அழகுக்கு அடி‌ப்படை ஆரோ‌க்‌கிய‌ம்தா‌ன்

ஒருவர் அழகாக இருக்கிறார் என்றால் அது அவர் செய்யும் அலங்காரத்தைப் பொருத்ததா? அல்லது அவரது உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்ததா?இப்படி கேட்டால் பெரும்பாலானவர்கள் கூறுவது ஆரோக்கியமாகத்தான் இருக்கும்.
சரி,..
நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா என்ன சொல்கிறார் என்று கேட்போம்.

நிச்சயமாக உடல் ஆரோக்கியம் அவசியம். நாம் என்னதான் அழகாக்கிக் கொண்டாலும், நமது உடல் சோர்வாகவோ, நோய் வாய்ப்பட்டு இருந்தால் நம்மால் எப்படி அழகாகத் தோன்ற முடியும்.
முதலில் நாம் போடும் மேக்கப்பை ஏற்றுக் கொள்ள நமது சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் போடும் மேக்கப் சரியாக இருக்கும்.வீட்டிலிருக்கும் போது சருமத்தைக் காக்க மாஸ்சுரைஸிங் க்ரீம்கள் போட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்தாலே பருக்கள் வராது. எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமது சருமம் பொலிவாக இருக்கும்.பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். பழங்களை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறியாமல் அதன் தோலை மசித்து முகத்திற்கு போட்டால் அதுவும் ஒரு நல்ல பலனைத் தரும். இதற்கு 10 நிமிடம் போதும். வீட்டிலிருக்கும் போது பச்சரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு போன்று எதையாவது ஒரு பத்து நிமிடம் போட்டால் போதும், நமது சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.இதனை ஒரு நாள் போட்டுவிட்டால் போதாது, தொடர்ந்து போட வேண்டியது தான் மிகவும் முக்கியம்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக