எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

 வள்ளல்
பெருமானார்  இவ்வாறு பாடுகிறார்:

''காற்றாலே புவியாலே சுகனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன்
விரைந்தளித்தான் எனக்கே''- என்கிறார்


ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு
என் மார்க்கமும் ஒன்றாமே.                -திருவருட்பா

 புனித தீர்த்தத்தில் நீராடினாலும் துன்பங்கள் தீராது என்பதை
வலியுறுத்தவே வள்ளுவர் “ புறந்தூய்மை நீரால் அமையும், அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்” என்கிறார். எனவே மனிதன் தன்னுடைய எண்ணத்தை
மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். எண்ணம் தூய்மை அடைந்து பிற உயிர்களில்
மேல் அன்பு-கருணை- தயவு  ஏற்பட்டால் மனிதனிடம் உள்ள அனைத்து சக்கரங்களும்
தானே இயங்கும். ஸ்தூல தேகம் சுத்த தேகமாக மாறும்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக