பசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிராணிகள் ஆகிய எங்களின் ஒட்டு மொத்த முறையீடு - "இரக்கம் காட்டுங்கள்"


வாயிலாத ஜீவர்களாகிய நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.
நாங்களும் உங்களை போன்ற "ஆன்மாக்கள்" தான். ஆனால் , எங்கள் வினைக்கு ஏற்ப நாயாகவும் , ஆடாகவும் , பன்றியாகவும் , கோழியாகவும் , பூனையாகவும் , நண்டாகவும்,மீனாகவும் , வாத்தாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் முற்-பிறவியில் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்காததால் , துஷ்ட்ட மிருகங்களாக பிறந்து உள்ளோம்.

நீங்களும் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வில்லை என்றால் , எங்களை போன்ற தேகங்களை எடுக்க நேரிடும். இதனை , வடலூர் இராமலிங்க சுவாமிகள் தெளிவாக தாம் இயற்றிய "ஜீவகருன்ய ஒழுக்கத்தில்" எச்சரிக்கை கொடுத்துள்ளார் .

இந்த மனித தேகத்தை வைத்து புண்ணியத்தை சேர்த்து கொள்ளுங்கள். நீங்களாவது கொடூரமான மனிதர்களிடம் இருந்து தப்பித்து விடலாம்.

வள்ளலார் , "காலம் உள்ள போதே பெற்று கொள்ளுங்கள்" என கூறுவதை ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள்.

பிராணிகள் பேசுகின்றன -II

உயிர்கள் மீது கருணை காட்டவேண்டும். அதுவே பக்திக்கு அடிப்படை.
கருணை இல்லாதவனுக்கு இறைவன் அருள் கிடைக்காது
.




சீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பது மல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும் அறிய வேண்டும். சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.

பிராணிகள் பேசுகின்றன - "பசுவாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

பசுவாகிய எங்கள் நிலை சொல்கின்றோம். :---

உங்கள் உடல் நலம் பெறவும் , வளமாக வாழவும், உங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் என்னுடைய பாலை என்னுடைய நலம் கூட கருதாமல் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன். நீங்களோ, உங்களுக்கு உதவாத பொருள்களாகிய தவிடு, வைக்கோல் , கழுநீர் , பிண்ணாக்கு முதலியவற்றை எங்களுக்கு உணவாக கொடுத்து அன்பு காட்டுவது போல் நடிகின்றீர்கள்.
எருதுக்கு வண்டியில் சுமக்க முடியாத அளவு பளுவை ஏற்றி இழுக்க செய்கிறீர்கள். அதனால் , இழுக்க முடியாத போது சாட்டையாலும் , தடியாலும் சிறிதும் இரக்கம் இல்லாமல் அடிகின்றீர்கள்.
இப்படி உழைத்து வயதான காலத்திலோ, உடல் நலம் குன்றி விட்டாலோ எங்களை கசாப்பு கடைகாரனுக்கு விலைக்கு விற்றுவிடுகின்றீர்கள். உங்கள் குடும்பங்களில் உள்ள வயதானவர்களை அப்படி விலைக்கு விற்று விடுவீர்களா?
உங்களுக்கு எங்கள் மீது இரக்கமோ, நன்றி உணர்வோ இருந்தால் இப்படி பட்ட செயல்களை செய்வீர்களா ?

Anbudan,
Karthikeyan.J