ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேரு இந்தி: जवाहरलाल नेहरूIPA: [dʐəʋäɦəɾläl nɛɦɾu]: 14 நவம்பர் 1889[3]- 27 மே 1964) முதல் மற்றும் இதுவரை நீண்டகாலம் தொடர்ந்து இந்தியாவின் பிரதம மந்திரியாக சேவை செய்தவர், சேவை புரிந்த காலம் 1947---1964. இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு,காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார். கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அகில உலக அரசியலில் மிக முக்கிய நபரானார் . இவர் பண்டிட் நேரு என்றும்,( பண்டிட் என்றால் சமஸ்கிருதத்தில் "கல்வியாளர்" என்று அர்த்தம்) இந்தியாவில் பண்டிட்ஜி என்றும் அழைக்கப்பட்டார் (ஜி என்பது பெயருக்கும் பின் மரியாதை நிமித்தமாக சேர்க்கப்படுகிறது)




,பாரிஸ்டர்அரசியல்வாதியும்,செல்வந்தருமான,மோதிலால் நேருவின் மகனான நேரு, மிக இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸின் இடது சாரி தலைவரானார். மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரஸின் தலைவரானார்.நேரு துடிப்புமிக்க, மற்றும் புரட்சித் தலைவராக , ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். தொடர்ந்த சுதந்திரப் போராட்டத்தில் இவர் முக்கிய நபராக இருந்தார், காலப்போக்கில், காந்தியின் அரசியல் வாரிசாக இவர் அடையாளம் காணப்பட்டார். வாழ் நாள் முழுவதும்,இந்தியாவில் சுதந்திரவேட்கைஃபேபியன் சோசியலிஷம் பொதுத்துறைக்கும் வக்கீலாக, நீண்ட காலமாக இருந்து வந்த பொருளாதார வளர்ச்சிப் போராட்டங்களை ஏழ்மையான நாடுகள் இனம் கண்டுகொள்ள உறுதுணையானார்.







ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுத்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி கெளரவம் நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம, செக்யுலரிசம், ஏழைகளைப் பற்றிய அக்கறையுடன் கூடிய லிபரலிசம், தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை, சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை "நவீன இந்தியாவின் சிற்பி " என்று குறிப்பிடுவதுண்டு. இவருடைய மகள்,இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக சேவை புரிந்திருக்கிறார்கள்.

வாழ்க்கை வரலாறு

இன்றைய,உத்திரப் பிரதேசம்அலஹாபாத் செல்வந்தர் பாரிச்டர் மோதிலால் நேருவுக்கும் ஸ்வருப ராணிக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார்.[4] காஷ்மீர் பிராமண குலத்தில் இருந்து வந்தவர்கள் நேரு குடும்பத்தார். பல வருடங்களுக்கு முன்பாகவே அலகபாத்திற்கு வந்து வெற்றிகரமான சட்டத் தொழில் புரிந்தார். இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேரு மற்றும் அவரின் இரு சகோதரிகளுமான,விஜயலஷ்மி பண்டிட் கிருஷ்ணாவும், ஆனந்தபவன் என்ற பெரியமாளிகையில் வளர்க்கப்பட்டனர். இந்திய உயர் குடிமக்களால் அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர். அவர்களுக்கு,ஹிந்தி மொழி சமஸ்கிருதம்,மற்றும் இந்தியக்கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.




மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர்,பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும் , தங்குமிடத்தின் நிலை வீட்டில் இருந்து வெகுதொலைவு வந்ததை உணர்த்தியது, மற்றும் தாங்கமுடியாததாக இருந்ததாக உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் இன் நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி,ட்ரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். நேரு அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார்.சுதந்திர வெளிப்பாட்டிற்கு பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம்,வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவிக்கிறது மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார்.1910 அக்டோபர், இன்னர் டெம்பில் இல் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்ப்ரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை, மாறாக தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வை 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் வருட இறுதயில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார்.http://www.mapsofindia.com/personalities/nehru/education.html. சட்டப் பணிசெய்ய /அமைக்க விரைவில் இந்தியா திரும்பினார்.




