பிராணிகள் பேசுகின்றன - கேளுங்கள்

நற்குணம் கொண்ட நல்லோர்களே ! தாய் மார்களே ! சகோதர்களே ! .. உங்கள் பாதங்களை தொட்டு கோடிமுறை கும்பிடுகின்றோம். நாங்கள் முறைஇடுவதை சற்று செவிமடுத்து , கேட்டு சிறிதாவது சிந்த்திப்பீர்களாக...,

இரக்கம் கொண்ட இதயம் உடையவர்களே ! இந்த உலகில் வாழ பிறந்த உங்களுக்கு மனம் மகிழ பண்டிகைகள் வருகின்றன . அந்த நாட்களில் நீங்கள் குடும்பத்துடனும் , குழந்தைகளோடும் கூடி மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பி , உங்கள் உணவுக்காக எங்களை கொன்று, எங்கள் உடலை சிதைத்து அதை புசித்து மகிழ்கின்றீர்கள்.

அந்த சமயங்களில் , எங்கள் குழந்தைகள் ஆதரவு இல்லாத அநாதை பிள்ளைகளாகி விடுகின்றனர்.நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல,நாங்களும் எங்கள் குழந்தைகளுடன்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா? உங்களுடைய அற்ப சந்தோசத்திற்காக அப்பாவியாகிய நாங்கள் தான் பலியாக வேண்டுமா ? இதை தயவு செய்து சிந்திக்க வேண்டும் . இனி வருகின்ற பண்டிகை நாட்களிலும் , மற்ற காலங்களிலும் எங்களை கொள்ளும் எண்ணத்தை விட்டு விட வேண்டும்.
எங்கள் குழந்தைகளுடன் நாங்களும் இருக்க எங்களை வாழ வைக்க தயவு செய்யுங்கள் . எங்களுடைய அவல நிலையை சொல்கிறோம். சற்று கேட்டு சிந்தியுங்கள் ...

========================================="உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் " - வள்ளலார்

"உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " - வள்ளலார் (அகவல்)

"எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்" - வள்ளலார் (தனித் திருஅலங்கல்)
==========================================

அனுப்பியவர்,
Karthikeyan


Best Blogger Gadgets

2 கருத்துகள் :

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

வள்ளுவம்..

நல்ல சிந்தனை நண்பரே..

Velmaheshk சொன்னது…

nantri... முனைவர்.இரா.குணசீலன்

கருத்துரையிடுக