பிச்சைக்காரருக்கு ஓட்டு




நாராயண நட் என்ற பிச்சைக்காரர் உ.பி. மாநில கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தலைவராக ஆக்கப்பட்டிருப்பதை பற்றிய உங்கள் கருத்தென்ன?

விடுதலைப் பெற்ற பிறகு பலதலைவர்களை பதவியில் அமர்த்தி நாட்டு மக்கள் ஏறக்குறைய பிச்சைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் அவனவன் திருவோடு எடுத்துக் கொண்டு தெருவில் சுற்ற வேண்டியது ஒன்றுதான் பாக்கி !

மேலும் பிச்சைக்காரரும் இந்தியக் குடிமகன் தானே ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டாலே கோட்டையில் கொடியேற்ற கனவு காணும் நடிகர்களை விட


பதவி சுகத்திற்காக கொள்கைகளை பறக்க விட்டு விட்ட தலைவர்களை விட பிச்சைக்காரர் ஒன்றும் குறைந்தவர் அல்ல!

பிச்சைக்காரருக்கு ஓட்டுப் போட்டால் ஒரு சௌகர்யம் இருக்கிறது அவர் வெற்றிப் பெற்றப்பிறகு கண்காணாமல் எங்கும் ஓடிப்போக மாட்டார் தெருவில் தான் சுத்திக் கொண்டிருப்பார்



இன்னும் ஒரு விஷயமும் இருக்கிறது தான் பதவியை பயன் படுத்தி சொத்துக்கள் சேர்த்தால் படத்துக்கு கதையெழுதி கோடி கோடியாய் ஏற்கனவே சம்பாதித்தேன் என்று புருடாக்களை அவிழ்த்து விட முடியாது

இருந்தாலும் கிராம மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் இவருக்கும் நிறைய பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் இருக்கிறார்கள்



Posted by,
யோகி ஸ்ரீஇராமானந்த குரு

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக