இது மழைக்கு மட்டும் அல்ல..


-
சென்னை தாம்பரம்
ரயில் நிலைய பக்கத்திலும்
ஹிந்து மிஷன் மருத்துவமனை
எதிரிலும் காண்கிறேன்

இருக்க நல்ல ஒரு வீடும்
உடுக்க நல்ல உடைகளும்
இல்லாமல்
இவர்கள் மழைக்கு ஒதுங்கி
இதோ இந்த தாம்பரம் பாலம் கீழ்
மழையிலும்
சின்னஞ்சிறு குழந்தைகளும்
முதியவர்களும்
தனது வீடு இழந்து
இங்கே சமைத்து சாப்பிடுகின்றார்

மனநலம் குன்றியோரும்
பத்திற்கும் மேற்பட்டோர்
அங்கே திரிகின்றார்..

இன்னும் ஓன்று ..

வருவது என்னில்
கண்ணீர் மட்டும் அன்று..

அதோ பிள்ளைகளால் கைவிடப்பட்ட
மூதாட்டிகள் சிலபேர்

அவர்கள் கையில்
உணவை கொடுக்கும் போது
நான் கண்ட
"கடவுள் நீதான்பா !" என்பார்கள்

இவர்கள்
தெருவிலும்
மழையிலும்
பிச்சை எடுத்தும்
கைவிடபட்டும்
அலைகின்றனர்.........


ஆனால்
கல் மனதும்
கரைய மறுக்குது..

நனைந்த உடம்பு குளிர்கிறது
ஆனால் எங்கள் உள்ளம் குளிரவில்லை ...


மழையே
உனக்கு
நாங்கள் விலை கொடுப்பதில்லை

சில வேளை
எங்களையும்
எங்கள் மனதும்
மழையில்
குளிர்விக்கிறாய்

இது மழைக்கு மட்டும் அல்ல..


சில பேர் மனதில்
ஈரம் கொஞ்சம் இருந்தால்
இவர்கள் இங்கு இருக்க மாட்டார்..



எத்தனை நாள் தான் ஆகுமோ?
இந்த மழை தீரவென்று
அவர்கள்
ஏங்குகின்றார்

நான் ஏங்குகிரேன்
எப்போது மனிதர்கள்
நாங்கள் அனைவர்களும்
ஏசுவும், வள்ளலாரும் சொன்ன
அன்பு இதயம் பெறுவோம் என்று...

அன்று
முதியோர்
கைவிட படமாட்டார்
ஆதரவற்றோர்
இருக்க மாட்டார்
ஏழைகள்
இருக்கமாட்டார்
சமத்துவமும்,
அன்பும்
தான் அங்கு இருக்கும்....

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக