அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் -பாரதியார்

* ஆல மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குவது போல, பெற்றவர்களைப் பிள்ளைகள் ஆதரித்து காப்பாற்ற வேண்டும்.
* மனிதனின் முயற்சிகளில் தவறுகள் ஏற்படுவது இயல்பே. அதற்காக ஒருவன் மனவுறுதியை இழக்கக்கூடாது.
* உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருப்பவன் தனக்குத் தானே நல்ல நண்பனாக இருப்பான். தனக்குத் தானே நண்பனாக இருப்பவன் எல்லாரிடமும் நட்பு பாராட்டுவான்.
* எல்லா சாஸ்திரங்களும் ஒரே கடவுளையே பலவழிகளில் எடுத்துக்காட்டி வழிகாட்டுகின்றன. ஆனால் எல்லாத்தரப்பு மக்களுக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது.
* எல்லா விதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர். அறிவை வளர்த்துக் கொண்டால் கடினமான செயல் கூட எளிதாகிவிடும்.
* பொறுமை இல்லாதவன் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது. அன்பு எங்கிருக்கிறதோ அங்கு பொறுமையும் இருக்கும்.
* சோம்பேறியாக இருப்பது மிகப் பெரிய குற்றம். மனவலிமை கொண்டவர்கள் சோம்பேறித்தனத்தை புறந் தள்ளி விட்டு உழைப்பதிலேயே அக்கறை கொள்வார்கள்.
 
-பாரதியார்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக