ஜீவகாருண்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜீவகாருண்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பசு வதைத் தடுப்புச் சட்டம் தேவையா தேவையற்றதா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்....

உயிர் வதை தடுப்போம்!
- என்.வி.சுப்பராமன்


பசு வதைத் தடுப்புச் சட்டம் தேவையா தேவையற்றதா? 'மிகவும் தேவை' என்பவர் ஒரு சாரார். 'தேவையற்றது' என்பவர் மற்றொரு சாரார். இதைப்பற்றிச் சிறிதும் சிந்தனை செய்யாதார் பிறிதொரு சாரார். மனிதாபிமான (உயிராபிமான) அடிப்படையில் தேவை. பொருளாதார அடிப்படையில் தேவை இல்லை. பசு மாத்திரம் என்ன புண்ணியம் செய்தது? மற்ற உயிர்கள் என்ன பாவம் செய்தன? உயிர்க்கொலை கூடாதென்றால் பசுவதைக்கு மாத்திரம் ஏன் தடை? மற்ற மிருகங்கள், பறவைகள் வதைக்கும் தடை வேண்டாமா? இத்தகு தடைகள் ஒரு பிரிவு மக்கள் நலத்திற்கு எதிரானது. எனவே சட்டம் கூடாது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தவறில்லை. இவ்வாறெல்லாம் வாதங்களும், விவாதங்களும் நடக்கின்ற இந்நாட்களில், வள்ளுவர் அறிவுறுத்திய கொல்லாமையும், புலால் உண்ணாமையும் அரசியலாக்கப் படுகிறதோ என்பது நல்லோர்களின் சந்தேகம்.


கற்கால மனிதனும், முற்கால மனிதனும், நாகரிகம் காணாத நாட்களில் கிடைத்ததை உண்டு காலம் கடத்தினான். இலையையும் காயையும், வேரையும், பழத்தையும், பறவையையும், மிருகத்தினையும் கொன்று, தின்று பசியாறினான். உடல் வளர்த்தான், உயிர் காத்தான். மனிதனைக் கொன்று உணவாகக் கொண்ட மனிதனையும் இந்த உலகம் கண்டிருக்கிறது. உலகின் ஏதோ ஒரு பகுதியில் இப்போதும் இப்பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன என எந்த உயிரினத்தையும் மனிதன் ஒதுக்கிவிடவில்லை. அவன் உணவிலிருந்து, உணவுப் பழக்கத்திலிருந்து மனிதனை மாத்திரம் ஏன் ஒதுக்கிவைத்தான்? யானையையும், சிங்கத்தையும், புலியையும், கரடியையும் ஏன் கொன்று சாப்பிடுவதில்லை? இவையெல்லாம் தன்னைவிட வலிமை வாய்ந்தவை என்பதும், இவற்றைக் கொல்லும் வலிமை நமக்கில்லை என்ற அச்சத்தின் விளைவுகளும்தானே? பாவம்! பசுவும், ஆடும், கோழியும், மீனும் தன்னைக் காத்துக் கொள்ளும் வலிமை இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டு மனிதனுக்கு உணவாகின்றன. "வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னிற் மெலியார்மேல் செல்லுமிடத்து" என்ற வள்ளுவன் வாக்கினை மனிதன் ஏன் மறந்தான்?


கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியவற்றில் நமது சான்றோர் சிந்தனை என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். அண்ணல் காந்தி அடிகள் "ப்ளீ பார் வெஜிடேரியனிசம்" என்ற ஒரு புத்தகத்தையே எழுதினார். புலால் மறுக்க வேண்டிய காரணங்களைத் தெள்ளத் தெளிவாக வழங்கினார். அதில் வள்ளுவருடைய அருள் உடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய கருத்துக்கள் இழையோடக் காணலாம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் நிறுவிய ஜீவகாருண்ய இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்கள், பிற உயிர்களைக் கொல்லாமையும், கொன்று கிடைத்த புலாலை மறுத்தலுமே அல்லவா? சமண மதத்தைச் சார்ந்த பெருமக்கள் இன்றும் கதிரவன் மறைவிற்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளாமைக்குக் காரணம், இரவில் சாப்பிடும் பொழுது தவறியும் பறக்கும் பூச்சிகள் உணவில் விழுந்து இறந்து விடக்கூடாது என்னும் அருள் தன்மை அல்லவா?



கொல்லாமைக்கும், புலால் மறுத்தலுக்கும் வித்தாக அமைந்தது அருளுடைமை எனும் நற்குணமே ஆகும். அதாவது ஜீவ காருண்யமே ஆகும். "நல்லாற்றானாடி அருள் வாழ்க, பல்லாற்றற்றேற்றினும் அஃதே துணை" என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது, எல்லா மார்க்கங்களும் ஜீவகாருண்யத்தைத்தான் போதிக்கின்றன. ஆகையால் நல்ல முறையில் ஆராய்ந்து கருணை வாழ்வைக் கடைப் பிடிக்க வேண்டும். பல மார்க்கங்களையும் ஆராய்ந்தால் அந்தக் கருணை வாழ்க்கைதான் துணையாகக் கூடியது என்று உரை வகுத்தார் நாமக்கல் கவிஞர்.

புலால் உண்பவர்கள் உடல் வலிமை உள்ளவர்கள். எனவே உடல் வலிமை பெற மாமிச உணவு இன்றியமையாதது என ஒரு சாரார் கருத்து. இதனை மருத்துவர்களும், அறிவியல் வல்லுனர்களும் ஏற்பதில்லை. வள்ளுவப் பெருந்தகை இதை அறிந்தே "உண்ணாமையுள்ள துயிர்நிலை ஊனுண்ண வண்ணாத்தல் செய்யாதளறு" என்றார். அதாவது, ஊனைத்தின்பது அருளுக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் பொருந்தாது. மனிதனுடைய உயிர் வாழ்க்கைக்கு அவசியமான எல்லாச் சத்துப் பொருட்களும் புலால் உண்ணாமலேயே கிடைக்கின்றன. பின் ஏன் ஊனுண்ண வேண்டும்? மேலும் உயிர் போன பிணத்தை உட்கொள்ள மனிதன் வாய் திறப்பதேன்?


ஓர் ஆடோ, கோழியோ கொல்லப்படும் பொழுது, அவை அனுபவிக்கும் இன்னல்கள் எத்தனை? பாவம், வாயற்ற பிராணிகள், இயலாமை காரணமாக, மனிதன் கொடுவாள் கொண்டு வெட்டும் பொழுது ஓலமிடும் சத்தம் அருள் உள்ளம் படைத்தோருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்துகிறது? மனிதனைப் போன்று அந்த உயிர்களுக்கும், வேதனை, வலி, மகிழ்ச்சி, பசி, தூக்கம், பயம் போன்ற எல்லா உணர்வுகளும் உண்டு. இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றுதானே? எனவே, அந்தப் பறவையையும், மிருகத்தையும் கொன்று தின்னும் உரிமையை மனிதனுக்கு யார் வழங்கியது? மனிதன் வலிமை படைத்தவன் என்ற ஒரே காரணத்தினால் அந்த உரிமை அவனாகவே அபகரித்துக் கொண்டதல்லவா? அதை எப்படி, யார் நியாயப்படுத்த முடியும்?

கோயில்களில், இடைச்செருகலாக, இறைவன் படைத்த ஆட்டையும், கோழியையும் அவனுக்கே பலியிடும் வழக்கம் ஏற்பட்டது ஒரு கொடுமை. அத்தீய வழக்கத்தை அருளுடைமை படைத்தவரெல்லாம் முயன்று, சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு முடிவிற்குக் கொண்டு வர வேண்டியது இன்றியமையாதது. அப்பணி இறைப் பணியாகும். கண்ணில் தெரியும் காட்சியிலெல்லாம் கடவுள் தெரிகின்றான். ஆட்டிலும், மாட்டிலும், காக்கையிலும், குருவியிலும் கடவுள் இருக்கின்றான். அவற்றைக் கொல்லுதல் அருளுடைமை ஆகாது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அனைவரும் பாடுபடுவோம்!





வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்:--------
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!.

இயேசு: 

கொலை செய்யாதிருப்பாயாக, 

அய்யா வைகுண்டர் அருளியது 
பசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே....
&
விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்....


நபிகள் நாயகம்  :
படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான் - நபிகள் நாயகம் (ஸல்) - நூல்: பைஹகி
 

வள்ளலார் புரிந்த அற்புதங்கள்!


கனவில் சென்று கட்டளையிட்ட பெருமான்!

ஒரு சமயம் தருமச்சாலையில், மறுநாள் அன்னதானத் துக்குத் தேவையான அரிசி இல்லை என்ற நிலை.



செய்தியைப் பணியாளர்கள், வள்ளலாரிடம் தயக்கத்துடன் கூறினர்.

வள்ளலார் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார்.

தியானம் முடிந்தபின், ரிசி யும் மற்றவையும் நாளைக்கு வரும் என்று கூறினார்.


. மறுநாள் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும்போதே திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில்

அரிசியும் பிற உணவுப் பொருட்களும் தருமச்சாலைக்கு வந்து சேர்ந்தன.

அவற்றைக் கொண்டு வந்தவர் வள்ளலாரிடம் அன்பு பூண்ட அன்பர் ஒருவர்.

முதல் நாளிரவு கனவில், வள்ளலார் வந்து அரிசியையும் மற்றவற்றையும் கொண்டு வந்து தருமாறு கூறியதாகவும்,

அதை உத்தரவாக எண்ணி உடனே வண்டி கட்டிக்கொண்டு கிளம்பி வந்ததாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.


ஆதலால் பசி பிணி நீக்க அனைவரும் முயற்சி செய்யுங்கள்..


"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது?

"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள் என்னென்ன?" என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்திருக்கிறார். பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:

பசி என்ற ஒன்று இருப்பதேன்?

பசியில்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாதபோது, ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். அப்படி உதவவில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.

மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உதவிக் கருவிதான் பசி! பசி என்பது என்ன?

பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு.

பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று.

பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி.

பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்!

பசி நோய் என்பது மிகவும் பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.

பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள்.

இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பிள்ளைகள், பெற்றவர்களை விற்பார்கள்.

இதன் விளைவாக, வயதானவர்கள் பரதேசங்களில், பரவீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.

வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.

முனிவர்களையும் யோகிகளையும் சித்தர்களையும்கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.

எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள்கூடப் பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து கலங்கு வார்கள்.

பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?

அறிவு மயங்கும்.

கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும்.

சித்தம் கலங்கும்.


நம்பிக்கை குலையும்.

கண் பஞ்சடைந்து குழிந்துபோகும்.

காதில் இரைச்சல் ஏற்படும்.

நாக்கு உலர்ந்துபோகும்.

கை, கால் சோர்ந்து துவளும்.

வார்த்தை குழறும்.

வயிறு திகுதிகுவென எரியும்.

தாபமும் கோபமும் பெருகும்.

உயிர் விலகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.

நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்றுதிரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.

பசி அகன்றால் அடையும் ஆனந்தங்கள்!

உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும்.

தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.

உள்ளம் குளிரும்.

சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.

கடவுள் நம்பிக்கை துளிர்க்கும்.

தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட்கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?

இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?

இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

ஜீவகாருண்யம் கடைப்பிடிப்பதால் வரும் நன்மை!

சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும் இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது சத்தியம்.

பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தனக்கு அற்ப ஆயுள் என்றுஜோதிடம் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல போகங்கள் அனைத்தும் கிட்டும்.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.

கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.

அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது.

வயல்களில் முயற்சி இன்றியே விளைச்சல் பெருகும்.

வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.

பிராணிகள் பேசுகின்றன - "மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள்


"மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள் .
கடல் பெரிய அளவாக உள்ளதால் பெரும் பாலும் நாங்கள் வாழும் இடமே அது தான். உலகில் மக்களால் வெளியிடும் அசுத்தங்கள் எல்லாம் கலக்கும் இடமே கடல்தான்.
ஆகவே , எங்கள் உடல் தோற்றமே கழிவு பொருள்கள் தான் . எங்கள் உணவே நோயாளிகள் கழிந்த மலமும் , பல வித விஷ பூச்சிகளும் தான் . சிலர் உடல் முழுவதும் குளத்தில் குளிக்க வருவார்கள் . அவர்களின், உடல்களில் உள்ள பக்குகளை அப்படியே பிடுங்கி தின்போம். இது எங்களுக்கு மிக பெரிய விருந்து . இப்படி நீரில் உள்ள அழுக்குகளை நாங்கள் உண்டு , உங்கள் குடிநீரை சுத்த படுத்துகிறோம் .அதனால் , நீங்கள் நோய் இல்லாமல் வாழ வழி செய்கிறோம். நீங்களோ துண்டீளும் , வளையும் போட்டு எங்களை கூட்டம் , கூட்டமாக பிடித்து உன்கிண்றீர்கள் .
பலவகை அழுக்குகளினால் எங்கள் உடல் உருவாவதால் , எங்களை சாப்பிடும் உங்களுக்கு சரும நோய், காலரா , வயிற்று போக்கு , சில தொத்து நோய்கள் வருகின்றன . ஆகையால் நாங்கள் கூறியதை சிந்தித்து இனி மேலாவது மீன்களாகிய எங்களை கொன்று தின்பதை நிறுத்தி முயற்சி செய்யுங்கள் , ஆறறிவு படைத்த மனித ஜீவர்களே !

Anbudan,
Karthikeyan.J

அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு:

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு:
  1. உலகில் உள்ள அனைத்து வஸ்துக்களும் "அ" என்ற அட்சரத்தை கொண்டு தான் தொடங்குகின்றன.அந்த "அ" என்ற அட்சரத்தை கொண்டு தொடங்கும் ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
  2. உயிர் எழுத்துக்கள் "அனைத்தும்" நிரம்பிய ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்". அனைத்து மந்திரங்களும் இந்த உயிர் எழுத்தை கொண்டு இயக்கியும், இயங்கியும் கொண்டு இருக்கின்றன.
  3. இது எப்படி :
    தமிழில் உயிர் எழுத்து : ,ஆ, , ,, , , , , , ,ஒள
    ஆனால் மூலம்:, இ ,உ, எ, ஒ
    இந்த ஐந்து எழுத்துக்களை தழுவி மற்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன.
    இந்த ஐந்து எழுத்தக்களும் நிரம்பிய ஒரே மந்திரம்
    "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
  4. அருட்பெருஞ்சோதி:
    =
    ரு = ர் +
    ட் = ட் +
    பெ = ப் +
    ட் = ட் +
    ஜோ = ஜ் +
    தி = த் +
    அனைத்து உயிர் எழுத்து (, இ ,உ, எ, ஒ)
  5. அருட்பெருஜோதி மகா மந்திரத்தை எப்படி ஓத வேண்டும் ?
    வள்ளலார் கூறுகிறார் :
    "ஊன் படிக்கும் .உளம் படிக்கும்.
    உயிர் படிக்கும். உயிர்க்கு உயிர் தான் படிக்கும் "
    நாம் "மகாமந்திரத்தை" :
    ஊன் ஓத வேண்டும் . (இந்திரிய ஒழுக்கம்)
    உளம் ஓத வேண்டும் . (கரண ஒழுக்கம் )
    உயிர் ஓத வேண்டும். ( ஜீவ ஒழுக்கம் )
    உயிர்க்கு உயிர் தான் ஓத வேண்டும். (ஆன்ம ஒழுக்கம் )
  6. ஏன் இந்த மந்திரத்திற்கு "மகா மந்திரம்" என்று பெயர் ?
    ஏனெனில் , இந்த "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்" -திற்குள் னைத்து மந்திரங்களும் அடங்கி உள்ளன.
,
Vallalar Groups

பிராணிகள் பேசுகின்றன - "ஆடு" ஆகிய எங்கள் அவல நிலையை பாருங்கள்


உங்கள் இல்லங்களில் எங்களை வளர்ப்பது கசாப்பு கடைகாரனுக்கு விற்று பொருள் சம்பாதிக்கவே வளர்கின்றீர்கள். பொருள் பேராசையால் , வள்ளலார் கூறும் "உண்மை அன்பு" இல்லாமல், நெஞ்சில் வஞ்சம் வைத்து பரிவு காட்டுவது போல் டிகின்றீர்கள்.
"வஞ்ச மனத்தில் வசியாத பாதம்" என வடலூர் இராமலிங்க சுவாமிகள் தனது பாடலில் கூறி உள்ளதை , இங்கு சிந்த்தனை செய்யுங்கள்.
எங்களுக்கு நீங்கள் போதுமான உணவு கொடுக்காததால், நாங்கள் வீடு, வீடாக சென்று அங்குள்ள கொடிகளை உண்டு உடல் வளர்க்க போகும் போது அங்குள்ளவர்கள் தடியாலும் கற்களாலும் அடிக்கும் அடிகளை தாங்கி கொள்கிறோம்? ஏன்? எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டி வாழ நினைகின்றோம். இப்படி எல்லாம் பாடு பட்டு உடம்பை வளர்த்தால் நீங்கள் இறைச்சி கடைகாரனுக்கு விற்று பொருள் ஈட்டுகின்றீர்கள். இந்த பணத்தினால் உங்களுக்கும் , உங்கள் குடும்பங்களுக்கும் மற்றும் உங்களை சார்ந்தவர்களுக்கும் ீமை பயக்குமே தவிர நன்மை ஏற்படாது.

ஐந்தறிவு உடைய நாங்கள் , சைவ உணவு சாப்பிட்டே உடம்பை வளர்த்து "சாத்வீக" தன்மையுடன் வாழ்கின்றோம். ஆறறிவு படைத்த நீங்கள், ஏன் "எங்களை கொன்று தின்று கடவுளின் இயற்கை விளக்கத்தை நீங்களே மறைத்து கொள்கின்றீர்கள்?" மனித தேகம் பெற்றவர்களால் தான் கடவுளின் "இயற்கை விளக்கத்தை" பெற முடியும்.வடலூர் இராமலிங்க சுவாமிகள் , பிற உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு "கடவுளின் இயற்கை விளக்கம்" அகத்திலும் , புறத்திலும் வெளிப்படவே மாட்டது என்று கூறுகிறார்கள்.
"தீவினையின்றி ஈட்டல் பொருள் " என்றனர் சான்றோர். இதனை எல்லாம் சிந்தனை செய்வீர்களாக ...


Anbudan,
Karthikeyan.J

பிராணிகள் ஆகிய எங்களின் ஒட்டு மொத்த முறையீடு - "இரக்கம் காட்டுங்கள்"


வாயிலாத ஜீவர்களாகிய நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.
நாங்களும் உங்களை போன்ற "ஆன்மாக்கள்" தான். ஆனால் , எங்கள் வினைக்கு ஏற்ப நாயாகவும் , ஆடாகவும் , பன்றியாகவும் , கோழியாகவும் , பூனையாகவும் , நண்டாகவும்,மீனாகவும் , வாத்தாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் முற்-பிறவியில் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்காததால் , துஷ்ட்ட மிருகங்களாக பிறந்து உள்ளோம்.

நீங்களும் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வில்லை என்றால் , எங்களை போன்ற தேகங்களை எடுக்க நேரிடும். இதனை , வடலூர் இராமலிங்க சுவாமிகள் தெளிவாக தாம் இயற்றிய "ஜீவகருன்ய ஒழுக்கத்தில்" எச்சரிக்கை கொடுத்துள்ளார் .

இந்த மனித தேகத்தை வைத்து புண்ணியத்தை சேர்த்து கொள்ளுங்கள். நீங்களாவது கொடூரமான மனிதர்களிடம் இருந்து தப்பித்து விடலாம்.

வள்ளலார் , "காலம் உள்ள போதே பெற்று கொள்ளுங்கள்" என கூறுவதை ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள்.

பிராணிகள் பேசுகின்றன -II

உயிர்கள் மீது கருணை காட்டவேண்டும். அதுவே பக்திக்கு அடிப்படை.
கருணை இல்லாதவனுக்கு இறைவன் அருள் கிடைக்காது
.




சீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பது மல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும் அறிய வேண்டும். சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.

பிராணிகள் பேசுகின்றன - கேளுங்கள்

நற்குணம் கொண்ட நல்லோர்களே ! தாய் மார்களே ! சகோதர்களே ! .. உங்கள் பாதங்களை தொட்டு கோடிமுறை கும்பிடுகின்றோம். நாங்கள் முறைஇடுவதை சற்று செவிமடுத்து , கேட்டு சிறிதாவது சிந்த்திப்பீர்களாக...,

இரக்கம் கொண்ட இதயம் உடையவர்களே ! இந்த உலகில் வாழ பிறந்த உங்களுக்கு மனம் மகிழ பண்டிகைகள் வருகின்றன . அந்த நாட்களில் நீங்கள் குடும்பத்துடனும் , குழந்தைகளோடும் கூடி மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பி , உங்கள் உணவுக்காக எங்களை கொன்று, எங்கள் உடலை சிதைத்து அதை புசித்து மகிழ்கின்றீர்கள்.

அந்த சமயங்களில் , எங்கள் குழந்தைகள் ஆதரவு இல்லாத அநாதை பிள்ளைகளாகி விடுகின்றனர்.நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல,நாங்களும் எங்கள் குழந்தைகளுடன்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா? உங்களுடைய அற்ப சந்தோசத்திற்காக அப்பாவியாகிய நாங்கள் தான் பலியாக வேண்டுமா ? இதை தயவு செய்து சிந்திக்க வேண்டும் . இனி வருகின்ற பண்டிகை நாட்களிலும் , மற்ற காலங்களிலும் எங்களை கொள்ளும் எண்ணத்தை விட்டு விட வேண்டும்.
எங்கள் குழந்தைகளுடன் நாங்களும் இருக்க எங்களை வாழ வைக்க தயவு செய்யுங்கள் . எங்களுடைய அவல நிலையை சொல்கிறோம். சற்று கேட்டு சிந்தியுங்கள் ...

========================================="உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் " - வள்ளலார்

"உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " - வள்ளலார் (அகவல்)

"எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்" - வள்ளலார் (தனித் திருஅலங்கல்)
==========================================

அனுப்பியவர்,
Karthikeyan

என்னை சிந்திக்க வைத்த வள்ளலார் பாடல் ...

வாடியபயிரைக் கண்டபோதெல்லாம்


வாடினேன் பசியினால் இளைத்தே


வீடூதோ றிரந்தும் பசியறா தயர்ந்த


வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்


நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்


நேர் உறக் கண்டுளந் துடித்தேன்


ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்


சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்


சிலருக்கு தூங்குவதில் சுகம். உணவை ருசித்து உண்டு மகிழ்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் சிலர் பொழுதை விளையாடிக் கழிக்கிறார்கள். நாடகம், கூத்து இவற்றில் இன்பம் காண்பவர்களும் உண்டு. ஆனால், என்றும் அழியாத இன்பம் ஆண்டவனே என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள். அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும். எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தால் அதற்கு பசிக்கிறது என்பதை தாய் அறியமாட்டாள். அதனால் உங்கள் எண்ணங்களை இறைவனிடம் சொல்லுங்கள். அவன் பரிசீலனை செய்து விரைவில் பலன் கொடுப்பான்.
புலால் உண்பவன் வயிற்றில் இறந்து போன உயிர்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன. அசைவ உணவு உண்பவன் வாழ்வில் ஆன்மிக வளர்ச்சி துளியளவும் ஏற்படாது. பசியுடன் இருக்கும் ஜீவனுக்கு ஆன்மிகம் புரியாது. அந்த மனிதனுக்கு உணவு அளித்து பசித்தீயை போக்குங்கள். அந்த ஜீவகாருண்ய உணர்வே மிக உயர்வானது.
தன்னுயிர் போல மன்னுயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வுயிர்களுக்கு துன்பம் இழைக்காதீர்கள். பிறருக்கு உண்டாகும் ஆபத்துக்களை அகற்றி, அச்சம் போக்க வேண்டியது அருள்வாழ்வின் அடிப்படை..

படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்


கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.

எத்தனை படிகள் இருந்தாலென்ன?

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்



இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. கருத்துக்கு எட்டுவான். உங்கள் கைக்கு எட்டுவதில்லை. வாய்க்கு எட்டுவான். அவனை அன்போடு பற்றுங்கள். விலகமாட்டான். எங்கே அன்பிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் ஆண்டவனை வணங்கிப் பெறும் புண்ணிய பலன்களை எல்லாம் ஒரே நாளில் பெற முடியும். எப்படி என்றால் பசியால் வாடும் அன்பர் முகம் மலர உணவினைத் தருமம் செய்யுங்கள். நிச்சயம் புண்ணியம் கிடைக்கும். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளும் கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தை உண்டு களிக்கலாம். மனதில் இறைவனை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். கதிரவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளாய் இரவும்பகலும் கழிகிறது. காலத்தை விரயம் செய்யாமல் நிலையான தருமங்களைச் செய்யுங்கள்.மறப்பது மனிதர் இயல்பு. பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம். உடலை உயிர் மறக்கலாம். உயிரை உடல் மறக்கலாம். நெஞ்சம் தான் கற்ற கல்வியை மறக்கலாம். ஆனால், தவத்தில் சிறந்தவர்களின் மனத்தில் உறையும் இறைவனை மறக்கக் கூடாது.

வாழ்க்கை ஒரு மாயப்பேழை

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்




* உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

* அடுத்தவர் அணியும் ஆடை அணிகலன்களையும், அவர்தம் நடையின் பாங்கையும் நான் கருத்தூன்றிப் பார்ப்பதில்லை. எனக்குக் கைநீட்டி நடக்கவே மனம் கூசுகிறது. அதில் கர்வம் இருப்பதாய் படவும் கைகளைக் கட்டிக்கொண்டுதான் நடக்கிறேன். உயர்ந்த ஆசனத்தில் உட்காரப் பிடிக்காது. நான் கால்மேல் கால் போட்டு அமரவும் கூசுவேன். சயனிப்பதற்கு சவுகரியமான படுக்கையைத் தேடமாட்டேன். வாய்விட்டுப் பாடமாட்டேன். நீட்டி முழக்கிப் பேசிட அஞ்சுவேன்.



* எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.



* நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.



* ஏழு திரைகளுக்கு அப்பால் இருக்கிறது பேருண்மை. அவன் அத்தனை திரைகளையும் அகற்றி எனக்கு மெய்ப்பொருள் வெளிப்படச் செய்தான். நம்மில் ஒரு மாயை பேழையைத் தந்தான். அரிய பொருள் ஒன்று அதிலிருப்பதாகச் சொன்னான். திறந்து பாரென ஒரு திறவுகோலையும் கொடுத்தான். வாழ்க்கை முழுவதும் அதைத் திறந்து பார்க்கிற முயற்சியில் நான் இருக்கிறேன்.



* பொய்யை மெய்யாக்கி போற்றத் தெரிந்தவர்கள் வணங்கி நிற்பது ஒரு தெய்வமே அல்ல, வழியாய்க் கொண்டதும் ஒரு வழி அல்ல.

சாப்பிட மட்டும் தான் விருப்பமா?

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்





* தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் என்று உணர்தல் வேண்டும். இல்லாவிட்டால் சமரசம், சன்மார்க்கம், எல்லா உயிர்களும் ஒன்று என்று பேசும் உரையாடல் யாவும் வெறும் பேச்சாக அன்றி, ஒரு செல்லாக் காசுக்கும் உதவாது.

* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிவது கூடாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொருவரும் உவந்து முன்வர வேண்டும்.

* சோறு சாப்பிடுவதிலே மட்டும் மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப்போகும். ஆற்றிலே கரைத்த புளிபோல அது பயன் தராது.

ஒவ்வோர் உயிரும், தன் அறிவின் பயனாக அன்பைக் காட்டி, அந்த அன்பின் பயனாக அருளிரக்கம் கொண்டு, ஏனைய உயிர்களின் நன்மைக்காக உள்ளம் கசிந்து, உயிர்களின் துன்பத்தைக் கண்டபோது உள்ளம் குழையும் இயல்பே அருள் இயல்பு ஆகும்.

* வஞ்சகத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை ஒழித்து, அருள் நெறியில் ஒன்றாக இன்பமாக வாழ்வதை விரும்பி, உலகம் முழுவதும் ஒன்றாகிக் களிப்படைந்து வாழும் நிலை என்றுதான் வருமோ?

* நாள்தோறும் ஆண்டவனை வணங்கி வாழ்தல் வேண்டும். இல்லையேல், உலகத்தில், உயிர்களிடத்தில், அன்பும், அருளிரக்கமும் ஒரு சிறிதேனும் ஏற்படாது.

* அன்பையும், இரக்கத்தையும், அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம்வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்.

* ஆண்டவன் எல்லா உயிர்களையும் ஒரே நோக்கமாக சம பாவனையாகப் பார்க்கும் இயல்புடையவர். ஆதலால் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அருள்பெற வேண்டுமானால் அவர்களுக்குச் சமத்துவ சிந்தை பரந்த நோக்கம் இன்றியமையாதவை.

இடையூறின்றி எதையும் செய்யுங்கள்

அன்பு வெள்ளமாகும். அது ஒருநாள் நம்மை முற்றும் விழுங்கிக் கரை கடந்து போகும்.

மறப்பது மனிதரியல்பு, மறக்காதிருப்பது மகத்தான இயல்பு. இங்கே பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம், தாங்கி நிற்கும் உடலை உயிர் மறக்கலாம், தனது ஆதாரமான ஆவியை உடல் மறக்கலாம், நெஞ்சம் கற்றதை மறக்கலாம், ஆனால், தவத்தில் மிக்கார் மனத்தில் உறையும் தலைவனை நாம் மறக்கலாமா?

எல்லைகளைக் கட்டியாள எண்ணமில்லை. எதிலெதிலோ பற்று வைத்து மாளவும் விரும்பவில்லை. அந்த சொர்க்கமே கிடைப்பதாயினும் அதை தூக்கி எறிந்துவிட்டு என் மேலோனின் கருணை ஒன்றையே வேண்டி நிற்பேன்.

அருட் பெருஞ்ஜோதி என்பது அகத்தேயும், வெளியேயும் வெளிச்சத்தைத் தருகிறது.

நீங்கள் எதைச் செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக்கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும் நல்லதாய் இருக்க வேண்டும்.

நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியைத்தான் நாம் 'சண்முகம்' என்று அழைக்கிறோம்.

பானையில் சோறு வெந்துவிட்டதா என்று பார்க்க ஒவ்வொரு சோற்றையுமா பதம் பார்க்கிறார்கள். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு போதும் பதம் பார்க்க. அதுபோல எல்லாச் சமய மதத் தெய்வங்களையும் ஆய்வு செய்யாமல் நம் நாட்டிலே பெரும்பாலாகப் பரவியுள்ள சைவ, வைஷ்ணவ சமயத் தெய்வங்களை ஆய்வு செய்து உண்மையைப் புரியவைத்தால் அந்த ஆய்வு மற்ற சமய மதங்களுக்கும் பொருந்தும்.

கருணை நிறைந்தவராயிருங்கள்

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்



இங்கே இறைவன் ஒருவன்தான். இறவாமை கல்விக்குத்தான். மனிதன் இனங்கள் பல கண்டாலும் இறப்பில் எல்லோரும் ஒன்றே.

இவர்கள் நிறத்தில் வெளுத்திருந்தாலும் மனத்தே கருத்தவர்கள். வெளியே வெளிச்சம், உள்ளே இருட்டு. இத்தகு மனிதர்கள் வாழும் இந்த உலகத்தைத் திருத்தி இவர்களுக்கு மண்ணிலே விண்ணைக்காட்ட மகேசன் என்னைப் படைத்தான்.

தன்னை எத்தனை நிந்தித்துப் பேசியபோதும் இறைவன் இவர்களிடம் தயவாகவே உள்ளான். நான் சூது பேசவில்லை. இவர்களை எனது சுற்றத்தாராகவே எண்ணுகிறேன். இவர்கள் தங்கள் வெற்றான விவாதங்களை விட்டு அந்த மேம்பட்டவனின் அருளைப் போற்றுதல் வேண்டும். காலத்தை வீணில் கழித்திடல் ஆகாது.

தாழ்ந்த குலம், உயர்ந்த குலம் என்று தரம் பிரித்து பார்க்கின்றோம். நரை, மரணம், மூப்பு அறியாத நல்லுடம்பைப் பெற்றவரல்லவா நற்குலத்தவர் ஆவார்.

கருணை நிறைந்தவராயிருங்கள். அது உங்கள் உள்ளத்தில் ஊற்றாய் பொங்கட்டும்; உடம்பெங்கும் வழிந்தோடட்டும். அடுத்தவர் துன்பத்தைக் காணச் சகியாதவரே கருணைமிக்கவர். அடுத்தவர் படும் இன்னலைத் துடைத்தெறிவதே கருணை உள்ளம்.

நான் இறவாத உடம்பு கேட்டேன். இறைவன் எனக்கு உவப்புடன் அளித்தான்.

தன்னைப் போலவே பிறரையும் பாவிக்கின்ற மனம் இவர்களிடம் இல்லை. இவர்கள் சக மனிதர்களின் மனதைத் தின்கிறார்கள். சாத்விகமான விலங்குகளின் உடம்பைத் தின்கிறார்கள். இந்தப் புலால் நெறி கண்டல்லவோ என் உள்ளம் வெதும்புகிறது. இவர்களது கொலைவெறி கண்டல்லவோ நான் அஞ்சுகின்றேன்.

பயம் கூடவே கூடாது

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்


* சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.



* எந்த விதத்திலும் உணவில் புலால் சேர்க்கக்கூடாது. எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு உண்பது சிறப்பு. பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும் பயனுடையதாகும்.



* மாலை வேளையில் கொஞ்ச தூரம் வியர்க்கும்படியாக நடை பயில வேண்டும். இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது.



* கொலை, கோபம், சோம்பல், உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியவை. உற்சாகத்தை எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும்.



* உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே. தெய்வங்கள் பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும்.






கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.

தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்


ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.




மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.




நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

நிழல் உள்ளவர்களுடைய உருவம் மட்டுமே நிழற் படமாக பதியும்


Posted By,
விழித்திரு ஆறுமுக அரசு

வள்ளல் பெருமானாரை புகைப்படம் பிடிக்க அன்பர்கள் சிலர்
பெருமானிடம் சம்மதம் கேட்டார்கள்.
ஆனால் பெருமானார் புகைப்படம் எடுப்பது
இறைவனுக்கு சம்மதம் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.
இருப்பினும் சில அன்பர்கள் பெருமானுக்கு தெரியாமல் ?
புகைப்படம் எடுக்க புகைப்படக் காரரை கூப்பிட்டு வந்து
புகைப்படம் எடுத்தார்கள். ஒரு முறை இரு முறை அல்ல
எட்டு முறை எடுத்தார்கள்.
ஆனால் பெருமானின் உருவம் பதிவாக வில்லை.
ஏன் புகைப்படம் பதிவாகவில்லை என்றால்
புகைப்படத்திற்கு தமிழில் நிழற் படம் என்றொரு பெயர் உண்டு.
சுத்த தேகம் பெற்றவர்கள் மாயை மற்றும் சாயை அற்றவர்கள்.
அதாவது அசுத்த மாயை மற்றும் சுத்த மாயை நீங்கப் பெற்றவர்கள்
மேலும் அவர்களது நிழல் கீழே விழாது. (சாயை என்றால் நிழல் என்று பொருள்)
நிழல் கீழே விழாதவர்களின் உருவம் நிழற் படத்தில் பதிவாகாது.
ஏனென்றால் அது நிழற் படம்.
நிழல் உள்ளவர்களுடைய உருவம் மட்டுமே
நிழற் படமாக பதியும்.
நிழல் அற்றவர்களின் உருவம் தோற்ற உருவமாக மட்டுமே
இருக்கும் அந்த உருவத்தில் வாளை எடுத்து சுழற்றினால்
வாள் உடலின் உள்ளே சென்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல்
வெளியே வரும். மேலும் இயற்கை சீற்றங்கள் அவரை ஒன்றும் செய்யாது.
மேலும் அவர்களுக்கு கால பேதம் கிடையாது.
கால பேதம் என்பது மூன்று காலங்களான
நேற்று, இன்று நாளை.
நேற்று என்பது முடிந்த ஒன்றாக நமக்கு இருக்கும்.
ஆனால் சுத்த தேகம் பெற்றவர்களால்
முடிந்த காரியத்தை மாற்றி அமைக்க முடியும்.
இனி நடக்க போகின்ற காரியத்தை முன்பே முடித்திருக்க முடியும்
நடந்து கொண்டிருக்கிற காரியத்தை எப்படி வேண்டுமானாலும்
மாற்றி அமைக்க முடியும்.
எப்படி என்றால்
கால தத்துவம் என்பது பூமியில் வாழும் நமக்கு ஒரு மாதிரியாகவும்
மற்ற கிரகங்களில் வாழ்பவர்களுக்கு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளது.
காரணம் நமது பூமி சூரியனை சுற்றி வர 365 1/4 நாட்கள் ஆகிறது
அதுவே மற்ற கிரகங்கள் சூரியனை சுற்றி வர கால வேறுபாடு உள்ளது.
நாம் எல்லோரும் சூரிய குட்ம்பத்தில் வாழ்கிறோம்.
ஆனால் சுத்த, ஞான, பிரணவ தேகம் எடுத்தவர்
பிரபஞ்சங்களை தாண்டி அண்டங்களை தாண்டி போகக் கூடிய
நிலை பெற்ற காரணத்தால் அவர்களுக்கு கால பேதம் கிடையாது.