1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்
2) பரலோகத்தில் விருப்புடன் நட்புப் பாராட்டுதல்
3)அறவழியில் பொருளை ஈட்டுதல்
4)அறம் பொருள்கட்கு அழிவின்றி இன்பத்தைப் பெறுதல்
5)யாருடனும் அன்புடன் பேசுதல்
6)நல்லவர் அல்லாதார்க்குத் தராத கொடையாளியாக இருத்தல்
7)தற்புகழ்ச்சியின்றி இருத்தல்
8)கருணையுடன் இருத்தல்
9)கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்
10)பகைவன் எனத் தீர்மானித்துப் போரிடல்
11)நற்குணம் அற்றவரிடம் தூதர்களைச் சேராது இருத்தல்
12)பிறர்க்குத் துன்பம் தராது பணி புரிதல்
13)சான்றோரிடம் பயனை அறிவித்தல்
14)பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்
15)துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்
16)தக்காரைச் சார்ந்திருத்தல்
17)நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்
18)ரகசியத்தை வெளியிடாதிருத்தல்
19)உலோபிகள் அல்லாதார்க்குக் கொடுத்தல்
20)தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்
21)அருவருப்படையாமல் மனைவியைக் காத்தல்
22)தூய்மையுடன் இருத்தல்
23)பல பெண்களுடன் சேராதிருத்தல்
24)நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்
25)வழிபடத் தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்
26)வஞ்சனையின்றிப் பெரியோர்க்குப் பணிவிடை செய்தல்
27)அடம்பரமின்றித் தெய்வ பூஜை செய்தல்
28)பழிக்கு இடமில்லாப் பொருளை விரும்புதல்
29)பணிவுடன் பணி புரிதல்
30)காலம் அறிந்து செயல் படுவதில் வல்லவனாய் இருத்தல்
31)பயனுள்ளவற்றையே பேசுதல்
32)தடை சொல்லாது உதவி புரிதல்
33)குற்றத்திற்கேற்பத் தண்டித்தல்
34)பகைவரைக் கொன்றபின் வருந்தாதிருத்தல்
35)காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்
36)தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை
ஆகியவையாகும்..
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக