என்னை பற்றி என் நண்பன் எழுதியது ....


என்னல, என்னமோ ஆன்மீகத்துல நான் பெரிய புடிங்கி, .......... கரச்சி குடிசிடேனு சொன்ன. இது தான் நீ ....... புரிஞ்சி கிட்ட விதமா? தனி ஒரு மனுசன தாக்கி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு? அந்த மெயில் அனுபுரதுனால உனக்கு என்ன கிடைசிட போகுது? உன்ன மாதிரி விஜய் பிடிக்காதவன் நல்லா இருக்குடா னு சொல்லுவான். எல்லாரும் உன்ன மாதிரி தான் யோசிப்பங்கனு நீ எப்படி நினைக்குற? உனக்கு பிடிக்காத ஒன்னு அடுத்தவங்களுக்கும் பிடிக்க கூடாதுன்னு நீ எப்படி நினைக்கலாம்? அப்படி நினைக்க உனக்கு என்ன உரிமை இருக்கு?
நீ இன்னும் பதின்ம வயசு பசங்க மாதிரி தான் இருக்கனு நான் சொன்னா நீ ஏத்துக்குவியா? இந்த விசியத்துல சின்ன பசங்களுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லன்னு தான் நான் உன்ன புரிஞ்சிடுருகேன்.
யாரையும் விமர்சனம் பண்ண உரிமை இருக்கலாம்.. ஆனா அதிலயும் ஒரு தர்மம் இருக்கு.
ஒரு எடுத்துகாட்டுக்கு சொல்லுறேன். கருணாநிதி ஜெயலலிதா வின் அந்தரங்க விசியம் பற்றியோ அல்லது ஜெயலலிதா கருணாநிதியோட அந்தரங்கம் பற்றியோ பேசினதா நீ கேள்வி பட்டதுண்டா? அப்படி பேசினா அது அரசியல் தர்மம் இல்லை. அதனால அப்படி பேச மாட்டாங்க.
அதே மாதிரி உனக்கு விஜய் நடிப்பு பிடிகலான நீ அவன் நடிப்பு பற்றி விமர்சனம் பண்ணு. நானும் உன்கூட சேந்து ரசிக்குறேன். அவனோட அரசியல் பிரவேசம் பிடிகலான அத பற்றி விமர்சனம் பண்ணு. குறைந்த பட்சம் உனக்கு எது பிடிக்கலியோ அத பற்றி மட்டும் விமர்சனம் பண்ணு. அத விட்டுட்டு........ இதெல்லாம் படிச்சவன் பண்ண மாட்டான். இன்னொரு விசியம். விஜய் பிடிகலான கண்டிப்பா உனக்கு அஜித் பிடிச்சிருக்கனும். சாதாரண பிடித்தம் இல்லை. உயிர் கொடுக்குற அளவுக்கு நீ அவன நேசிக்கணும். அதனால தான் நீ விஜய் பற்றி இப்படி கடுப்பாகுற. (2 நிமிடம் யோசித்து பார்த்தால் உனக்கும் புரியும்)
இப்போ கூட நான் யோசிக்குறேன். நான் ஏன் உனக்கு இதெல்லாம் சொல்லணும்? எனக்கு என்ன உரிமை இருக்குனு... இது உன்கிட்ட எனக்கு பிடிக்காத விசியம். அதான் உன்ன இப்படி விமர்சனம் பண்ணிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்
ஜெ

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக