நெஞ்சம் நெகிழ வைத்த ஒரு நிகழ்வு

ஜெர்மனியிலே பணிபுரியும்
நம் தமிழ்த் தம்பதிகளுக்கு
நெடுநாளாய் குழந்தை இல்லை.
கடைசியிலே அந்தப் பெண்ணுக்கு ஒரு
குழந்தையைச் சுமக்கும் பாக்கியம் கிடைத்தது.

ஆனால் பாருங்கள்,
குழந்தைக்குத் துடிப்பே இல்லை !

பயந்து போய் டாக்டர்களிடம் காட்டியும்
அசையாமல் ஜடமாக்க் கிடந்தது குழந்தை !
நொந்து நூலாகி நொடிந்து போன வேளையில்தான்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
விடியற் காலை அந்த அம்மாவிற்கு
குழந்தை துடிப்பது போன்ற உணர்வு !
அப்போது வீட்டிலே
திருவாசகப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
சந்தேகப் பட்ட அந்த அம்மா திருவாசக இசையை நிறுத்தியதும்
குழந்தை துடிப்பது நின்றது.
பிளேயரை ஆன் செய்ததும் குழந்தை துடிக்க
அப் பெண் அடைந்த ஆனந்தம் ! அளவே இல்லை

அப்புறம் என்ன,

தினம் தினம் தேவார- திருவாசக இசை வெள்ளம்தான் வீடு முழுக்க . .!

குழந்தையை நல்ல படியாகப் பெற்ற அத் தம்பதிகள்
இதற்காகவே தமிழ் நாடு வந்து
திருவாசகத்திற்கு இசை அமைத்த
இசைஞானி இளையராசாவைச் சந்தித்து ஆசியும் பெற்றுத்
திரும்பினர் என்றால்
செய்தியா , சரித்திரம் அல்லவா இது ?



நாரத கானம் கேட்ட இராட்சசிக்குப் பிரகலாதன் பிறந்தான்.

நாக்கு முக்குக் கேட்டால் தேவதைக்குக் கூட இராட்சதன் பிறக்கலாம் !
வருங்காலம் உங்கள் கையில் . .!
இல்லை உங்கள் காதில் !


Source frm: SANMARGAM – An Art Of Immortality

Best Blogger Gadgets

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆச்சரியமாக உள்ளது. நம் இசைஞானிக்கு மேலும் ஒரு சிறப்பு.. பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !

நெற்கொழுதாசன் சொன்னது…

நாக்கு முக்குக் கேட்டால் தேவதைக்குக் கூட இராட்சதன் பிறக்கலாம் !
வருங்காலம் உங்கள் கையில் . .!
இல்லை உங்கள் காதில் !


மாட்டுக்கு ஒரு சூடு .............................மனிதர்களுக்கு ,

துளசி கோபால் சொன்னது…

அட!!!!

கருத்துரையிடுக