எப்படியோ விரைவில் அவரை அரசியல் ஆட்க்கொண்டது.குறிப்பாக காங்கிரஸ் நடத்திய இந்திய சுதந்திரப் போராட்டம் . 1919 இல் ஜாலியன்வாலாபாகில் போராட்டக்காரர்களை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது, நேருவைக் கொதிப்படையச் செய்தது . அவர் தன் சக்தியை எல்லாம் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் மகனின் அரசியல் பிரவேசம் மோதிலாலுக்கு, பிடிக்காவிட்டாலும், இந்திய சுதந்திரத்தின் நோக்கத்தில் காங்கிரஸின் முயற்சியில் கடைசியாக அவரும் சேர்ந்து கொண்டார். [5] நேரு, மிக வேகத்தில் காந்தியின் நம்பிக்கைக் குரிய தானைத் தலைவராக வீறு கொண்டு எழுந்தார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும்,அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில்,நேரு உலக வரலாற்றின் காட்சிகள்(1934)," சுயசரிதை,"(1936) மற்றும் "இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்கு பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திரஇயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார்.1936, 1937, இல் அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவரானார், மற்றும் இறுதியாக 1946, இந்தக் கட்டத்தில் சுதந்திர இயக்கத்தில் அவருடைய அரசியல் கவுரவம் காந்திக்கு அடுத்தபடியாக மதிக்கப்பட்டது. [6]


கமலா கவுல் என்ற காஷ்மீரி பிராமணப்பெண்ணை, 1916 பிப்ரவரி 8 இல் மணந்தார்.அவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் இருந்தார், பின்னாளில் அவர் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார்,ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார்.நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இருந்தாலும் பின்னாளில் 1946 இன் வைஸ்ராயான எட்வினா மவுன்ட்பேட்டனுடன் தொடர்புப்படுத்தி வதந்திகள் வந்தன. அவரின் கடைசிக் காலத்தில் தன மகள் மற்றும் சகோதரி விஜயலச்சுமி பண்டிட் அவர்களுடன் வாழ்ந்தார்.

இந்தியாவின் முதல் பிரதம மந்திரி.

நேருவும் அவருடைய சகாக்களும், இங்கிலாந்து அமைச்சரககுழு அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் வந்ததால் விடுவிக்கப்பட்டனர்.


தேர்ந்தெடுக்கப்பட்டதும், நேரு அரசாங்கத்தை தலைமையேற்று நடத்தி செல்லும்போது, சமுதாயத் தீவிரவாதம், அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முஸ்லிம் லீகின் தலைவர் முகமது அலி ஜின்னா பாகீஸ்தானுக்கு தனி முஸ்லிம் மாநில அந்தஸ்து கோரியது ஆகியவற்றால் உண்டான கலவரங்கள் நேருவின் ஆற்றலை முடக்கின. சமாதானப்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த நேரு,மிகுந்த தயக்கத்துடன் வேறு வழியின்றி 3 ஜுன் 1947 இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். இந்தியாவின் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.




"பல வருடங்களுக்கு முன்னாள் நாம் விதியுடன் போராடினோம்,இப்போது நாம் செய்த சத்தியத்தை செயலாக்கும் நேரம் முழவதுமாக இல்லாவிட்டாலும் அல்லது முழு அளவில் இல்லாவிட்டாலும் மிக அவசியமாக வந்து விட்டது.நடுநிசி நேரத்தில், உலகம் உறங்கும்போது,இந்தியா சுதந்திரத்துடன் உயிர் விழிக்கும். சரித்திரத்தில் மிக அரிதான சமயம் வரும், அப்போது ஒரு சகாப்தம் முடியும்போது மற்றும் தேசத்தின் ஆத்மா கொடுமைப்பட்டது முடிவைத தேடும்போது பழயனவற்றில் இருந்து நாம் புதியவற்றிற்காக வரவேண்டும். இந்த புனிதமான நேரத்தில் இந்தியாவின் பெரிய மனிதநேயத்திற்காகவும், இந்தியாவிற்கும்,அதன் மக்களுக்கும்,சேவை செய்வதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நாம் பிரமாணம் செய்துகொள்ள வேண்டும்."[7]


எப்படியோ இந்தக் காலகட்டம் ஆழமான சமுதாய வன்முறையால் குறிப்பிடப்பட்டது.இந்த வன்முறை,பஞ்சாப் பிராந்தியம்,டில்லி, வங்காளம், மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தது. நேரு, பாகிஸ்தானி தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட அகதிகளின் கோபத்தைத்தணித்து,அமைதியை உண்டாக்கி உற்சாகப்படுத்த எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தார்.[மேற்கோள் தேவை][13]நேரு,முலானா ஆசாத் மற்றும் பிற முஸ்லிம் தலைவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து அவர்களை இந்தியாவிலேயே இருக்கும்படி உற்சாகப் படுத்தினார்.அந்த நேரத்து வன்முறை அவரை மிகவும் பாதித்ததால் எல்லாவற்றையும் நிறுத்த ஆணையிட்டார்,[மேற்கோள் தேவை][14] ஐக்கிய நாடுகள் சபையும் 1947 இல் இந்தோ-பாகிஸ்த்தான் போரை நிறுத்தச் சொன்னது. சமுதாயக் கலவரங்களுக்காப் பயந்த நேரு,ஹைதராபாத் மாநிலத்தை சேர்க்க ஆதரவு அளிக்கத் தயங்கினார்.


சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த ஆண்டுகளில், நேரு அவரின் சொந்த விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளவும்,மற்றும் அவரை கவனித்துக் கொள்ளவும் அடிக்கடி மகள் இந்திராவையே நாடினார். 1952 இல் நடந்த தேர்தலில் நேருவின் தலைமையின் கீழ் காங்கிரஸ் பெருமளவில் வெற்றி பெற்றது.நேருவைக் கவனிப்பதற்காக இந்திரா, அவருடைய அதிகாரப் பூர்வமான வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இதனால் இந்திரா, நேருவின் அலுவலக ஊழியர்களின் தலைவரானது, தொடர்ந்து அவரது உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் உடனிருந்ததில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இல்லை.


பொருளாதாரக் கொள்கைகள்
நேரு நவீன, புதுப்பிக்கப்பட்ட இந்திய முறைப்படியான மாநிலத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஆயத்தமானார்.இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி,முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார்.அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. தொழில்களை அதிகப்படுத்துதல்,வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் நன்மைக்கு சேவை செய்யும் சில நுணுக்கமான தொழிற்சாலைகளான சுரங்கம்,மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள் தனியார் வசம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த திட்டமிட்டார். நேரு நில மறு பங்கீட்டை முதன்மைபடுத்தினார்.மற்றும் விவசாயக் கிணறுகள்,அணைகள், கட்டும் திட்டத்தை அமுல்படுத்தினார்,மேலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை பரப்பினார். தொடர்ச்சியான சமுதாய முன்னேற்ற திட்டங்களை குடிசைததொழில்களை பரப்பும்நோக்கத்துடன் திசை திருப்புவதில் மற்றும் கிராமப்புற இந்தியாவின் திறமையை பெருக்குவதிலும் முன்னோடியாக இருந்தார். பெரிய அணைகளை கட்டுவதற்கு ஊக்குவிக்கும்போது (இவற்றை நேரு "இந்தியாவின் புதுக் கோவில்கள்" என்று அழைத்தார்.), இதனால் விவசாய வேலைகளும் நடந்தன மற்றும் நீர் மின்சாரமும் எடுக்கப்பட்டது. நேரு அணுமின்சக்தி எடுக்கும் திட்டத்தையும் அமுல்படுத்தினார்.


.பிரதம மந்திரியாக நேரு பதவி வகுத்த காலத்தில் பெரும்பாலான காலங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்தும்,முன்னேறியும் இருந்து கூட இந்தியா தொடர்ந்து மிகவும் மோசமான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டி இருந்தது. நேருவின் தொழிற்சாலை கொள்கைகள் "தொழிற்சாலை கொள்கை தீர்வு " 1956 மாறுபட்ட உற்பத்திகள் மற்றும் கனரக இயந்திரங்கள் வளர்ச்சியை ஊக்குவித்தது. [8] இருந்தும் மாநிலத்திட்டம், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்,உற்ப்பத்தி,தரம் மற்றும் லாபத்தை முடக்கத் தொடங்கின. இந்தியப் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி தரத்தை எட்டினாலும், எங்கும் பரவிய வறுமைக்கு நடுவில் மக்களை கடுமையான வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து ஆட்டிப்படைத்தது. நேருவின் புகழ் பாதிக்கப்படாமல் அப்படியே இருந்தது.அவருடைய அரசாங்கம் தண்ணீர் மற்றும் மின்சாரம், ஆரோக்கிய கவனம், சாலைகள் மற்றும் இந்தியாவின் பரந்த கிராமப்புற மக்களுக்கு நலத்திட்டங்கள் அளிப்பதில் தொடர்ந்து வெற்றி கண்டது.




[தொகு] கல்வி மற்றும் சமூக சீர்திருத்தம்
இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம்இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார்.அவர் அரசாங்கம் உயர் கல்வி நிறுவனங்களை அமைத்து கவனித்து வந்தது. அவைகள்:அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்,,இந்திய தொழில்நுட்ப நிறுவனம்மற்றும் இந்திய நிர்வாகக் கல்வி நிறுவனம். நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் எல்லா இந்தியக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்ததோடு கடனும் பட்டார்.இந்த நோக்கத்திற்காக நேரு பெரிய அளவில் கிராமப்புற திட்டங்களை உருவாக்கி மேற்ப்பார்வை செய்தார் மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.சத்துணவுக்குறைவை எதிர்த்துப் போராட குழந்தைகளுக்கு இலவசப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். முதியோர் கல்வி மையங்கள்,தொழில் கல்விக் கூடங்கள்,மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் முக்கியமாக கிராமப்புறங்களில் முதியோர்களுக்காக அமைக்கப்பட்டன.


இந்திய பாராளுமன்றம் நேருவின் அறிவுரைப்படி இந்து மத சட்டத்தில், ஜாதி வேறுபாடுகளை குற்றமாக பாவித்தல்,பெண்களுக்கான சமூக சுதந்திரம் மற்றும் சட்ட உரிமைகளை அதிக படுத்துதல் போன்ற மாற்றங்கள் உருவாகின.[9][10][11] [12] . சமூக ஏற்த்தாழ்வுகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோ மற்றும் மலைஜாதியினர் அனுபவித்த சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரச்சனைகளை களையும் வகையில் அரசாங்க பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்காக இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.மேலும் சிறுபான்மையினர் அராங்கத்தின் பிரதிநிதிகளாக இருப்பதை அதிகப்படுத்தி சமநிலை மற்றும் அமைதியான மதச்சூழலையும் அவர் உருவாக்கினார்.










[தொகு] தேசியப் பாதுகாப்பு மற்றும் அயல்நாட்டுக் கொள்கை :
வார்ப்புரு:Seealsoஆங்கில ஆளுமையில் இருந்து சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலங்களில், புதிய சுதந்திர இந்தியாவை நேரு 1947 முதல் 1964 வரை வழிநடத்தினார். அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும், தங்களுக்குள் நடந்த பனிப் போரின்போது இந்தியாவைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ள இரண்டு நாடுகளும் போட்டி போட்டன.


1948 இல் காஷ்மீரில் ஐக்கிய நாடுகளின் ஆணையால் ஒரு மாநாடு நடத்துவதாக உறுதி அளித்திருந்தாலும், ஐக்கிய நாடுகளின் பேரில் வளர்ந்த அதிகமான சலிப்பினால் 1953 இல் மாநாடு நடத்துவதைக் கைவிட்டார். தான் முன்பு ஆதரித்த காஷ்மீரி அரசியல்வாதி,ஷேக் அப்துல்லா பிரிவினையைத் தூண்டும் நோக்கத்துடன் செயல் பட்டதாக இப்போது சந்தேகித்து அவரை கைது செய்ய ஆணை இட்டார்.அவருக்கு பதிலாக பக்ஷி குலாம் மொஹம்மது இடம் பெற்றார். உலகப் பார்வையில் நேரு சமாதானப்படுத்துவதில் மன்னர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளர். கூட்டுச்சேராக் கொள்கை மற்றும் கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கி, முறைப்படுத்திய நாடுகளுக்கு முன்னோடியாக இருந்து பகைமை நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் நடுநிலை வகிக்க முனைந்தார்.இயக்கம் தோற்றுவித்த உடன், மக்கள் குடியரசான சீனாவை அடையாளம் கண்டுகொண்டு (நிறைய வட சேதங்கள் தொடர்ந்து சீனாவுடன் நல்லுறவு கொண்டிருந்தன), நேரு சீனாவை ஐக்கிய நாடுகளுடன் சேர்த்துக் கொள்ள வாதாடினார் மற்றும் கொரியர்களுடனான சண்டையில் சீனர்களை ஆத்திரக்காரர்கள் என்று பிரகடனப் படுத்துவதை நேரு மறுத்தார்.[27] 1950 இல் திபெத் ஊடுருவியும் அதனுடன் சுமுக மற்றும் நட்பான உறவை ஏற்படுத்த வழி வகுத்தார்.கம்யுனிச நாடுகளுக்கும்,வட தேசங்களுக்கும் இடையில் இறுக்கத்தைத் தளர்த்தி பிளவை சரிக்கட்ட நம்பிக்கையுடன் தூதுவர் போல் செயல்பட்டார். பாசிசக் கொள்கை மற்றும் சீனாவின் மீது இருந்த நம்பிக்கையும், சீனா, 1962 இல் திபத்தை ஒட்டியிருந்த அகசை சின்னை காஷ்மீரிலிருந்து தன்னுடன் இணைத்துக் கொண்டது சீன-இந்திய போருக்கு வழிவகுத்தது.

அணுஆயுத பயங்கரத்தையும்,/ மிரட்டல்களையும் மற்றும் உலக துன்பத்தையும் தணிக்க நேருவின் கடின உழைப்பு பலராலும் ஆராதிக்கப்பட்டது[13]. அணு வெடிகளால் மனித சமுதாயத்திற்கு உண்டாகும் விளைவுகளை பற்றிய அவரது முதல் ஆராய்ச்சி மற்றும் அவரால் "பயங்கரமான அழிவு இயந்திரங்கள்" என்று கூறப்பட்டவைகளை ஒழிக்க அயராது பிரச்சாரம் செய்தார்.அணு ஆயதங்களை அவர் ஆதரிக்காததற்கு அவரிடம் பல காரணங்கள் இருந்தன. இந்த அணு ஆயுத ஓட்டம் ராணுவத்தையும் தாண்டி தன சொந்த நாட்டைப் போல் மற்ற நாடுகளும் இதற்கான வசதி இல்லாதவையகும்.[14].


1956 இல் இங்கிலாந்து, பிரான்ஸ்,மற்றும் இஸ்ரேல் சேர்ந்து சுயஸ் கால்வாயை ஊடுருவியதை விமர்சித்தார். சந்தேகமும் நம்பிக்கையின்மையும் இருந்தும் இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையில் குளிர்ந்த உறவைக் கண்டு சந்தேகம ஏற்பட்டதால் சோவியத் யூனியனை ஆதரிக்க வேண்டியதாயிற்று. இங்கிலாந்து மற்றும் உலக வங்கியின் நடுநிலையால் நேரு இண்டஸ் வாட்டர் ட்ரீட் இல் 1960 பாகிஸ்தானி ஆட்சியாளர் ஆயுப் கானுடன் கையெழுத்திட்டார். இது பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள முக்கிய நதிகளின் வளங்களை பங்கு போட்டுக்கொள்வதில் நடந்த நீண்ட நாள் வழக்குகளை தீர்ப்பதற்காக கையெழுத்திடப்பட்டது.

இறுதி வருடங்கள்
தேர்தலில் நேரு காங்கிரசை மிகப் பெரிய வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார். ஆனாலும் அவருடைய அரசு நிறைய பிரச்சனைகளையும் மற்றும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு ராஜினாமா செய்ய நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார்.1957 இல் மகள் இந்திரா காங்கிரஸ் தலைவரானது அதிக விமரிசனங்கள் எழுந்தன.நேரு அந்தத் தேர்தலை ஒத்துக் கொள்ளாவிட்டாலும்,ஏனெனில் அதை ஒரு முடியாட்சி [மேற்கோள் தேவை]போல் கருதி அவர் முற்றிலும் ஜனநாயகத்துக்குப் புறம்பானது மற்றும் விரும்பத்தகாதது "என்று கூறி தன கட்சியில் இந்திராவின் பதவியை மறுத்தார். [15]இந்திராவே கொள்கை விஷயத்தில் தன் தந்தையுடன் மிகுந்த கசப்புணர்வுடன் இருந்தார், குறிப்பாக தன் தந்தையின்,காங்கிரஸ் காரிய கமிட்டிகேரளாஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிநேரு கண்டித்தும் நீக்கிவிட்டார் [15]. நேரு தொடர்ந்து மகளின்,பாராளுமன்றப் பழமையை மதிக்காதது மற்றும் தூக்கி எறிவது போல் நடப்பது போன்றவற்றால் தர்மசங்கடத்திற்கு உள்ளானார்,மற்றும் தன தந்தையின் பெயரால்இல்லாமல் தன சொந்த அடையாளத்துடன் இருக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டது மிகுந்த மனவருத்தத்தை /காயத்தை ஏற்ப்படுத்தியது

திபத்தின் மீதான 1954 சைனோ -இந்திய ட்ரீட்டியில் பஞ்சசீலக் கொள்கைகள் அடிப்படையாக இருந்தாலும்,பின்னர் நேருவின் அயல்நாட்டுப் பாலிசி எல்லைச்சண்டயினால் மற்றும் தலை லாமாவுக்கு அடைக்கலம் தர முடிவு செய்து அனுமதி அளித்தது இவையெல்லாம் சீனாவின் எதிர்ப்ப்பை அதிகப்படுதியதால் சிரமப்பட்டது. பல வருடங்கள் தொடர்ந்து பேரம் பேசியும் தோல்வியடைந்ததால், நேரு 1961 இல் போர்ச்சுகல்லில் இருந்து கோவாவை இணைத்துக் கொள்ள இந்திய ராணுவத்திற்கு அனுமதியளித்தார். கோவா விடுதலையைப் பார்க்கவும் இதன் மூலம் அவரது புகழ் அதிகரித்தாலும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்கு கண்டணங்களும் அதிகரித்தன.


நேரு 1962 இல் நடந்த தேர்தலில் குறைந்த ஆதரவுடன் காங்கிரசை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்எதிர்க்கட்சிகளான, இடது சாரி பாரதிய ஜன சங்கம், சுதந்திரா கட்சி சமூகவாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவைகள் நன்கு பரிமளித்தன.


ஒரு சில மாதங்களில் சீனா உடனான எல்லைத் தகராறு,வெளிப்படையான சண்டையானது.முன்னாள் இம்பீரியலிசத்தினால் பாதிக்கப் பட்டவைகள் ஆதலால் சொலவடையாக" ஹிந்தி - சீனி பாயி பாயி" என்று கூறப்பட்டதுபோல் இருவரும் ஒரு உறுதித்தன்மையைப் பங்கிட்டுக் கொண்டதாக நேரு ஊகித்தார்.வளரும் நாடுகளுக்கு மத்தயில் சகோதரத்துவம் மற்றும் உறுதித்தன்மை போன்ற நல்ல நெறிகளுக்கு தன்னை அர்ப்பணித்தார். நேரு, ஒரு சோசியலிச நாடு தன்னைப் போன்ற இன்னொரு நாட்டைத் தாக்கும் என்பதை நம்பவில்லை.மற்றும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவர், உடைக்கமுடியாத பனிபடர்ந்த இமாலயச் சுவருக்குப் பின்னால் பாதுகாப்பாக உணர்ந்தார்.இந்த இரண்டும்,சீனாவின் உள்நோக்கங்களையும்,மற்றும் ராணுவ சக்தியையும் நேரு மிகத் தவறாகக் கணக்கிட்டதை நிரூபித்தன.பின் வரும் அறிக்கைகள் சீன சண்டையிட்ட இடங்களை ஆக்கிரமித்து விடக்கூடாது என்ற நேருவின் எண்ணத்தை -சுருக்கமாக, நினைவில் நிற்கக் கூடிய ஒரு வரியில் தெரிவிக்கின்றன அது, ராணுவத்திடம் "அவர்களை வெளியே தூக்கி எறியுங்கள்" என்று கூறியதுதான். சீனா அதிரடியாகத் தன் தாக்குதலைத் தொடங்கியது. [17]

சில நாட்களில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் சீனா ஊடுருவி இந்திய ராணுவத்தின் பலகீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி, சீன சக்திகள் அஸ்ஸாம் வரை சென்று விட்டன. அவருடைய அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அதிக அளவில் விமரிசிக்கப்பட்டது. இதனால் நிர்பந்தத்தின் பேரில் பாதுகாப்பு அமைச்சரான கிருஷ்ண மேனனைப் பதவியில் இருந்து நீக்கி, அமெரிக்க ராணுவ உதவியை நாடினார். 1953 முழவதும் தொடர்ந்து ஒரேமாதிரியாக நேருவின் ஆரோக்கியம், குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.சில வரலாற்றாளர்கள் இதை சீன ஊடுருவலில் இருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாக கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார்.[18] 1964 இல் காஷ்மீரில் இருந்து திரும்பியதும் நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, 27 மே அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அவர் பூத உடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.டில்லித் தெருக்களில் இருந்தும்,மயானத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கண்டு மௌன அஞ்சலி செலுத்தியது. '

சட்டமயமாக்கல்

இந்தியாவின் முதல் பிரதமமந்திரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக நேரு, மிக சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். கிராமத்தின் மூலை முடுக்குகளில் இருந்த குழந்தைகளை அகில உலக ஆரம்பக் கல்வி சென்றடைய அவர் உருவாகிய முறையால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். நேருவின் கல்வித்த் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்விநிறுவனங்கள் உருவாகி வளர்ச்சியடையக் காரணமானதால் பாராட்டுப் பெற்றது. அத்தகைய நிறுவனங்கள்,,அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்[19]அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்,[20] அகில இந்திய நிர்வாகக் கல்வி நிலையம் ஆகியவை.


இந்தியப் பாரம்பரிய மக்கள் கூட்டத்திற்கு,சிறுபான்மை மக்கள்,பெண்கள்,பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர்,மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட ஆதிவாசிகள் ஆகியோருக்கு சரிசமமான சந்தர்ப்பங்கள் மற்றும் உரிமைகள் கிடைக்க, விரிந்த கண்ணோட்டத்தில் பாதுப்பு நடவடிக்கைகள் ஏற்ப்படுத்தியதர்க்காக பெருமைப் படுத்தப்பட்டார். [21][22]. பெண்கள் மற்றும் தாழ்ந்த பிரிவைச்,[23] சேர்ந்தவர்களுக்கு எதிராக வேறுபட்டு நடந்து கொள்வது, போன்ற வற்றிற்கு முடிவு கட்டும் வகையில் மாநில அரசுகளை கடுமையாக உழைக்கத் தூண்டி மிகவும் அக்கறை காட்டினார்.அவர் வாழ்நாளில் இதில் மிகக் குறைந்த வெற்றியே பெற்றார். .


பிராந்திய வேறுபாடுகளை பாராட்டினாலும் நேருவின் தோல்வியடையாத தேசியவாத உறுதி இருப்பினும் இந்தியர்களுக்கு இடையில் ஒற்றுமையை உறுதி படுத்தக்கூடிய திட்டங்களை வகுத்தார். இங்கிலாந்து விலகிச் சென்ற பின் சுதந்திரத்திற்கு முன்னாள் இருந்த வேறுபாடுகள் தலைதூக்கின, பொதுக் குழுவின் கீழ் பிராந்தியத் தலைவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக கூற விரும்பவில்லை என்பதை முக்கியமாக குறிப்பிட்டு நிரூபித்தது. மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் மொழி இரண்டும் புதிய தேசத்தின் ஒற்றுமைக்கு மிரட்டலாக இருந்த நேரத்தில் நேரு, தேசிய புத்தக ஸ்தாபனம் மற்றும் தேசிய நூலக அகடமி உருவாக்கி மொழிகளுக்கு இடையே பிராந்திய இலக்கியங்களை மொழி மாற்றம் செய்யும் திட்டம்,மற்றும் ஒரு ராஜ்யத்தில் இருந்து பொருள்களை வேறு ராஜ்யங்களுக்கு மாற்றல் செய்வது ஆகிய திட்டங்களை வகுத்து ஒரே ஐக்கிய இந்தியாவாக வளர்க்க நினைத்தார்.நேரு, "ஒன்று சேர் அல்லது அழி "என்று எச்சரித்தார்

ஞாபகார்த்தம்

அவருடைய வாழ்நாளில் நேரு இந்தியாவில் நல்ல தகுதியை அனுபவித்தார் மற்றும் உலகம் முழவதும் அனைவராலும்அவருடைய நல்ல நெறிகளுக்காகவும், உயர்ந்த மனித பண்புக்காகவும் புகழப்பட்டார்.அவரின் பிறந்தநாள்,14 நவம்பர் இந்திய முழுவதும்" குழந்தைகள் தினமாக " கொண்டாடப்படுகிறது.அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம்,கல்வி, மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தியக் குழந்தைகள் அவரை "சாச்சா நேரு ' (மாமா நேரு)என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் புகழ் பெற்ற அடையாளமாக அவருடைய நினைவை அடிக்கடி கொண்டாடுகிறது. காங்கிரஸ் தலைவர்களும் மற்றவர்கள் பலரும் அவருடைய ஆடைகள் அணியும் முறையை குறிப்பாக "காந்தி குல்லாவை " விருப்பமாக அணியத்துவங்கினர்.நேருவின் திட்டங்களும் மற்றும் கொள்கைகளும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் மற்றும் முக்கிய அரசியல் தத்துவங்களையும் வடிவமைத்தது.அவருடைய உணர்ச்சிமயமான பந்தம் பின்னாளில் அவர் மகள் இந்திரா, தேசிய அரசாங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகக் கருவியாய் செயல்பட்டது.


நேருவின் வாழ்க்கையைப் பற்றி நிறையக் குறும் படங்கள் எடுக்கப்பட்டன.அவர் கதை வடிவமைக்கப்பத்த படங்களிலும் இடம் பெற்றார்.,ரோஷன் சேத்ரிச்சர்ட் அட்டன்போர்க்காந்தி சியாம் பெனகளின் 1988 தொலைக் காட்சித் தொடரான 'பாரத் ஏக கோஜ் ', இந்தியாவின் கண்டுபிடிப்பு' என்ற அவரது நூலைத் தழுவியது.மற்றும் 2007 இல ராஜின் இறுதி நாட்கள் [25] என்ற தொலைக் காட்சி படம், கேட்டன் மேத்தாவின் சர்தார்' ' திரைப்படம், இதில் பெஞ்சமின் கிலானி நேருவாக நடித்தார். நேருவின் சொந்த விருப்பமான ஷெர்வானி அணிவது வட இந்தியாவில் இன்றும் ஒரு விழா உடையாக, சீருடையாகக் கருதப்படுகிறது.அதோடல்லாமல்,அவருடைய தனி உடை அலங்காரத்திர்க்காக ஒரு வகைக் குல்லா மற்றும் நேரு ஜாக்கெட் அவர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் நிறையப் பொதுநிறுவனங்கள் மற்றும் நினைவகங்கள் நேருவின் நினைவிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. மும்பை நகரத்தின் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் ஒரு நவீன துறைமுகம்.மற்றும் அது மிகப்பெரிய பளு மற்றும் சாமான்களை கையாளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டில்லியில் நேருவின் வசிப்பிடம், நேரு நினைவுக் கூடம் மற்றும் நூலகமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. நேரு குடும்பத்தாரின் ஆனந்த பவன் மற்றும் சுராஜ் பவன் ஆகியவைகளும் நேரு மற்றும் அவர் குடும்பத்தாரின் சட்டபூர்வமான நினைவகமாக இருக்கிறது. அமெரிக்க நண்பர்கள் சேவை சங்கம் அவரை நோபல் அமைதிப் பரிசுக்காக 1951 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக