நான் எதையும் சாதிக்க வல்லவன் - விவேகானந்தர்





நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று கூறு. நீ உறுதியுடன் இருந்தால் கொடிய விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
* நீ வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவன் ஆவாய்.
* மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவாற்றல் வளரும். சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காத்து விடுதலை பெறச் செய்யும்.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கின்றன. உனது மனம், இதயம், ஆன்மா என்ற மூன்றினையும் அர்ப் பணித்து செய்யும் செயல்கள் நிச்சயம் வெற்றி பெறும்.
* மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண் டவன் உன்னைப் படைத்திருக்கிறான். அந்தச் செயல் களைச் செய்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். வலிமை உடையவன் நீ என்று நினைத்தால் வலிமை உடையவனாகி விடுவாய்.
* ஒரு நல்ல லட்சியத்தைத் தேர்ந்தெடுத்து முறையான வழியைக் கைக்கொண்டு வெற்றி வீரனாக விளங்கு. நீ வாழ்ந்து முடிந்த பின் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக