தில்லையாடி வள்ளியம்மை - 1

"வாழ்க நீ, எம்மான், இந்த
வையகத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா நீ வாழ்க, வாழ்க "
என்பார் மகாகவி பாரதியார்.

அன்னைத் தமிழ் மொழி மீது மாறாக் காதல் கொண்டவராம், நம் தேசத் தந்தை
காந்தியடிகள், தெய்வப் புலவர் திருவள்ளுவரின், திருக்குறளிலும் பெரும்
ஈடுபாடு கொண்டிருந்தார்.

கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக,
எனும் குறள் நெறியைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் நம்
காந்தியண்ணல்.

1930 ஆம் ஆண்டு நடைபெற்றது உப்புச் சத்யாகிரகப் போராட்டம்.........

அதன் பின்பு 1932 ஆம் ஆண்டு, காந்தி - இர்வின் ஒப்பந்தம் மீறப்பட்டதைக்
கண்டித்து நாடு முழுவதும் எழுந்த சத்தியாகிரகப் போராட்டத்தில்,
காந்தியடிகள் கைது செய்யப் பட்ட போது, அதை எதிர்த்து, திருப்பூரில் தடையை
மீறி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது.

' வெள்ளையனே வெளியேறு ', இயக்கம் 1942 ஆம் ஆண்டு, நடந்தது.

1937 ஆம் ஆண்டு, உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் மற்றும் மரியல்
போராட்டம்.

1940 ஆம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகப் போராட்டம்.......

மனித உரிமைக்காக, தென்னாப்பிரிக்காவில், காந்தியடிகளோடு இணைந்து
பாடுபட்டவர், ஐயனாரின் மனம் கவர்ந்த, தில்லையாடி வள்ளியம்மை.
இந்தியருக்குத் தேசியமும் இல்லை......... தேசியக் கொடியும் இல்லையென
கொக்கரித்த ஒரு ஆங்கிலேயனின் ஆணவப் பேச்சைச் சகிக்காத வள்ளியம்மை, தான்
உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை அக்கணமே கிழித்து, அவன் முகத்திற்கு
நேரே, இது தான் எங்கள் தேசியக் கொடி என்று துணிந்து கூறினார் .
கிழித்துக் காட்டிய அந்த முந்தானையில் இருந்த, காவி, வெள்ளை, பச்சை
வர்ணங்கள்தான் மூவர்ணக் கொடியானது என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதே நிரம்பிய, இறப்பின் தருவாயில், உயிர் பிரியும் முன்பு கூட, சிறை
செல்ல சித்தமாயிருந்த உத்தமி வள்ளியம்மையைப் பற்றி அண்ணல் தன் சுய
சரிதையில், மனம் நெகிழ்ந்து எழுதியுள்ளார்.

இந்திய விடுதலைக்கு ஆணி வேரான உரிமைப் போர் தென்னாப்பிரிக்கப்
போராட்டம்.... இதில் தன் இன்னுயிரையே அர்ப்பணித்த தில்லையாடி
வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தை தென்னாப்பிரிக்காவில், 1914ம் ஆண்டு
ஜூலைத் திங்கள் 15ம் நாள் காந்தியடிகள் திறந்து வைத்தார்.

இப்படி எத்தனை வள்ளியம்மைகள், நம் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள்,
இன்னுயிரையும் ஈந்தார்கள் என்பதை நம் வரலாறு கூறும்.

இன்றும் நம் இந்தியப் பெண்டிரின் இரத்தத்திலும், ஆழ் மனத்திலும் அண்ணல்
காந்தியடிகள் காட்டிய சத்தியப் பாதை வேறூன்றி இருக்கிறது என்பதை நம்
அன்றாட வாழ்க்கையிலும் காண முடிகிறது.............

எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களின் சூழலில் கூட, அஹிம்சை
முறையைத் தானே இன்றும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? அது
மட்டுமல்லாமல், குடும்ப நன்மை கருதி, எத்துணை சத்தியாகிரகங்கள் நடத்திக்
கொண்டிருக்கிறார்கள்? ஒரு குடும்பம் நல்ல மேன்மையான நிலைக்கு
உயருவதற்கும், குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கவும், ஒரு பெண் எத்துணை
தியாகங்கள் மேற் கொள்கிறாள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆக காந்தியம் இன்றும் நம் இந்தியப் பெண்களின் வடிவில், ஒளி வீசிக்
கொண்டுதான் இருக்கிறது என்பதை நல் மனம் கொண்டோர் எவரும் மறுக்க இயலாது!!




பவள சங்கரி


Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

தான்
உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை அக்கணமே கிழித்து, அவன் முகத்திற்கு
நேரே, இது தான் எங்கள் தேசியக் கொடி என்று துணிந்து கூறினார் .
கிழித்துக் காட்டிய அந்த முந்தானையில் இருந்த, காவி, வெள்ளை, பச்சை
வர்ணங்கள்தான் மூவர்ணக் கொடியானது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக