கட்டுரை ஒன்றில் வயதானவரகளுக்கு சில அறிவுரைகள்

ஜோனாதன் ஸ்விப்ட் என்பவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான ஆங்கில எழுத்தாளர்.

கட்டுரை ஒன்றில் அவர் வயதானவரகளுக்கு சில அறிவுரைகள் கூறியிருக்கிறார்.

1. கடுகடுப்பாகவோ, வருத்தம் உள்ளவர்களாகவோ, சந்தேகப்படுகிறவர்களாகவோ இருக்க வேண்டாம்.

2. சிறுவர்கள் விரும்பினால் ஒழிய அவர்களுடைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்.

3. அப்போதைக்கப்போது ஜனங்களிடம் தோன்றும்
நவீன முறைகளையும், நடத்தைகளையும் பற்றி ஏளனம் செய்ய வேண்டாம்.

4. ஒரே நிகழ்ச்சியை அதே நபர்களிடத்தில் அடிக்கடி சொல்ல வேண்டாம்

5. பிறர் பொருளை விரும்ப வேண்டாம்

6. உடம்பையும், உடைமையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள மறக்க
வேண்டாம். அவை சுத்தமாக இல்லாவிட்டால் பிறருக்கு உங்கள் மீது வெறுப்பும் அலட்சியமும் ஏற்படும்

7. இளைஞர்களின் நடத்தைகளை அதிகமாகக் கண்டிக்க வேண்டாம்.
அவர்களால் அந்த வயசில் பிழைகள் செய்யாமல் இருக்க முடியாது.

8. பிறருடைய சமாச்சாரங்களை அவர்களுடைய வேலைக்காரர்கள் மூலம் கேட்டுத் தப்பான
அபிப்பிராயம் கொள்ள வேண்டாம்.

9. பிறர் கேட்டால் ஒழிய அவர்களுக்குப் புத்திமதிகள் சொல்ல வேண்டாம்.

கீழே உள்ள இரண்டும் அடியவன் மனதில் தோன்றி நானாகச் சேர்த்துக் கொண்டது.

10. எங்க காலத்தில் அப்படி இருந்தது என்று வேண்டாத பழங்கதைகள் கூற வேண்டாம்.

11. அரசனாக இருந்தால் கண்ணை மூடிக்க் கொள்ள வேண்டும், வேலைக்காரனாக இருந்தால்
காதை மூடிக்கொள்ள வேண்டும். வயதானால் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்

வயதானவர்கள் முடிந்தவரை இந்த அறிவுரைகளைக்
கடைப்பிடித்தால்,முதுமை என்பது சுகமே !
----------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
அ.இராமநாதன்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக