காமராசரிடம் நிருபர் ஒருவர் "கள்ளுக்கடை திறக்கப்படுமா? என்றார்...

காமராசர் சற்றுக் கோபப்படக் கூடியவர் என்று நினைப்பவர் பலர். ஆனால் மிகுந்த நகைச்சுவை தன்மை கொண்டவராவார்.


 திருச்சியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காமராசரிடம் நிருபர் ஒருவர் "கள்ளுக்கடை திறக்கப்படுமா? என்றார்.
 ""அது ஏன் இப்போது?'' என்றார் காமராசர்.
 "" கள்ளுக் கடையைத் திறந்துவிட்டால் உணவுப் பற்றாக்குறை இருக்காது'' என்றார் நிருபர்.
 "" எப்படி?''
 ""சாப்பிட்டுவிட்டால் ஒன்றுமே தெரியாது. பசி இருக்காது'' என்றார் நிருபர்.
 ""உங்களுக்கு எப்படி இது தெரியும்?'' என்று காமராசர் கேட்க, நிருபர்கள் அனைவரும் சிரித்தனர். மாட்டிக் கொண்ட நிருபரின் முகத்தில் அசடு வழிந்தது. காமராசர் பேச்சில் இப்படி நகைச்சுவை மிளிர்வதும் உண்டு.

Best Blogger Gadgets

4 கருத்துகள் :

Yaathoramani.blogspot.com சொன்னது…

இதுவரை அறியாத அருமையான தகவல்
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல பதிவு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஒன்று மறுக்காதீர்கள், இன்று இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மது வகைகளுடன் கள்ளை ஒப்பிடுவதே அறியாமை!
புதிய கள்ளு மிக உன்னதமான இயற்கை தந்த பானம், பண்டைய தமிழர்கள் அருந்திமகிழ்ந்தே நம் இனத்தையும் பெருக்கினார்கள். அன்று பெண்களே கள் அருந்தியுள்ளார்கள். நம் ஔவையாரே நல்ல கள் அருந்தியுள்ளார்.
எனவே பனை வளர்த்து வளம் பெருக்கி நலமுடன் நற் சந்ததியை உருவாக்குங்கள்.

கருத்துரையிடுக