சன்மார்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சன்மார்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நெஞ்சம் நெகிழ வைத்த ஒரு நிகழ்வு

ஜெர்மனியிலே பணிபுரியும்
நம் தமிழ்த் தம்பதிகளுக்கு
நெடுநாளாய் குழந்தை இல்லை.
கடைசியிலே அந்தப் பெண்ணுக்கு ஒரு
குழந்தையைச் சுமக்கும் பாக்கியம் கிடைத்தது.

ஆனால் பாருங்கள்,
குழந்தைக்குத் துடிப்பே இல்லை !

பயந்து போய் டாக்டர்களிடம் காட்டியும்
அசையாமல் ஜடமாக்க் கிடந்தது குழந்தை !
நொந்து நூலாகி நொடிந்து போன வேளையில்தான்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
விடியற் காலை அந்த அம்மாவிற்கு
குழந்தை துடிப்பது போன்ற உணர்வு !
அப்போது வீட்டிலே
திருவாசகப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
சந்தேகப் பட்ட அந்த அம்மா திருவாசக இசையை நிறுத்தியதும்
குழந்தை துடிப்பது நின்றது.
பிளேயரை ஆன் செய்ததும் குழந்தை துடிக்க
அப் பெண் அடைந்த ஆனந்தம் ! அளவே இல்லை

அப்புறம் என்ன,

தினம் தினம் தேவார- திருவாசக இசை வெள்ளம்தான் வீடு முழுக்க . .!

குழந்தையை நல்ல படியாகப் பெற்ற அத் தம்பதிகள்
இதற்காகவே தமிழ் நாடு வந்து
திருவாசகத்திற்கு இசை அமைத்த
இசைஞானி இளையராசாவைச் சந்தித்து ஆசியும் பெற்றுத்
திரும்பினர் என்றால்
செய்தியா , சரித்திரம் அல்லவா இது ?



நாரத கானம் கேட்ட இராட்சசிக்குப் பிரகலாதன் பிறந்தான்.

நாக்கு முக்குக் கேட்டால் தேவதைக்குக் கூட இராட்சதன் பிறக்கலாம் !
வருங்காலம் உங்கள் கையில் . .!
இல்லை உங்கள் காதில் !


Source frm: SANMARGAM – An Art Of Immortality

இராமலிங்க அடிகளார் - வள்ளலார்


இராமலிங்க அடிகள் துறவியைப் போல வாழ்ந்தாலும், தன் மீது அன்பு கொண்ட அன்பர்களுக்காகவும், அடியார்களுக்காகவும் மிகவும் மனம் இரங்குவார். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கண்டு மனம் வருந்துவார்.


ஒரு முறை பெரும் பணக்காரரான அன்பர் ஒருவர் தனது இல்லத் திருமணத்திற்கு அடிகளாரை அழைத்திருந்தார். அன்பரின் மனம் கோணக் கூடாது என்பதற்காக வள்ளலாரும் திருமணத்திற்கு வர இசைந்தார்.

குறிப்பிட்ட நாளில் அந்த அன்பரின் இல்லம் நோக்கிச் சென்றார். ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி அவரது உள்ளத்தை தைத்தது. இல்ல வாயிலில் நின்று கொண்டிருந்த உறவினர்களில் சிலர், செல்வந்தர்களையும், ஆடம்பர உடையணிந்தவர்களையும் மட்டுமே உள்ளே அனுப்பினர். மற்றவர்களை அனுமதிக்காமல் இருந்தனர். எனவே மிகவும் எளிமையான தம்மையும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என நினைத்த வள்ளலார், எதிரே உள்ள வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து விட்டார். பின் கீழ்கண்டவாறு ஒரு குறிப்பையும் எழுதி, அதை அந்தச் செல்வந்தரிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு சிறுவனிடம் கூறி உள்ளே செல்லாமல் வெளியிலேயே இருந்து விட்டார்.

” சோடில்லை மேல் வெள்ளைச் சொக்காய் இல்லை

நல்ல சோமன் இல்லை

பாடில்லை; கையிற் பணமில்லை

தேகப் பருமன் இல்லை

வீடில்லை. யாதொரு வீறாப்பும் இல்லை.

விவாகமது நாடில்லை நீ

நெஞ்சமே! எந்த ஆற்றினில் நண்ணினையே!”

அடிகளாரின் இந்தப் பாடலைப் படித்தார் அந்தச் செல்வந்தர். உள்ளம் பதைத்தார். வெளியே ஓடோடிச் சென்று அடிகளாரின் கால்களில் வீழ்ந்தார். தம்மை மன்னிக்குமாறு வேண்டினார். அவரை உள்ளே அழைத்துச் சென்றதுடன், அன்று முதல் ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி அனைவருடனும் சமமாகப் பழகலானார்.

இவ்வாறு தனது நடத்தையின் மூலமும், சிறு பாடல்களின் மூலமும் எத்தனையோ அன்பர்களை நல்வழிப்படுத்தி இருக்கிறார் இராமலிங்க அடிகளார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்தேன்

என்கிறார் ஞான சத்குரு வள்ளலார். எல்லாவுயிரையும் தம் உயிராய் எண்ணி வாழ்ந்த மகான் திருவடி போற்றுவோம்.


தே. பாலமுருகன்
காஞ்சிபுரம்

எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

 வள்ளல்
பெருமானார்  இவ்வாறு பாடுகிறார்:

''காற்றாலே புவியாலே சுகனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன்
விரைந்தளித்தான் எனக்கே''- என்கிறார்


ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு
என் மார்க்கமும் ஒன்றாமே.                -திருவருட்பா

 புனித தீர்த்தத்தில் நீராடினாலும் துன்பங்கள் தீராது என்பதை
வலியுறுத்தவே வள்ளுவர் “ புறந்தூய்மை நீரால் அமையும், அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்” என்கிறார். எனவே மனிதன் தன்னுடைய எண்ணத்தை
மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். எண்ணம் தூய்மை அடைந்து பிற உயிர்களில்
மேல் அன்பு-கருணை- தயவு  ஏற்பட்டால் மனிதனிடம் உள்ள அனைத்து சக்கரங்களும்
தானே இயங்கும். ஸ்தூல தேகம் சுத்த தேகமாக மாறும்.

"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது?

"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள் என்னென்ன?" என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்திருக்கிறார். பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:

பசி என்ற ஒன்று இருப்பதேன்?

பசியில்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாதபோது, ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். அப்படி உதவவில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.

மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உதவிக் கருவிதான் பசி! பசி என்பது என்ன?

பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு.

பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று.

பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி.

பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்!

பசி நோய் என்பது மிகவும் பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.

பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள்.

இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பிள்ளைகள், பெற்றவர்களை விற்பார்கள்.

இதன் விளைவாக, வயதானவர்கள் பரதேசங்களில், பரவீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.

வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.

முனிவர்களையும் யோகிகளையும் சித்தர்களையும்கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.

எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள்கூடப் பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து கலங்கு வார்கள்.

பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?

அறிவு மயங்கும்.

கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும்.

சித்தம் கலங்கும்.


நம்பிக்கை குலையும்.

கண் பஞ்சடைந்து குழிந்துபோகும்.

காதில் இரைச்சல் ஏற்படும்.

நாக்கு உலர்ந்துபோகும்.

கை, கால் சோர்ந்து துவளும்.

வார்த்தை குழறும்.

வயிறு திகுதிகுவென எரியும்.

தாபமும் கோபமும் பெருகும்.

உயிர் விலகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.

நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்றுதிரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.

பசி அகன்றால் அடையும் ஆனந்தங்கள்!

உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும்.

தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.

உள்ளம் குளிரும்.

சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.

கடவுள் நம்பிக்கை துளிர்க்கும்.

தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட்கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?

இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?

இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

ஜீவகாருண்யம் கடைப்பிடிப்பதால் வரும் நன்மை!

சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும் இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது சத்தியம்.

பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தனக்கு அற்ப ஆயுள் என்றுஜோதிடம் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல போகங்கள் அனைத்தும் கிட்டும்.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.

கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.

அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது.

வயல்களில் முயற்சி இன்றியே விளைச்சல் பெருகும்.

வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.

பிராணிகள் பேசுகின்றன - "மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள்


"மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள் .
கடல் பெரிய அளவாக உள்ளதால் பெரும் பாலும் நாங்கள் வாழும் இடமே அது தான். உலகில் மக்களால் வெளியிடும் அசுத்தங்கள் எல்லாம் கலக்கும் இடமே கடல்தான்.
ஆகவே , எங்கள் உடல் தோற்றமே கழிவு பொருள்கள் தான் . எங்கள் உணவே நோயாளிகள் கழிந்த மலமும் , பல வித விஷ பூச்சிகளும் தான் . சிலர் உடல் முழுவதும் குளத்தில் குளிக்க வருவார்கள் . அவர்களின், உடல்களில் உள்ள பக்குகளை அப்படியே பிடுங்கி தின்போம். இது எங்களுக்கு மிக பெரிய விருந்து . இப்படி நீரில் உள்ள அழுக்குகளை நாங்கள் உண்டு , உங்கள் குடிநீரை சுத்த படுத்துகிறோம் .அதனால் , நீங்கள் நோய் இல்லாமல் வாழ வழி செய்கிறோம். நீங்களோ துண்டீளும் , வளையும் போட்டு எங்களை கூட்டம் , கூட்டமாக பிடித்து உன்கிண்றீர்கள் .
பலவகை அழுக்குகளினால் எங்கள் உடல் உருவாவதால் , எங்களை சாப்பிடும் உங்களுக்கு சரும நோய், காலரா , வயிற்று போக்கு , சில தொத்து நோய்கள் வருகின்றன . ஆகையால் நாங்கள் கூறியதை சிந்தித்து இனி மேலாவது மீன்களாகிய எங்களை கொன்று தின்பதை நிறுத்தி முயற்சி செய்யுங்கள் , ஆறறிவு படைத்த மனித ஜீவர்களே !

Anbudan,
Karthikeyan.J

அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு:

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு:
  1. உலகில் உள்ள அனைத்து வஸ்துக்களும் "அ" என்ற அட்சரத்தை கொண்டு தான் தொடங்குகின்றன.அந்த "அ" என்ற அட்சரத்தை கொண்டு தொடங்கும் ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
  2. உயிர் எழுத்துக்கள் "அனைத்தும்" நிரம்பிய ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்". அனைத்து மந்திரங்களும் இந்த உயிர் எழுத்தை கொண்டு இயக்கியும், இயங்கியும் கொண்டு இருக்கின்றன.
  3. இது எப்படி :
    தமிழில் உயிர் எழுத்து : ,ஆ, , ,, , , , , , ,ஒள
    ஆனால் மூலம்:, இ ,உ, எ, ஒ
    இந்த ஐந்து எழுத்துக்களை தழுவி மற்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன.
    இந்த ஐந்து எழுத்தக்களும் நிரம்பிய ஒரே மந்திரம்
    "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
  4. அருட்பெருஞ்சோதி:
    =
    ரு = ர் +
    ட் = ட் +
    பெ = ப் +
    ட் = ட் +
    ஜோ = ஜ் +
    தி = த் +
    அனைத்து உயிர் எழுத்து (, இ ,உ, எ, ஒ)
  5. அருட்பெருஜோதி மகா மந்திரத்தை எப்படி ஓத வேண்டும் ?
    வள்ளலார் கூறுகிறார் :
    "ஊன் படிக்கும் .உளம் படிக்கும்.
    உயிர் படிக்கும். உயிர்க்கு உயிர் தான் படிக்கும் "
    நாம் "மகாமந்திரத்தை" :
    ஊன் ஓத வேண்டும் . (இந்திரிய ஒழுக்கம்)
    உளம் ஓத வேண்டும் . (கரண ஒழுக்கம் )
    உயிர் ஓத வேண்டும். ( ஜீவ ஒழுக்கம் )
    உயிர்க்கு உயிர் தான் ஓத வேண்டும். (ஆன்ம ஒழுக்கம் )
  6. ஏன் இந்த மந்திரத்திற்கு "மகா மந்திரம்" என்று பெயர் ?
    ஏனெனில் , இந்த "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்" -திற்குள் னைத்து மந்திரங்களும் அடங்கி உள்ளன.
,
Vallalar Groups

பிராணிகள் ஆகிய எங்களின் ஒட்டு மொத்த முறையீடு - "இரக்கம் காட்டுங்கள்"


வாயிலாத ஜீவர்களாகிய நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.
நாங்களும் உங்களை போன்ற "ஆன்மாக்கள்" தான். ஆனால் , எங்கள் வினைக்கு ஏற்ப நாயாகவும் , ஆடாகவும் , பன்றியாகவும் , கோழியாகவும் , பூனையாகவும் , நண்டாகவும்,மீனாகவும் , வாத்தாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் முற்-பிறவியில் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்காததால் , துஷ்ட்ட மிருகங்களாக பிறந்து உள்ளோம்.

நீங்களும் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வில்லை என்றால் , எங்களை போன்ற தேகங்களை எடுக்க நேரிடும். இதனை , வடலூர் இராமலிங்க சுவாமிகள் தெளிவாக தாம் இயற்றிய "ஜீவகருன்ய ஒழுக்கத்தில்" எச்சரிக்கை கொடுத்துள்ளார் .

இந்த மனித தேகத்தை வைத்து புண்ணியத்தை சேர்த்து கொள்ளுங்கள். நீங்களாவது கொடூரமான மனிதர்களிடம் இருந்து தப்பித்து விடலாம்.

வள்ளலார் , "காலம் உள்ள போதே பெற்று கொள்ளுங்கள்" என கூறுவதை ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள்.

பிராணிகள் பேசுகின்றன III - "கோழியாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

உங்கள் வீடுகளில் எங்களை உணவுக்காகவே வளர்கின்றீர்கள். வளர்க்கும்போது, எங்களிடம் அன்பு காட்டுவது போல் வஞ்சகத்துடனே வளர்கின்றீர்கள். என்றாவது ஒரு நாள் எங்களை கொன்று விடுவீர்கள் என நாங்கள் நினைத்தது இல்லை . உங்கள் குழந்தைகளை காப்பது போல் எங்களை ஒரு நாளாவது பார்த்தது உண்டா ?எங்களுக்கு முறையான உணவு கிடைக்காதலால் புற்று நோய் , ஷய ரோகம் , பெரிய வியாதி உள்ளவர்கள் துப்பும் சளியை ஓடிபோய் சாப்பிடுகிறோம். அது போதமால் , பூரான் , செய்யான் , கரப்பான் பூச்சி , சிறு பாம்புகள் , பல்லி , சாக்கடையில் உள்ள புழுக்களையும் உண்கின்றோம். அதனால், எங்கள் உடல் உறுப்புகளும் , தசையும் அசுத்தத்தில் இருந்து உருவானது தானே ! எங்களை கொன்று சாப்பிடுவது உங்களுக்கு அருவருப்பாக இல்லையா? இதை எல்லாம் சகித்து கொண்டு எப்படி சாப்பிடுகின்றீர்கள்? சிறிது சிந்தித்து பாருங்கள்,

மேலும் , எங்களை கொன்று விற்பனை செய்பவர்கள் எங்களை கொண்டு போகும் போது,கீரையை கட்டுவது போல் கால்களை சேர்த்து மொத்தமாக கட்டி சைக்கிளில் தலைகீழாக தொங்க விட்டு கொண்டு போவதும், எங்கள் உயிரை போக்குவதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து, கொதிக்கும் அந்த நீரிலே அப்படியே சிறிதும் இரக்கமில்லாமல் தூக்கி போடுகிறீர்களே ! இது நியாயமா ?

உங்கள் உடலில் சிறிது வெந்நீர் பட்டு விட்டால் என்ன பாடு படுகின்றீர்கள்? உங்களுக்கு வலிப்பது போன்று தானே எங்களுக்கும் வலிக்கும். இது தான் "ஆறறிவு" படைத்த இரக்கம் உள்ள மனிதர்களாகிய நீங்கள் செய்யும் நற் செயலா ?
ஆறறிவு என்று சொல்லி கொண்டு "கொன்று தின்னும்" மனித தேகம் பெற்றவர்களே ! மனித தேகம் பெற்றவர்களால் தான் கடவுளின் "இயற்கை விளக்கத்தை" பெற முடியும்.எங்களை போன்ற "பிராணிகளை" கொன்று தின்று கடவுளின் இயற்கை விளக்கத்தை நீங்களே மறைத்து கொள்ளாதீர்கள். வடலூர் இராமலிங்க சுவாமிகள் , பிற உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு "கடவுளின் இயற்கை விளக்கம்" அகத்திலும், புறத்திலும் வெளிப்படவே மாட்டது என்று கூறுகிறார்கள்.

எங்களை கொன்று தின்பவர்களை , இறைவனிடம் முறை இடுவோம். எங்கள் சாபம் சுனாமியாகவும், பூகம்பம் ஆகவும்,சாலை விபத்தாகவும்,
இயற்கை சீற்றங்கலாகவும் கண்டிப்பாக வருவோம். கொன்று தின்பவர்களை விடமாட்டோம்.

எதற்காக மனித தேகம் எடுத்தீர்கள் என சிந்தித்து பாருங்கள்?
Anbudan,
Vallalar Karthikeyan

பிராணிகள் பேசுகின்றன - "பசுவாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

பசுவாகிய எங்கள் நிலை சொல்கின்றோம். :---

உங்கள் உடல் நலம் பெறவும் , வளமாக வாழவும், உங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் என்னுடைய பாலை என்னுடைய நலம் கூட கருதாமல் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன். நீங்களோ, உங்களுக்கு உதவாத பொருள்களாகிய தவிடு, வைக்கோல் , கழுநீர் , பிண்ணாக்கு முதலியவற்றை எங்களுக்கு உணவாக கொடுத்து அன்பு காட்டுவது போல் நடிகின்றீர்கள்.
எருதுக்கு வண்டியில் சுமக்க முடியாத அளவு பளுவை ஏற்றி இழுக்க செய்கிறீர்கள். அதனால் , இழுக்க முடியாத போது சாட்டையாலும் , தடியாலும் சிறிதும் இரக்கம் இல்லாமல் அடிகின்றீர்கள்.
இப்படி உழைத்து வயதான காலத்திலோ, உடல் நலம் குன்றி விட்டாலோ எங்களை கசாப்பு கடைகாரனுக்கு விலைக்கு விற்றுவிடுகின்றீர்கள். உங்கள் குடும்பங்களில் உள்ள வயதானவர்களை அப்படி விலைக்கு விற்று விடுவீர்களா?
உங்களுக்கு எங்கள் மீது இரக்கமோ, நன்றி உணர்வோ இருந்தால் இப்படி பட்ட செயல்களை செய்வீர்களா ?

Anbudan,
Karthikeyan.J

தை பூசம் விளக்கம்

வள்ளல் பெருமான் தை பூச நாளை
ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..
காரணம்
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்
ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.
அகரம் + உகரம் + மகரம் = ஓம்
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள்
சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில்
இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து
அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.
அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி
சந்திரன் என்பது மன அறிவு,
சூரியன் என்பது ஜீவ அறிவு
அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி
சூரியன் அக்னியில் அடங்கி
அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே
தை பூசம்.
மனம் ஜீவனில் அடங்கி
ஜீவன் ஆன்மாவில் அடங்கி
ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்
என்பதை காட்டவே தை பூசம்
நமது வள்ளல் பெருமானால்
அளிக்கப்பட்டது.
மேலும்
தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம்
மட்டுமே உண்மை தத்துவமாக
வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது.
மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில்
ஏற்படுத்தப் பட்டன.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

பிராணிகள் பேசுகின்றன - கேளுங்கள்

நற்குணம் கொண்ட நல்லோர்களே ! தாய் மார்களே ! சகோதர்களே ! .. உங்கள் பாதங்களை தொட்டு கோடிமுறை கும்பிடுகின்றோம். நாங்கள் முறைஇடுவதை சற்று செவிமடுத்து , கேட்டு சிறிதாவது சிந்த்திப்பீர்களாக...,

இரக்கம் கொண்ட இதயம் உடையவர்களே ! இந்த உலகில் வாழ பிறந்த உங்களுக்கு மனம் மகிழ பண்டிகைகள் வருகின்றன . அந்த நாட்களில் நீங்கள் குடும்பத்துடனும் , குழந்தைகளோடும் கூடி மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பி , உங்கள் உணவுக்காக எங்களை கொன்று, எங்கள் உடலை சிதைத்து அதை புசித்து மகிழ்கின்றீர்கள்.

அந்த சமயங்களில் , எங்கள் குழந்தைகள் ஆதரவு இல்லாத அநாதை பிள்ளைகளாகி விடுகின்றனர்.நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல,நாங்களும் எங்கள் குழந்தைகளுடன்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா? உங்களுடைய அற்ப சந்தோசத்திற்காக அப்பாவியாகிய நாங்கள் தான் பலியாக வேண்டுமா ? இதை தயவு செய்து சிந்திக்க வேண்டும் . இனி வருகின்ற பண்டிகை நாட்களிலும் , மற்ற காலங்களிலும் எங்களை கொள்ளும் எண்ணத்தை விட்டு விட வேண்டும்.
எங்கள் குழந்தைகளுடன் நாங்களும் இருக்க எங்களை வாழ வைக்க தயவு செய்யுங்கள் . எங்களுடைய அவல நிலையை சொல்கிறோம். சற்று கேட்டு சிந்தியுங்கள் ...

========================================="உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் " - வள்ளலார்

"உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " - வள்ளலார் (அகவல்)

"எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்" - வள்ளலார் (தனித் திருஅலங்கல்)
==========================================

அனுப்பியவர்,
Karthikeyan

நமது தமிழ் மொழி மட்டுமே ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி.

.
உலகின் முதல் மொழியாம் தமிழுக்கு பல சிறப்புகள் உள்ளன.
அதில் முக்கியமானது சாகா கல்வியை தெரிவிக்கும்
உலகின் ஒரே மொழி தமிழ் மட்டுமே.
மேலும் தமிழில் மட்டுமே சாகா கல்வியை பற்றிய
எழுத்து வடிவுடன் கூடிய பொருள் தரும் வார்த்தைகள் உள்ளன.
அதற்க்கு இணையான வார்த்தைகள் ஓரளவு சமஸ்கிருதத்தில் உள்ளன.
ஆனால் அனைத்தும் மறைபொருளாக அனைவரும்
புரிந்து கொள்ளும் விதத்தில் அமையாமல் ஒரு சிலருக்கு மட்டுமே
புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.


அதே போல் ஞான ஆராய்ச்சியில் தமிழ் மொழியை போல்
ஞானிகளால் ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகங்கள்
பாடல்கள் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதை
உறுதியாக கூறலாம்.


ஆகவேதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
கயிலையிலிருந்து வந்த அகத்தியர் சுப்ரமணிய சித்தரிடம்
தமிழ் கற்று சித்தர் நிலையினை அடைந்தார்.
மேலும் போகர் சீன தேசத்தவர் என்றும்
கோரக்கர் வட நாட்டை சேர்ந்தவர் என்றும்
வரலாறுகள் தெரிவிக்கின்றன.
மேலும் நிறைய சித்தர்கள் வெளி நாடுகளில் இருந்து
தமிழகம் வந்து தமிழ் கற்று தமிழில் மட்டுமே உள்ள
சாகா கல்வியை கற்று சித்தர் நிலை அடைந்தார்கள்.


இன்றைக்கு நம்மில் பலர் எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது
என்று தம்மை பற்றி பெருமை பட்டு கொள்கின்றார்கள்.
இது உண்மையில் மிகவும் கேவலமான நிலை ஆகும்.
தமிழில் உள்ள ஞான கருத்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற நினைப்பு வந்த உடன் அதன் உண்மை பொருளை
தமிழ் மொழியிலேயே படித்தால்தான் உண்மை விளங்கும்.
அதை விடுத்து மொழி மாற்றம் செய்து படித்தால்
அதில் நிறைய பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முதலில் மொழி மாற்றம் செய்பவர் அதனுடைய
உண்மை பொருளை புரிந்தவராக இருக்க வேண்டும்.
ஞான கருத்துக்களை எழுதியவரின் ஞான நிலையினை
உணர்ந்தவர் மட்டுமே அதை சிறப்பாக மொழி மாற்றம்
செய்ய இயலும். ஏதோ எனக்கு தெரிந்த வரையில்
மொழி மாற்றம் செய்கிறேன் என்று மொழி மாற்றம் செய்பவர்களால்
அவர் என்ன புரிந்து கொண்டாரோ அதைதான் கருத்தாக எழுதுவார்.
அடுத்து மொழி மாற்றம் செய்யப்படும் மொழியில் அதற்கு இணையான
சொற்கள் இருந்தால் மட்டுமே உண்மையான பொருள் உள்ள
மொழி மாற்றமாக அமையும்.


இன்றைக்கு ஆங்கிலம் உலக மொழியாக ஆக்கப் பட்டு விட்டது.
அது உலகின் துரதிர்ஷ்டமே. ஆங்கிலம் என்பது
பிச்சைகாரரின் பாத்திரத்தில் உள்ள உணவு போன்றது.
காரணம் அந்த மொழியில் உள்ள வார்த்தைகளில்
பெரும்பாலானவை வேறு மொழிகளில் இருந்து இரவல் பெறப்பட்டதுதான்.
அந்த மொழிக்கென்று எந்த சிறப்பும் கிடையாது.
அந்த மொழியின் எழுது உச்சரிப்புக்கும் அதன் வார்த்தைகளின் உச்சரிப்புக்கும்
சம்பந்தமே இருக்காது. உச்சரிப்பை அவர்கள் இஷ்டத்திற்கு அமைத்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு
நமது தமிழில் அன்பு என்பதை அ + ன் + பு (ப்+ உ) என்று எழுதுகிறோம்.
இதை நாமே நினைத்தாலும் வேறு உச்சரிப்புடன் படிக்க முடியாது.
ஆனால் ஆங்கிலத்தில் அதே அன்பு என்ற வார்த்தையை
LOVE என்று அழைக்கிறார்கள்
இதை எழுதும் போது
L+O+V+E என்று எழுதுகிறார்கள்.
இதை உச்சரிக்கும்போது எல்ஒவிஇ என்று தான் உச்சரிக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் இதை லவ் என்று உச்சரிக்கிறார்கள்.
இதுபோல் அவர்கள் மொழியில் உள்ள வார்த்தைகள் எல்லாமே
வார்த்தை உச்சரிப்பிற்கும் எழுத்து உச்சரிப்பிற்கும் சம்பந்தமே இருக்காது.
மேலும் தமிழில் உள்ள அ என்ற எழுத்துக்கு இணையாக A என்ற
எழுத்து பயன் படுத்தப்படுகிறது. ஆனால் அதை எ என்று உச்சரிக்கிறார்கள்.
இப்படி எழுது உச்சரிப்பிற்கும் வார்த்தை உச்சரிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள்
உள்ள மொழி உலக மொழியாக மாறியதுடன்
நம்மில் சிலர் நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவன்
ஆதலால் நான் மிகுந்த அறிவாளி என்று நினைத்து கொள்கின்றார்கள்.


உண்மையில் ஆங்கில மொழி அறிவு என்பது
ஒரு மொழியில் பெற்ற மொழி அறிவு மட்டுமே.
அது ஒருவரின் அறிவை வெளிப்படுத்துவதாக கொள்ள முடியாது.


ஆகவே ஒரு மொழியின் ஞானத்தை கற்க வேண்டும் என்றால்
அந்த மொழியை முதலில் கற்றால் மட்டுமே
அந்த மொழியில் கூறப் பட்டுள்ள ஞானத்தை முழுமையாக
உணரவும் ஞானத்தை அடையவும் முடியும்.


நமது தமிழ் மொழி மட்டுமே ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி.


ஆகவே ஞானம் பெற நாம் அனைவரும் தமிழில் உணர்ந்து ஞானம் பெறுவோம்.


அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.


--

என்னை சிந்திக்க வைத்த வள்ளலார் பாடல் ...

வாடியபயிரைக் கண்டபோதெல்லாம்


வாடினேன் பசியினால் இளைத்தே


வீடூதோ றிரந்தும் பசியறா தயர்ந்த


வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்


நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்


நேர் உறக் கண்டுளந் துடித்தேன்


ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்


சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்

ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று
அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.
அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது.


அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா
என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது.
அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.
அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து
இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.
அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.
சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று
கிணற்று தவளை கூறியது.
அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்
என்று பதில் கூறியது.
உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியது
கடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விட
பெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.
நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.


அது போல்தான் ஞான மார்க்கத்தில்
சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று
அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது.
ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள்
உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.


ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு அதையே பிடித்து கொண்டு
அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்
ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.


நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.
நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு
ஆராய்ந்து கற்க வேண்டும்.


நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால்
நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும் இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.

எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்


சிலருக்கு தூங்குவதில் சுகம். உணவை ருசித்து உண்டு மகிழ்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் சிலர் பொழுதை விளையாடிக் கழிக்கிறார்கள். நாடகம், கூத்து இவற்றில் இன்பம் காண்பவர்களும் உண்டு. ஆனால், என்றும் அழியாத இன்பம் ஆண்டவனே என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள். அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும். எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தால் அதற்கு பசிக்கிறது என்பதை தாய் அறியமாட்டாள். அதனால் உங்கள் எண்ணங்களை இறைவனிடம் சொல்லுங்கள். அவன் பரிசீலனை செய்து விரைவில் பலன் கொடுப்பான்.
புலால் உண்பவன் வயிற்றில் இறந்து போன உயிர்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன. அசைவ உணவு உண்பவன் வாழ்வில் ஆன்மிக வளர்ச்சி துளியளவும் ஏற்படாது. பசியுடன் இருக்கும் ஜீவனுக்கு ஆன்மிகம் புரியாது. அந்த மனிதனுக்கு உணவு அளித்து பசித்தீயை போக்குங்கள். அந்த ஜீவகாருண்ய உணர்வே மிக உயர்வானது.
தன்னுயிர் போல மன்னுயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வுயிர்களுக்கு துன்பம் இழைக்காதீர்கள். பிறருக்கு உண்டாகும் ஆபத்துக்களை அகற்றி, அச்சம் போக்க வேண்டியது அருள்வாழ்வின் அடிப்படை..

படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்


கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.

எத்தனை படிகள் இருந்தாலென்ன?

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்



இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. கருத்துக்கு எட்டுவான். உங்கள் கைக்கு எட்டுவதில்லை. வாய்க்கு எட்டுவான். அவனை அன்போடு பற்றுங்கள். விலகமாட்டான். எங்கே அன்பிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் ஆண்டவனை வணங்கிப் பெறும் புண்ணிய பலன்களை எல்லாம் ஒரே நாளில் பெற முடியும். எப்படி என்றால் பசியால் வாடும் அன்பர் முகம் மலர உணவினைத் தருமம் செய்யுங்கள். நிச்சயம் புண்ணியம் கிடைக்கும். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளும் கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தை உண்டு களிக்கலாம். மனதில் இறைவனை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். கதிரவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளாய் இரவும்பகலும் கழிகிறது. காலத்தை விரயம் செய்யாமல் நிலையான தருமங்களைச் செய்யுங்கள்.மறப்பது மனிதர் இயல்பு. பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம். உடலை உயிர் மறக்கலாம். உயிரை உடல் மறக்கலாம். நெஞ்சம் தான் கற்ற கல்வியை மறக்கலாம். ஆனால், தவத்தில் சிறந்தவர்களின் மனத்தில் உறையும் இறைவனை மறக்கக் கூடாது.

வாழ்க்கை ஒரு மாயப்பேழை

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்




* உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

* அடுத்தவர் அணியும் ஆடை அணிகலன்களையும், அவர்தம் நடையின் பாங்கையும் நான் கருத்தூன்றிப் பார்ப்பதில்லை. எனக்குக் கைநீட்டி நடக்கவே மனம் கூசுகிறது. அதில் கர்வம் இருப்பதாய் படவும் கைகளைக் கட்டிக்கொண்டுதான் நடக்கிறேன். உயர்ந்த ஆசனத்தில் உட்காரப் பிடிக்காது. நான் கால்மேல் கால் போட்டு அமரவும் கூசுவேன். சயனிப்பதற்கு சவுகரியமான படுக்கையைத் தேடமாட்டேன். வாய்விட்டுப் பாடமாட்டேன். நீட்டி முழக்கிப் பேசிட அஞ்சுவேன்.



* எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.



* நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.



* ஏழு திரைகளுக்கு அப்பால் இருக்கிறது பேருண்மை. அவன் அத்தனை திரைகளையும் அகற்றி எனக்கு மெய்ப்பொருள் வெளிப்படச் செய்தான். நம்மில் ஒரு மாயை பேழையைத் தந்தான். அரிய பொருள் ஒன்று அதிலிருப்பதாகச் சொன்னான். திறந்து பாரென ஒரு திறவுகோலையும் கொடுத்தான். வாழ்க்கை முழுவதும் அதைத் திறந்து பார்க்கிற முயற்சியில் நான் இருக்கிறேன்.



* பொய்யை மெய்யாக்கி போற்றத் தெரிந்தவர்கள் வணங்கி நிற்பது ஒரு தெய்வமே அல்ல, வழியாய்க் கொண்டதும் ஒரு வழி அல்ல.

சாப்பிட மட்டும் தான் விருப்பமா?

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்





* தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் என்று உணர்தல் வேண்டும். இல்லாவிட்டால் சமரசம், சன்மார்க்கம், எல்லா உயிர்களும் ஒன்று என்று பேசும் உரையாடல் யாவும் வெறும் பேச்சாக அன்றி, ஒரு செல்லாக் காசுக்கும் உதவாது.

* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிவது கூடாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொருவரும் உவந்து முன்வர வேண்டும்.

* சோறு சாப்பிடுவதிலே மட்டும் மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப்போகும். ஆற்றிலே கரைத்த புளிபோல அது பயன் தராது.

ஒவ்வோர் உயிரும், தன் அறிவின் பயனாக அன்பைக் காட்டி, அந்த அன்பின் பயனாக அருளிரக்கம் கொண்டு, ஏனைய உயிர்களின் நன்மைக்காக உள்ளம் கசிந்து, உயிர்களின் துன்பத்தைக் கண்டபோது உள்ளம் குழையும் இயல்பே அருள் இயல்பு ஆகும்.

* வஞ்சகத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை ஒழித்து, அருள் நெறியில் ஒன்றாக இன்பமாக வாழ்வதை விரும்பி, உலகம் முழுவதும் ஒன்றாகிக் களிப்படைந்து வாழும் நிலை என்றுதான் வருமோ?

* நாள்தோறும் ஆண்டவனை வணங்கி வாழ்தல் வேண்டும். இல்லையேல், உலகத்தில், உயிர்களிடத்தில், அன்பும், அருளிரக்கமும் ஒரு சிறிதேனும் ஏற்படாது.

* அன்பையும், இரக்கத்தையும், அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம்வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்.

* ஆண்டவன் எல்லா உயிர்களையும் ஒரே நோக்கமாக சம பாவனையாகப் பார்க்கும் இயல்புடையவர். ஆதலால் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அருள்பெற வேண்டுமானால் அவர்களுக்குச் சமத்துவ சிந்தை பரந்த நோக்கம் இன்றியமையாதவை.

இடையூறின்றி எதையும் செய்யுங்கள்

அன்பு வெள்ளமாகும். அது ஒருநாள் நம்மை முற்றும் விழுங்கிக் கரை கடந்து போகும்.

மறப்பது மனிதரியல்பு, மறக்காதிருப்பது மகத்தான இயல்பு. இங்கே பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம், தாங்கி நிற்கும் உடலை உயிர் மறக்கலாம், தனது ஆதாரமான ஆவியை உடல் மறக்கலாம், நெஞ்சம் கற்றதை மறக்கலாம், ஆனால், தவத்தில் மிக்கார் மனத்தில் உறையும் தலைவனை நாம் மறக்கலாமா?

எல்லைகளைக் கட்டியாள எண்ணமில்லை. எதிலெதிலோ பற்று வைத்து மாளவும் விரும்பவில்லை. அந்த சொர்க்கமே கிடைப்பதாயினும் அதை தூக்கி எறிந்துவிட்டு என் மேலோனின் கருணை ஒன்றையே வேண்டி நிற்பேன்.

அருட் பெருஞ்ஜோதி என்பது அகத்தேயும், வெளியேயும் வெளிச்சத்தைத் தருகிறது.

நீங்கள் எதைச் செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக்கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும் நல்லதாய் இருக்க வேண்டும்.

நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியைத்தான் நாம் 'சண்முகம்' என்று அழைக்கிறோம்.

பானையில் சோறு வெந்துவிட்டதா என்று பார்க்க ஒவ்வொரு சோற்றையுமா பதம் பார்க்கிறார்கள். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு போதும் பதம் பார்க்க. அதுபோல எல்லாச் சமய மதத் தெய்வங்களையும் ஆய்வு செய்யாமல் நம் நாட்டிலே பெரும்பாலாகப் பரவியுள்ள சைவ, வைஷ்ணவ சமயத் தெய்வங்களை ஆய்வு செய்து உண்மையைப் புரியவைத்தால் அந்த ஆய்வு மற்ற சமய மதங்களுக்கும் பொருந்தும்.