காந்தியின் பொன்மொழிகள் & பிரார்த்தனை

1.சோர்வை அகற்றும் பிரார்த்தனை

* என் உயிரையே காப்பாற்றி வந்திருப்பது
பிரார்த்தனைதான். பிரார்த்தனையின்றேல், நீண்டகாலத்திற்கு
முன்பே எனக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டுமென பொது
வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகக் கசப்பான
அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன என்பதை என் சுயசரிதையிலிருந்து
நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவை எனக்குத் தற்காலிகமாக மனச்
சோர்வை உண்டாக்கின. எனினும் நான் அந்தச் சோர்வை அகற்றும்
ஆற்றல் பெற்றிருந்தேனெனில் அதற்குக் காரணம் பிரார்த்தனை
தான்.

* சத்தியம், எனது வாழ்க்கையின் ஓர் அம்சமாகவே இருந்து
வந்திருக்கிறது. ஆனால், பிரார்த்தனை அவ்விதம் இல்லை.
அவசியம் காரணமாகவே என் வாழ்க்கையில் பிரார்த்தனைக்கு இடம்
ஏற்பட்டது. பிரார்த்தனை இன்றேல், நான் மன நிறைவுடன் இருக்க
முடியாது என்ற நிலை ஏற்பட்டதே அதற்குக் காரணமாகும்.

* நான் பிரார்த்தனையிலும் நம்பிக்கையின்றியே
வாழ்க்கையைத் தொடங்கினேன். இளம்பருவத்தில் இதனால் சூன்ய
நிலை எதுவும் தோன்றவில்லை. ஆனால், வாழ்க்கையின்
பிற்பகுதியில் உடலுக்குணவு எவ்வளவு அவசியமோ அவ்வளவு
ஆன்மாவுக்குப் பிரார்த்தனை அவசியம் என்பதை உணர்ந்தேன்.

* உண்மையில் பிரார்த்தனை ஆன்மாவுக்கு எவ்வளவு
இன்றியமையாததோ அந்தளவுக்கு உடலுக்கு உணவு அவசியமில்லை.
ஏனெனில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு அடிக்கடி
பட்டினி கிடக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால்,
‘பிரார்த்தனை பட்டினி’ என்ற எதுவும் இல்லை. உணவு
மிதமிஞ்சிப் போவதைப் போல, பிரார்த்தனையில் மிதமிஞ்சுவது
என்பதற்கே இடமில்லை

2.கீதையை படியுங்கள் மாணவர்களே!

கீதையின் 18 அத்தியாயங்களையும் படித்து ஆராய்ச்சி
செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், முதல் மூன்று
அத்தியாயங்களையாவது கவனமாக படியுங்கள். இந்த மூன்று
அத்தியாயங்களிலிருந்து சில ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்துக்
கொள்வதின் மூலம் அந்த அத்தியாயங்களின் சாரத்தை தெரிந்து
கொள்ளலாம். கீதையின் மூன்று இடங்களில், எல்லா
கொள்கைகளையும் விட்டுவிட்டு இறைவனையே சரணம் அடைந்துவிட
வேண்டும் என்று உபதேசிக்கப்பட்டிருக்கிறது.

கீதை எல்லோருக்கும் அன்னை. அவள் யாரையும் பிடித்து
வெளியே தள்ளுவதில்லை. கதவைத் தட்டுவோருக்கு அவள் அன்புடன்
கதவை திறந்து அடைக்கலம் அளிக்கிறாள். கீதையை உண்மையாக
படிப்பவன் ஏமாற்றம் என்பதை அறியான். அறிவுக்கே எட்டாத
ஆனந்தமும், சாந்தியும் அந்த பக்தனுக்கு ஏற்படுகிறது.
எனினும் அத்தகைய சாந்தியும், ஆனந்தமும் சந்தேகவாதிக்கோ
அல்லது அறிவையும் புலமையையும் குறித்து இறுமாப்பு
அடைபவனுக்கோ ஏற்படுவதில்லை. பணிவுள்ளவனுக்கும், மனதை
சிதறவிடாமல் முழு நம்பிக்கையுடன் கீதை அன்னையை
வணங்குபவனுக்கும்தான் அத்தகைய அமைதியும், ஆனந்தமும்
உண்டாகின்றன.

விடியற்காலம் கீதை பாராயணத்துடன் ஒவ்வொரு நாளும்
அலுவல்களை ஆரம்பிக்க வேண்டுமென நான் மாணவர்களுக்கு ஆலோசனை
கூறுகிறேன். நான் துளசிதாசரிடம் மிக்க அன்பும் பக்தியும்
கொண்டவன். வேதனையில் ஆழ்ந்துள்ள உலகத்திற்கு ராமநாம
மந்திரமாகிய சிறந்த மருந்தை கொடுத்த அந்த அண்ணலை நான்
போற்றி வணங்குகிறேன். நீங்கள் கீதையை படிக்கவும் ஆராய்ச்சி
செய்யவும் முற்பட வேண்டும். அதைப்படித்தால் உங்களது
ஒவ்வொரு விருப்பத்தையும் அது நிறைவேற்றும்.

3.உண்மையான பக்தன் யார்?

ஒரு பக்தன் யார் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது
இரக்கமே உருவானவனாக இருக்கவேண்டும்
அவன் இறுமாப்பும் தன்னலமற்ற்வனுமாக
இருக்கவேண்டும்
குளிரையும்,வெப்பத்தையும்,சுகத்தையும்,
துக்கத்தையும் சமமாக கருதவேண்டும்
எப்போதும் மன்னிக்கும் சுபாவம்
உள்ளவனாக இருக்கவேண்டும்
போதுமென்ற மனம் கொண்டவனாக இருக்கவேண்டும்
தான் செய்யும் தீர்மானங்களை உறுதியுடன்
செயல் படுத்துபவனாக இருக்கவேண்டும்
தன்னையே கடவுளிடம் அர்ப்பணம்
செய்தவனாக இருக்கவேண்டும்
அவனால் யாருக்கும் பயம் ஏற்படக்கூடாது
அவனும் எவரையும் கண்டு அஞ்சக்கூடாது
மகிழ்ச்சி,துயரம், பயம் ஆகியவற்றிலிருந்து
அவன் விடுபட்டவனாக இருக்கவேண்டும்
அவன் தூய்மையானவனாகவும் , நற்பணிகளை
செய்யும் திறம் பெற்றவனாகவும்
இருக்கவேண்டும்
அதே சமயம் அப்பணிகளின் மூலம் ஏற்படக்கூடிய
பலாபலன்களை பொருட்படுத்தக்கூடாது நற்பலனையோ
அல்லது தீயபலனையோ அவன் துறந்துவிடவேண்டும்
நண்பனையும் விரோதியையும் அவன் சமமாக கருதவேண்டும்
தனக்கு பிறர் மரியாதை செய்தாலும் அவமரியாதை
செய்தாலும் ,தன்னை பிறர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும்
அவன் எல்லாவறையும் சமமாக கருதவேண்டும்
அவன் மௌனத்தையும், தனிமையையும் விரும்பவேண்டும்
ஒழுங்கான உறுதியான அறிவு படைத்தவனாக இருக்கவேண்டும்
இத்தனை லட்சணங்கள் உள்ளவன்தான் உண்மையான பக்தனாவான்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக