தகுதியான நபருக்குச் சரியான நேரத்தில் செய்வது தான் சேவை - சிந்தனைகள்



*கோபத்தாலோ, பொறாமையாலோ, ஏக்கத்தாலோ மனம் பதட்டப்படும்போது குளிர்ந்த நீரைக்குடியுங்கள். அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். முடிந் தால் பஜனைப் பாடல்கள் பாடுங்கள். நீண்ட தூரம் நடைபோட்டு வாருங்கள். மனதை அரிக்கும் சிந்தனைகள் வெளியேறி தூய்மையாக்கப் பட்டுவிடும்.
* மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயலைச் செய்வது எளியதாகும். ஆனால், நன்மை தரக்கூடியவற்றைச் செய்வது கடினம். மகிழ்ச்சி தருபவை எல்லாம் லாபகரமானது அல்ல.
* வாழ்க்கை ஒரு போர்க்களம். தர்மபூமி. அங்கு கடமைகளும், ஆசைகளும் எப்போதும் போராடுகின்றன. மனதில் எழுகின்ற ஆசை என்னும் பயங்கர தீ, பொறாமை என்னும் விரோதி ஆகியவற்றுக்கு பணிந்து செல்வது கோழைத்தனமாகும்.
* எளியவர்களுக்காக செய்யும் தொண்டு கடவுளுக்குச் செய்யும் தொண்டை விட மேலானதாகும். கடவுள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எளியவர்களுக்குச் சேவை செய்வதைக் கண்டு கடவுள் மகிழ்ச்சி கொள்கிறார்.
* தகுதியான நபருக்குச் சரியான நேரத்தில் செய்வது தான் சேவை. சமூகப்பணி என்பது வெறும் விளம்பரப்பணியாக அமைந்து விடக்கூடாது. நம்மால் முடிந்த நல்ல செயலை பிறருக்குச் செய்ய வேண்டியது கடமையாகும்.

-----சத்யசாய்.....

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக