அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு

*****************

குடிபொருந்தி வாழ்ந்து கூடி இருந்திடுங்கோ
நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிகச் செய்திடுங்கோ
இல்லறத்தை விட்டுதவம் இல்லைகான்
அமர்ந்து நீ போனால் அதிகபலன் உண்டாகும்சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும்
பொய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே
மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே

 
எப்போதும் கொண்டை அழுது உண்டு குவிந்துயிரு என்மகனேஉனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே
எனக்கேற்க நிற்ப்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான்

குவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே
பராக்கிரமம் காட்டாதே ஆக்கிரமம் எல்லாம் அடக்கியிரு என்மகனே
வாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதேஏந்து நீ தர்மம் இடறு நினையாதே

நில்லு நினைவில் நீ சரித்துக்கொடு என்மகனேஎளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
 

வலியோரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்

அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே


நன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே
அண்டின பேரை அகற்ற நினையாதே

 பசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே 
எளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு
 நாடாள்வாய் என்மகனே பதறியிரு என்மகனே 

சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே 
காணிக்கை வேண்டாதுங்கே கைக்கூலி கேளாதுங்கோ
 பூஜைஏராதுங்கோ பலிதீபம் ஏடராதுங்கோ 
விழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ 
தீபாராதனைக் காணாதுங்கோ திரு நாளைப் பாராதுங்கோ
----------------------

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக