ஜீவனுள்ள நட்பு கார்ல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ் நட்பு தான்....

                                             

                                                 ஜெர்மனியில் ரைன் நதிக்கரையில் உள்ள டிரிவஸ் நகரில் 5.5.1918 அன்று வழக்கறிஞர் மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார்.அதே ஜெர்மனியில் ஊப்பர் நதிக்கரையில் பார்மன் என்ற சிற்றூரில் 28 .11 .1820  அன்று மிகப்பெரிய  தொழிலதிபருக்கு மகனாக பிரட்ரிக்  ஏங்கல்ஸ்  பிறந்தார்.ஆம்!!ரைன் நதிக்கரையலும் ஊப்பர்  நதிக்கரையலும் பிறந்த இந்த இரண்டு ஜீவநதிகளும் எதிர்காலத்தில் தொழிலாளி வர்க்கதிற்காக இணைந்து பணியாற்றுவோம் என்ற என்னமின்றியே வளர்ந்தனர்.
                                                கார்ல் மார்க்ஸ் வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவருடைய தந்தையால் வளர்க்கப்பட்டார்.ஆனால் கார்ல் மார்க்ஸ் சிறுவயதிலையே மக்கள் படும்பாட்டை கவனித்திருந்தால் தத்துவத்தில் கவனம் செலுத்தி,அதில் முனைவர் பட்டம் பெற்று பத்திரிக்கை பணியில் சேர்ந்தார். 
                                             பிரட்ரிக்  ஏங்கல்ஸ் தொழிலதிபராக வேண்டும் என்ற  எண்ணத்தோடுதான் அவருடைய தந்தையால் வளர்க்கப்பட்டார்.குதிரை சவாரி,வாள் சண்டை,ராணுவத்தில் பீரங்கி படையில் பணி என வளர்ந்த எங்கல்ஸ் சுற்றி வாழும் மக்களின் நிலைகண்டு அவர்களின் வாழ்வுக்காக வாழ வேண்டுமென்று முடிவு செய்தார்.ஆம்!!மார்க்ஸ் , எங்கல்ஸ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விசியத்தில் தோற்றனர்.ஆனால் உலக தொழிலாளி வர்க்கம் இரண்டு ஆசான்களை பெற்றது!  
                                              பார்மன் கிராமத்தில் இருந்தபோதே 'ரைன்லாந்து கெஜெட்' என்ற பத்திரிக்கையில் கார்ல் மார்க்ஸ் எழுதிய புரட்சிகரமான கட்டுரைகளைப் படித்த எங்கல்ஸ் இருவர் சிந்தனையும் இணைந்திருப்பதை கண்டு வியந்தார்.மார்க்சை சந்திக்க வேண்டுமென்று எங்கல்ஸ் விரும்பினார்.அதற்கான சந்தர்பத்திற்காக எங்கல்ஸ் காத்திருந்தார்.
                                             மான்செஸ்டரில் ஏங்கல்சின் தந்தை பங்குதாரராக இருந்த 'எர்மன் அண்ட் எங்கல்' என்ற துணி ஆலையைக் கவனிக்க ஏங்கல்சை மான்செஸ்டர் அனுப்பி வைத்தார்.. செல்லும் வழியில் கோலன் என்ற நகரில் கார்ல் மார்க்சை எங்கல்ஸ் சந்தித்தார்.இருவரும் கருத்து பரிமாற்றம் செய்தனர் .. ஒருவரை ஒருவர் அறிவுகரன்களால் ஆரத்தழுவி கொண்டனர்.வாய்ப்பு கிடைத்தால் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர்.அதன் பின்  துணி ஆலையைக் கவனிக்க மான்செஸ்டர் சென்ற ஏங்கல் விருப்பமின்றியே அந்த வேலையே செய்து கொண்டு இருந்தார்.
                                            மூன்று ஆண்டுகளில் துணி ஆலைபணியை தூக்கி எரிந்து விட்டு மார்க்ஸ்சோடு இணைந்தார்  எங்கல்ஸ் .தனியாகவும் மார்க்ஸ்சோடு இணைந்தும் புத்தகங்களை எங்கல்ஸ் எழுதினர்.அறிவிலும் மேதமையிலும் தனக்கு இணையானவர்  எங்கல்ஸ் என்று திடமாக நம்பினார் மார்க்ஸ்.அதனால்தான்,'நியூயார்க் டெய்லி ட்ரிப்யுனல்' என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து மார்க்சை கட்டுரை எழுதும்படி அந்த பத்திரிக்கை உரிமையாளர் வலியுறுத்தியபோது அதற்கு ஒப்புக்கொண்ட மார்க்ஸ் இரண்டு,மூன்று காட்டுரைகளை எழுதி விட்டு,அதன் பின் 'மூலதனம்' நூல் எழுத வேண்டிய பணியுருந்ததல்'நியூயார்க் டெய்லி ட்ரிப்யுனல்'பத்திரிக்கைக்கு தன் பெயரில் ஏங்கல்சை எழுத வைத்தார்.
                                           காலம் நடந்து .... மார்க்ஸ் குடும்பம் வறுமையில் வாடியது... 
                                           ஏங்கல்ஸ் குடும்பத்தார் மன்செஸ்டர் சென்று தொழிற்சாலையைக் கவனிக்கும்படி வலியுறுத்தினர்..உடனே அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்  ஏங்கல்ஸ்.. இந்த பனியின் மூலம் கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதியை மார்க்ஸுக்கு அனுப்பிவிட்டு அவருடைய எழுத்துபணியை தொடரத் தூண்டினார் ஏங்கல்ஸ்.இப்படி 16 ஆண்டுகள் உழைத்து கிடைத்த பணத்தின் பெரும்பகுதியை மார்க்ஸ் குடும்பத்திற்கு அனுப்பி வைத்து அந்த குடும்பத்தின் தாய்ப் பறவையாகத் திகழ்ந்தார் ஏங்கல்ஸ்..
                                          பணியிலிருந்து விடுபட்டபோது கிடைத்த பணத்துடன் வந்து மார்க்ஸ் வீட்டிற்கு அருகிலையே குடியிருந்துகொண்டு மார்க்சின் எழுத்து பணிக்கு தோள் கொடுத்தார் ஏங்கல்ஸ்.இதற்கிடையில்  ஏங்கல்சின் காதல் மனைவியும் இறந்தார்;அதன்பின் ஏங்கல்ஸ் திருமணம் செய்த காதல் மனைவியின் தங்கையும் இறந்தார்.இத்தனை இழப்புகளால் ஏற்பட்ட சோகங்களை எல்லாம் நெஞ்சுக்குள் பூட்டி வைத்து கொண்டு கார்ல் மார்க்ஸ் குடும்பத்தை கவனிப்பதிலையும் அவரது எழுத்து பணிகளுக்கு துணை புரிவதிலையும் ஏங்கல்ஸ் காலத்தை செலவிட்டார்.இடையிடையே ஏங்கல்ஸ் எழுதவும் மறக்வில்லை..
                                         கார்ல் மார்க்சின் 'மூலதனம்' முதல் பாகம் வெளிவந்தது.ஆனால் இந்த நூலை எவரும் கண்டுகொள்ளவில்லை.அதனால் "ஒரு பத்திரிக்கையில் புனைபெயரில் 'மூலதனம்'இப்படி ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது.ஆபத்தான விளைவுகளை இந்த புத்தகம் ஏற்படுத்தும் ஆதனால் இந்த புத்தகத்தை தடை செய்யவேண்டும்" என்று ஏங்கல்ஸ் எழுதினர்.இதன் பின்புதான் மூலதனத்தை பலரும் படிக்க தொடங்கினர்.எதிர்த்தும்,ஆதரித்தும் கருத்துகள் வெளிவந்தன..
                                        மார்க்ஸ் மனைவி ஜென்னி இறந்தபின் மார்க்ஸ் மிகவும் மனமுடைந்துவிட்டார்.இந்த வேளையில் எங்கல்சின் துணையே மார்க்ஸுக்கு பக்கபலமாக இருந்தது.இருப்பினும் ஒரு நாள் மார்க்ஸும் இறந்துவிட்டார்.இதன்பின் மார்க்ஸ் படைப்புக்களை வெளிக்கொண்டுவருவது,மார்க்ஸ் படைப்புகளுக்கு எதிரான கருத்துகளுக்கு பதில் சொல்லுவது,மார்க்சின் வரிகளை காப்பாற்றுவது என ஏங்கல்ஸ்க்கு பணிகள் அதிகரித்தன..
                                       கார்ல் மார்க்சின் 'மூலதனம்'இரண்டாம் ,மூன்றாம் பாகங்களை பெருமுயற்சி எடுத்து ஏங்கல்ஸ் வெளிக் கொண்டுவந்தார்.மார்க்சின் கடிதங்களை தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தான்  ஏங்கல்ஸ் இறந்தார்.இரபதற்கு முன் தன் சொத்துகளை எல்லாம் கார்ல் மார்க்ஸ் வாரிசுகளுக்கு சேரும் வகையில் ஏங்கல்ஸ் உயில் எழுதி வைதிருந்தார்..ஆம்!! கார்ல் மார்க்சின்  தோழனாய்,நண்பனாய்,சகபோரலிய,மார்க்சின் குழந்தைகளுக்கு பாதுகாவலனை வாழ்ந்து சிறந்தவர் ஏங்கல்ஸ்..
                                      தன்னை முன்னித்ருதுவதைவிட கார்ல்மர்க்சை  முன்னித்ருதவேண்டும்.தன் படைப்புக்களை முன்னித்ருதுவதைவிட மார்க்ஸ் படைப்புக்களை முன் நிறுத்த வேண்டும்.அது தான் உலக தொழிலாளி   வர்கத்திற்கு   உதவி என்று புரிந்து வாழ்ந்தவர் ஏங்கல்ஸ்.இவர்களது நட்பு போற்றத்தக்கது,இணை இல்லாதது,                                                          
                                     உலக இதிகாசங்களிலும்,புராணங்களிலும் சொல்லப்பட்ட அணைத்து நட்புகளை காட்டிலும் ஜீவனுள்ள நட்பு கார்ல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ் நட்பு தான்....

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக