுத்தி இருக்கிறார் இராமலிங்க அடிகளார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்தேன்

என்கிறார் ஞான சத்குரு வள்ளலார். எல்லாவுயிரையும் தம் உயிராய் எண்ணி வாழ்ந்த மகான் திருவடி போற்றுவோம்.


தே. பாலமுருகன்
காஞ்சிபுரம்

நமது உடலின் உறுப்புக்களிலேயே மிகவும் சிறந்த உறுப்பு எது?

சுந்தரமடம் என்பது சுவாமி சிரானந்தரின் மடம். அந்த மடத்தில் ஏராளமான சீடர்கள் இருந்தனர். குருநாதர் மிகவும் நல்லவர். சீடர்களுக்கு நல்லறிவையும், ஞானத்தையும் போதிப்பவர். ஒரு முறை கூட அவர்கள் தவ வலிமையிலிருந்து தவறி விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருந்தார் குருநாதர்.


ஒரு முறை அவர் தனது சீடர்களை அழைத்தார். ஒரு பெரிய மரத்தடியில் அவர்களுடன் அமர்ந்தார். ""சீடர்களே! நான் இப்போது ஒரு கேள்வி கேட்பேன். அந்தக் கேள்விக்கு சரியான பதிலைக் கூறுகிறவனே இந்த மடத்தில் தலைமை சீடனாக பணி செய்ய தகுதி உடையவன். அதோடு என் ஆயுளுக்குப் பின்பு இந்த மடத்தின் தலைமை குரு பதவியும் அந்தச் சீடனுக்கே கிடைக்கும்,'' என்றார். பல புத்தியுள்ள சீடர்கள் அப்போதே தலைமை சீடர் பதவியும், பிற்காலத்தில் குருநாதர் பதவியும் தங்களுக்குத்தான் என்று முடிவு செய்து விட்டனர். மற்ற எல்லா மாணவர்களும் போட்டியில் வெல்லும் ஆவலுடன் காத்திருந்தனர்.


குருநாதர் தன் சீடர்களைப் பார்த்து, ""நமது உடலின் உறுப்புக்களிலேயே மிகவும் சிறந்த உறுப்பு எது? மிகவும் மோசமான உறுப்பு எது?'' என்று கேட்டார். உடனே சீடர்கள் மிகவும் மகிழ்ந்தனர். "இது என்ன? இந்த பதில் கூடவா தெரியாமல் இருப்போம். இத்தனை சாதாரணமான கேள்வியை குரு கேட்டு நம் அறிவைத் தாழ்வாக எடைப் போட்டு விட்டாரே' என்று சலித்துக் கொண்டனர். சீடர்கள் ஒவ்வொருவராக எழுந்தனர். சிலர், ""நமது உறுப்புக்களிலேயே மிகவும் சிறந்த உறுப்பு கைகள்தான். அவைதான் நமக்காக அதிகம் உழைக்கின்றன. எனவே, அவை தான் சிறந்த உறுப்பு என்றும், அசுத்தங்களை வெளியேற்றும் உறுப்பே மோசமான உறுப்பு என்றனர்.


எல்லாரும் அசுத்தங்களை வெளியேற்றும் உறுப்புகளையே மோசமான உறுப்புகள் என்றனர். மற்றபடி உயர்ந்த உறுப்புகள் என்பதற்கு கண்கள் பார்க்க உதவுவதாகவும், கால்கள் போக்குவரத்துக்கு உதவுவதாகவும் இப்படி காது, வயிறு, பல், நாக்கு என்று பல உறுப்புகளையும் அவைகளின் உபயோகத்தையும் கூறி குறிப்பிட்டனர். குருநாதர் அனைத்தையும் வெகு கவனமாக கேட்டார். அந்த மாணவ சீடர்களுள் முரளி என்றொரு சீடன் இருந்தான். அவன் எப்போதுமே மிகவும் நல்ல சிந்தனையாளன். நிதானித்து பேசுபவன்; யோசித்து செயல்படுபவன். எல்லாரிடமும் பணிவுடனும், அன்புடனும் பேசிப் பழகுபவன். குருநாதர் கேள்வி கேட்ட போது அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். எனவே, குருநாதர் அவனிடம், ""சீடனே! என் கேள்வியின், பதிலை நீ கூறலாமே,'' என்று கேட்டார். உடனே முரளி தன் குருநாதரை பணிந்து எழுந்தான்.
""குருநாதரே! இந்த உலகில் மிகவும் பெருமை வாய்ந்த உறுப்பு நமது நாக்குதான். ஏனென்றால், ஒரு மனிதனை மற்றவர்கள் மதிக்கும்படி செய்வது அவனது நாக்குதான். அந்த நாக்கின் பேச்சைத் தான் மக்கள் வெகுவாக கவனிக்கின்றனர். அந்தப் பேச்சின் தரத்தை வைத்து அவர்கள் மனிதர்களை மதிக்கின்றனர். ஒரு மனிதனுக்கான மிகச் சிறந்த மதிப்பீட்டு உறுப்புகளில் மிகச் சிறந்த உறுப்பு நாக்குதான்,'' என்று கூறினான். அதைக் கேட்ட குருநாதர் மிகவும் மகிழ்ந்தார். ""முரளி! உன் பதில் சரியானது. இனி மனித உறுப்புகளில் மிக மோசமான உறுப்பு எது என்று கூறு பார்க்கலாம்,' என்றார். உடனே முரளி, "நாக்குதான் உறுப்புகளிலேயே மிகவும் மோசான உறுப்பு...' என்றான். இதைக் கேட்ட மாணவர்கள் சிரித்தனர்.


""இப்போதுதான் நாக்கை மிகவும் உயர்ந்த உறுப்பு என்றாய். உடனே மோசமான உறுப்பு என்கிறாயே?'' என்று கேட்டனர். ""ஆமாம்! நல்லதைப் பேசி ஒரு மனிதனை உயர்வாக எண்ணச் செய்வதும் நாக்குதான். மோசமாகவும், இழிவாகவும் பேசி ஒரு மனிதனின் தரத்தைச் தாழ்த்தி அவனை மோசமான மனிதனாக மதிப்பிட வைப்பதும் நாக்குதான். எனவே, இந்த உலகின் மிகவும் மோசமான உறுப்பு நாக்குதான்,'' என்று விளக்கினான். அவனது பதிலே சிறந்த சரியான பதில் என்று குருநாதர் முடிவு செய்தார். அவனை தலைமை சீடனாக ஒப்புக் கொண்டார். 



... நம் நாக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்தீர்களா? நம்மை உயர்வடைய செய்வதும், தாழ்வடையச் செய்வதும் நாக்குதான். எனவே, கவனமாக பேச வேண்டும். சரியா?

நன்றி தினமலர்! rolleyes.gif