எல்லா நோய்க்கும் மருந்து - விவேகானந்தர்

எல்லா நோய்க்கும் மருந்து




* தேவர்களையும் விட மனிதனே உயர்ந்தவனாவான். மனிதனை விட உயர்ந்தவர்கள் யாருமில் லை. தேவரும் கீழே வந்து மனிதவுடல் வாயிலாகவே முக்தி பெற வேண்டி யுள்ளது. எனவே, மனிதவுயிர் மகத் தானது.



* பலமின்மையே துயரத்திற்குரிய ஒரே காரணம். நம்மிடம் பொய்யும், களவும், கொலையும் பல்வேறு பாவச்செயல் களும் இருப்பதற்குக் காரணம் பலவீனம் தான். பலவீனம் தான் நம்மைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது.



* பலமே வாழ்வு. பலம் தான் இன்பமான வாழ்விற்கு வழிவகுக்கிறது. அழிவில்லாத பேரின்ப பாதைக்கு அழைத்துச் செல்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆக்கமும், பலமும், நன்மையும் தரும் எண்ணங்கள் நம் மூளைக்குள் புகட்டும்.



* அச்சமே நம் உண்மை இயல்பை அறியவிடாமல் அறியாமைக்குள் தள்ளிவிடுகிறது. அச்சத்தை அடியோடு விட்டொழித்து எழுந்து நில்லுங்கள். தைரியமாய் இருங்கள். பலமுடையவர்களாகுங்கள்.



* உலகில் உள்ள எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து பலம் மட்டுமே. எப்போதெல்லாம் கொடுமைகளுக்கு உட்படுகிறாமோ, அப்போதெல்லாம் மனபலம் நமக்கு அதிகம் தேவைப்படும்.



- விவேகானந்தர்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக