இராமகிருஷ்ண பரமஹம்ஸர்

பாம்பு மிகவும் கொடிய விஷமுள்ளது. எவரேனும் அதைப்பிடிக்கப் போனால் அது அவரைக் கடித்துவிடுகிறது.

ஆனால் பாம்பு பிடிக்கும் தொழிலைக் கற்றுள்ளவன் பாம்பைப் பிடிப்பது மட்டுமன்றி தனது கழுத்தைச் சுற்றியும் கைகளைச் சுற்றியும் ஆபரணங்களை அணிவது போல பாம்புகளைத் தொங்க வைத்திருப்பான்.

அதுபோல ஆத்ம ஞானமடைந்தவன் காம, குரோத, ஆசைகளால் ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டான். வீட்டிலுள்ளவர்கள் வழிப்புடனி ருந்தால் திருடர்கள் வரமுடியாது.

அதுபோன்று நீயும் ஆத்மஞான விழிப்புடனிருந்தால் தீய எண்ணங்கள் உன் மனத்தினுள் நுழைந்து நல்ல எண்ணங்களை கொள்ளையிட முடியாது.
===============================
>இராமகிருஷ்ண பரமஹம்ஸர்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக