பிராணிகள் பேசுகின்றன - "பசுவாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

பசுவாகிய எங்கள் நிலை சொல்கின்றோம். :---

உங்கள் உடல் நலம் பெறவும் , வளமாக வாழவும், உங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் என்னுடைய பாலை என்னுடைய நலம் கூட கருதாமல் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன். நீங்களோ, உங்களுக்கு உதவாத பொருள்களாகிய தவிடு, வைக்கோல் , கழுநீர் , பிண்ணாக்கு முதலியவற்றை எங்களுக்கு உணவாக கொடுத்து அன்பு காட்டுவது போல் நடிகின்றீர்கள்.
எருதுக்கு வண்டியில் சுமக்க முடியாத அளவு பளுவை ஏற்றி இழுக்க செய்கிறீர்கள். அதனால் , இழுக்க முடியாத போது சாட்டையாலும் , தடியாலும் சிறிதும் இரக்கம் இல்லாமல் அடிகின்றீர்கள்.
இப்படி உழைத்து வயதான காலத்திலோ, உடல் நலம் குன்றி விட்டாலோ எங்களை கசாப்பு கடைகாரனுக்கு விலைக்கு விற்றுவிடுகின்றீர்கள். உங்கள் குடும்பங்களில் உள்ள வயதானவர்களை அப்படி விலைக்கு விற்று விடுவீர்களா?
உங்களுக்கு எங்கள் மீது இரக்கமோ, நன்றி உணர்வோ இருந்தால் இப்படி பட்ட செயல்களை செய்வீர்களா ?

Anbudan,
Karthikeyan.J

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக